செய்திகள் :

சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை! சிறு-குறு நிறுவனங்கள் வீழ்ச்சி!

post image

இந்திய பங்குச் சந்தை வணிகம் இன்று (பிப். 11) சரிவுடன் தொடங்கியது. சென்செக்ஸ் 47 புள்ளிகள் சரிவுடனும் நிஃப்டி 30 புள்ளிகள் சரிவுடனும் வணிகம் ஆரம்பமானது.

கடந்த நான்கு நாள்களாகத் தொடர்ந்து பங்குச் சந்தை சரிவுடன் முடிந்த நிலையில், இன்றைய தொடக்கமும் சரிவுடன் காணப்பட்டது.

காலை 10 மணி நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 121 புள்ளிகள் சரிந்து 77,199.42 புள்ளிகளாக வணிகம் நடைபெற்று வருகிறது. மொத்த வணிகத்தில் இது 0.14 சதவீதம் சரிவாகும்.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 35.35 புள்ளிகள் சரிந்து 23,346.25 புள்ளிகளாக வணிகம் நடைபெற்று வருகிறது. இது மொத்த வணிகத்தில் 0.19 சதவீதம் சரிவாகும்.

சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 தரப் பங்குகளில் 8 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே உயர்வுடன் வணிகமாகி வருகிறது. எஞ்சிய 22 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்படுகின்றன.

சிறு - குறு நிறுவனங்கள் அதிகபட்சமாக 1% வரை சரிந்தன.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிம்ரப்பின் வரி விதிப்பு எதிரொலியால் இந்திய பங்குச் சந்தைகள் நிலையற்ற தன்மையில் நீடித்து வருகின்றன. வெளிநாட்டு முதலீட்டாளர்களிடையே நிலவும் நிச்சயமற்ற தன்மையால் நிதி வெளியேற்றம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

நேற்றைய வணிக நேர முடிவில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ரூ. 2,464 கோடி நிகர விற்பனையை பதிவு செய்தனர். உள்ளூர் முதலீட்டாளர்கள் ரூ. 1515 கோடி நிகர விற்பனையை பதிவு செய்தனர்.

இதன் விளைவாக தங்கம் விலையும் வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது. உலகின் அனைத்து நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்படும் இரும்பு மற்றும் அலுமினியத்துக்கு கூடுதலாக 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அதிபா் டிரம்ப் அறிவித்துள்ளதால், முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டவில்லை என் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

1000 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ், நிஃப்டி 1.4% வீழ்ச்சி!

இந்திய பங்குச் சந்தை வணிகத்தில் சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. நிஃப்டி 23,100 புள்ளிகளுக்கு கீழ் சரிந்தது. வணிக நேரத் தொடக்கத்தில் சரிவுடன் தொடங்கிய வணிகம் பிற்பாதியில் கடும் சரிவை எட்... மேலும் பார்க்க

இந்திய ஸ்மார்ட்போன் சந்தை 4% உயர்வு!

2024-ல் இந்திய ஸ்மார்ட்போன்களுக்கான சந்தை 4 சதவீதம் வரை வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 15 கோடிக்கும் அதிகமான ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா... மேலும் பார்க்க

சேவைகள் துறையில் 2 ஆண்டுகள் காணாத மந்தம்

புது தில்லி: இந்திய சேவைகள் துறை கடந்த ஜனவரி மாதம் முந்தைய இரண்டு ஆண்டுகள் காணாத குறைவான வளா்ச்சியைக் கண்டுள்ளது.இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான ‘ஹெச்எஸ்பிசி இந்தியா’ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் த... மேலும் பார்க்க

பாட்டா இந்தியா லாபம் 1.2% உயர்வு!

புதுதில்லி: முன்னணி ஷூ தயாரிப்பு நிறுவனமான, பாட்டா இந்தியா லிமிடெட், டிசம்பர் 2024 உடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில், அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 1.2 சதவிகிதம் அதிகரித்து ரூ.58.7 கோடி ஆக உள்ளது.கட... மேலும் பார்க்க

26% உயர்ந்த ஆக்ஷன் கன்ஸ்ட்ரக்ஷன் எக்யூப்மென்ட் நிறுவனத்தின் லாபம்!

புதுதில்லி: ஆக்ஷன் கன்ஸ்ட்ரக்ஷன் எக்யூப்மென்ட் லிமிடெட் நிறுவனத்தின் வரிக்கு பிந்தைய லாபமாக, அதாவது டிசம்பர் காலாண்டு 26 சதவிகிதம் வரை அதிகரித்து ரூ.111.68 கோடியாக உள்ளது.இது முந்தைய 2023-24 ஆண்டு, அக... மேலும் பார்க்க

ஐசிஆர்ஏ நிகர லாபம் 30 சதவிகிதம் அதிகரிப்பு!

புதுதில்லி: நடப்பு நிதியாண்டின், டிசம்பர் காலாண்டில், வரிக்கு பிந்தைய லாபமாக ஐசிஆர்ஏ (ICRA) நிறுவனத்தின் லாபம் 30 சதவிகிதம் அதிகரித்து ரூ.42.22 கோடி ஆக உள்ளது.ஒருங்கிணைந்த அடிப்படையில், உள்நாட்டு மதிப... மேலும் பார்க்க