செய்திகள் :

தினமும் 30 நிமிடங்கள் மட்டுமே தோன்றும் இந்திய தீவு - எங்கே நிகழ்கிறது இந்த அதிசயம்?!

post image

கொங்கண் கடற்கரையோரத்தில் அமைந்திருக்கும் சீகல் தீவு, தினமும் 30 நிமிடங்கள் மட்டுமே தோன்றும் ஒரு தனித்துவ தீவாக அடையாளம் பெற்றுள்ளது.

மகாராஷ்டிராவின் சிந்துதுர்க் மாவட்டத்திலுள்ள தேவ்பாக் கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள சீகல் தீவு, இயற்கை ஆர்வலர்கள், சாகச பிரியர்கள், சுற்றுலா பயணிகள் என அனைவரையும் ஈர்த்து வருகிறது.

இந்த சீகல் தீவு தினமும் 30 நிமிடங்கள் மட்டுமே கடலில் இருந்து வெளிப்படுகிறது. கடல் அலை குறையும்போது அழகிய மணல் திட்டு தோன்றும். இதனைத்தான் சீகல் தீவு என்று அழைக்கின்றனர். சீகல் என்பது கடலில் வாழும் ஒரு பறவை இனம் ஆகும். ஏராளமான சீகல்கள் இங்கு கூடுவதால் இந்த தீவு இந்தப் பெயரைப் பெற்றுள்ளது.

இது பார்வையாளர்களுக்கு சொர்க்கமாக அமைகிறது. அதற்கு முக்கிய காரணம், இந்த தீவில் இருக்கும் அழகிய, அமைதியான சுற்றுப்புறங்கள்தான். இங்கு வரும் பார்வையாளர்கள் இந்தக் கடலை வெறுமனே என்று ரசிப்பது மட்டுமல்லாமல்... மீன் பிடித்தல் போன்ற செயல்பாடுகளிலும் ஈடுபடுகின்றனர்.

இந்த ஹிடன் ஜெம் ஸ்பாட்டை, பயணிகள் சாலை வழியாகவோ அல்லது கொங்கண் ரயில் வழியாகவோ அடையலாம். மால்வான் நகரத்திலிருந்து பார்வையாளர்கள் தேவ்பாக் கடற்கரைக்கு படகு சவாரி செய்யலாம். உள்ளூர் மீனவர்கள் இந்த படகு சவாரிக்கு ரூ. 500-800 வரையிலான கட்டணம் வசூலிக்கின்றனர்.

சீகல் தீவு குறைந்த அலையின்போது மட்டுமே அணுகக்கூடியதாக இருப்பதால், முன்கூட்டியே அந்த இடம் குறித்து சரிபார்ப்பது அவசியம். சரியான நேரம் தினமும் மாறுபடும், எனவே உள்ளூர்வாசிகளிடம் ஆலோசித்து தீவுக்குள் காலடி எடுத்து வைக்கும் அரிய வாய்ப்பைத் தவறவிடாமல் இருக்க பார்வையாளர்கள் அதற்கேற்ப திட்டமிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Toll passes: நெடுஞ்சாலை பயணம் செல்பவர்களா? ஆண்டுக்கு ரூ.3000, லைஃப் டைம் ரூ.30,000 -எது லாபம்?

சாலை பயணங்களில் தவிர்க்க இயலாத ஒன்று சுங்கச் சாவடி கட்டணம். தொழில் ரீதியாக அடிக்கடி பயணிப்போர், சொந்த காரணங்களுக்காக பயணம் மேற்கொள்வோர் என யாராக இருந்தாலும் சுங்கச் சாவடிகளை கடக்காமல் செல்ல இயலாது. இந... மேலும் பார்க்க

`500 பேரிடம் மட்டுமே இருக்கும் பாஸ்போர்ட்' அரிதானதாக இருக்கக் காரணம் என்ன?

நாடு விட்டு நாடு, பயணிப்பவர்களுக்கு பாஸ்போர்ட் அவசியமான ஒன்று. அயல் நாடுகளில் பாஸ்போர்ட் இல்லாமல், அடியெடுத்து வைக்க முடியாது. பாஸ்போர்ட் கையிலிருந்தால்தான் நீங்கள் ஒரு நாட்டிற்குள் சுதந்திரமாகச் சுற்... மேலும் பார்க்க

Chennai Metro: ``மாதாந்திர பார்க்கிங் பாஸ் பிப்., 1 முதல் நிறுத்தம்" - சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம்

மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனம் நிறுத்தத்திற்கான மாதாந்திர பார்க்கிங் பாஸ்கள் 01.02.2025 முதல் நிறுத்தபடுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்திருக்கிறது.இது குறித்து எக்ஸ் தளத்தில், ``மெட்ரோ ரயில் நில... மேலும் பார்க்க

ஏலகிரி: `முக்கியமான சுற்றுலாத்தலத்தில் கழிவறை வசதிக்கூட இல்லை!' - சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி

தமிழகத்தின் திருப்பத்தூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் மலைகளின் இளவரசியான ஏலகிரி மலை, இயற்கை அழகை நேசிக்கும் சுற்றுலா பிரியர்களுக்கு ஏற்ற இடமாக இருந்து வருகிறது. இங்கு சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்க... மேலும் பார்க்க