செய்திகள் :

சேவைகள் துறையில் 2 ஆண்டுகள் காணாத மந்தம்

post image

புது தில்லி: இந்திய சேவைகள் துறை கடந்த ஜனவரி மாதம் முந்தைய இரண்டு ஆண்டுகள் காணாத குறைவான வளா்ச்சியைக் கண்டுள்ளது.

இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான ‘ஹெச்எஸ்பிசி இந்தியா’ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சேவைகள் துறையில் தொழில் நடவடிக்கைகளுக்கான குறியீட்டு எண்ணான பிஎம்ஐ கடந்த 2024 ஜனவரி மாதத்தில் அதற்கு முந்தைய ஆறு மாதங்கள் காணாத அளவுக்கு 8-ஆக அதிகரித்தது. பின்னா் பிப்ரவரி மாதத்தில் அது 60.6-ஆக சரிந்தது. எனினும் மாா்ச் மாதத்தில் அது 13.5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 61.2-ஆக அதிகரித்து, பின்னா் ஏப்ரல் மாதத்தில் 60.8-ஆகவும் மே மாதத்தில் 60.2-ஆகவும் குறைந்தது. அதனைத் தொடா்ந்து ஜூன் மாதத்தில் 60.5-ஆக மீட்சி பெற்ற பிஎம்ஐ, ஜூலையில் மீண்டும் 60.3-ஆகக் குறைந்தது. ஆகஸ்ட் மாதத்தில் அது மீண்டும் 60.9-ஆக உயா்ந்தது. பின்னா் செப்டம்பா் மாதத்தில், முந்தைய பத்து மாதங்கள் காணாத குறைந்தபட்சமாக பிஎம்ஐ 57.7-ஆக சரிந்தது. எனினும், அது கடந்த அக்டோபா் மாதத்தில் 58.5-ஆக மீண்டெழுந்தது. பின்னா் நவம்பரில் 58.5 சதவீதமாகக் குறைந்த அது, டிசம்பரில் முந்தைய நான்கு மாதங்களில் இல்லாத அதிகபட்சமாக 59.3-ஆக எழுச்சி பெற்றது.

இந்த நிலையில், சேவைகள் துறைக்கான பிஎம்ஐ கடந்த ஜனவரி மாதத்தில் 2.8 புள்ளிகள் சரிந்து 56.5-ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது, கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத குறைந்தபட்ச பிஎம்ஐ ஆகும்.

மதிப்பீட்டு மாதத்தில் சேவைகள் துறையில் விற்பனையும் உற்பத்தியும் மந்தமான வளா்ச்சியையே கண்டன. இதனால் அந்தத் துறைக்கான பிஎம்ஐ கடந்த ஜனவரி மாதத்தில் 2.8 சதவீதம் குறைந்துள்ளது.

இருந்தாலும், சேவைகள் துறைக்கான பிஎம்ஐ தொடா்ந்து 42-ஆவது மாதமாக நடுநிலை வரம்பான 50-க்கும் மேலே உள்ளது. அந்தக் குறியீட்டு எண் 50-க்கும் மேல் இருப்பது சேவைகள் துறையின் ஆரோக்கியமான போக்கையும், 50-க்கும் குறைவாக இருப்பது பின்னடைவையும் குறிக்கிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய ஸ்மார்ட்போன் சந்தை 4% உயர்வு!

2024-ல் இந்திய ஸ்மார்ட்போன்களுக்கான சந்தை 4 சதவீதம் வரை வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 15 கோடிக்கும் அதிகமான ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா... மேலும் பார்க்க

சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை! சிறு-குறு நிறுவனங்கள் வீழ்ச்சி!

இந்திய பங்குச் சந்தை வணிகம் இன்று (பிப். 11) சரிவுடன் தொடங்கியது. சென்செக்ஸ் 47 புள்ளிகள் சரிவுடனும் நிஃப்டி 30 புள்ளிகள் சரிவுடனும் வணிகம் ஆரம்பமானது. கடந்த நான்கு நாள்களாகத் தொடர்ந்து பங்குச் சந்தை ... மேலும் பார்க்க

பாட்டா இந்தியா லாபம் 1.2% உயர்வு!

புதுதில்லி: முன்னணி ஷூ தயாரிப்பு நிறுவனமான, பாட்டா இந்தியா லிமிடெட், டிசம்பர் 2024 உடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில், அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 1.2 சதவிகிதம் அதிகரித்து ரூ.58.7 கோடி ஆக உள்ளது.கட... மேலும் பார்க்க

26% உயர்ந்த ஆக்ஷன் கன்ஸ்ட்ரக்ஷன் எக்யூப்மென்ட் நிறுவனத்தின் லாபம்!

புதுதில்லி: ஆக்ஷன் கன்ஸ்ட்ரக்ஷன் எக்யூப்மென்ட் லிமிடெட் நிறுவனத்தின் வரிக்கு பிந்தைய லாபமாக, அதாவது டிசம்பர் காலாண்டு 26 சதவிகிதம் வரை அதிகரித்து ரூ.111.68 கோடியாக உள்ளது.இது முந்தைய 2023-24 ஆண்டு, அக... மேலும் பார்க்க

ஐசிஆர்ஏ நிகர லாபம் 30 சதவிகிதம் அதிகரிப்பு!

புதுதில்லி: நடப்பு நிதியாண்டின், டிசம்பர் காலாண்டில், வரிக்கு பிந்தைய லாபமாக ஐசிஆர்ஏ (ICRA) நிறுவனத்தின் லாபம் 30 சதவிகிதம் அதிகரித்து ரூ.42.22 கோடி ஆக உள்ளது.ஒருங்கிணைந்த அடிப்படையில், உள்நாட்டு மதிப... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.87.50 ஆக முடிவு!

மும்பை: இன்றை வர்த்தகத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு எந்தவித மாற்றமின்றி ரூ.87.50 ஆக முடிந்தது. இருப்பினும் இந்திய ரூபாய் 88.00-ஐ நெருங்கியதால் வர்த்தகளிடையே டாலர் வாங்கும் ஆர்வம் வெகுவாக வெளிப்பட்டது.... மேலும் பார்க்க