செய்திகள் :

கான்பூர் ஐஐடியில் பி.எச்டி. மாணவர் தற்கொலை! ஓராண்டில் 3-வது சம்பவம்!

post image

கான்பூர் ஐஐடியில் பி.எச்டி. பயிலும் மாணவர் திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

நொய்டாவைச் சேர்ந்த அங்கித் யாதவ்(வயது 24) என்ற இளைஞர் கான்பூர் ஐஐடியில் வேதியியல் துறையில் பி.எச்டி. ஆராய்ச்சி செய்து வருகிறார்.

அவரது நண்பர்கள் திங்கள்கிழமை மாலை அங்கித் யாதவுக்கு நீண்ட நேரம் போன் செய்தும் அவர் பதிலளிக்கவில்லை. மேலும், அவரது விடுதி அறையும் உள்புறமாக பூட்டி இருந்ததால் காவல்துறைக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : அதிரடி உயர்வு! வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம் விலை!!

சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினர் அறையை திறந்து பார்த்ததில், அங்கித் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பிய காவல்துறையினர், தடயவியல் நிபுணர்களை கொண்டு விடுதி அறையில் ஆய்வு செய்தனர்.

மேலும், அங்கித் எழுதி வைத்திருந்த தற்கொலை கடிதம் போலீஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில், எனது முடிவுக்கு யாரும் காரணம் இல்லை என்று எழுதப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, மாணவரின் தற்கொலைக்கான காரணத்தை கண்டறிய காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

கான்பூர் ஐஐடியில் கடந்தாண்டு அக். 10ஆம் தேதி பிரகதி கர்யா என்ற பி.எச்டி. மாணவியும், ஜன. 18ஆம் தேதி பிரியங்கா ஜெய்ஸ்வால் என்ற பி.எச்டி. மாணவியும் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

விருந்து விஷமானது: உ.பி.யில் 40 பேர் உடல்நல பாதிப்பு!

உத்தரப் பிரதேசத்தின் ஃபரித்பூர் கிராமத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் விருந்து சாப்பிட்ட சுமார் 40 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றுள்ள... மேலும் பார்க்க

போதைப்பொருள் வழக்கு: நடிகர் ஷைன் டாம் சாக்கோ விடுதலை

கொச்சி : மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவை போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கிலிருந்து விடுவித்து கொச்சி கூடுதல் அமர்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை(பிப். 11) தீர்ப்பளித்துள்ளது. அவருடன் சேர்த்து இந்த வழக்க... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் 5 பயங்கரவதிகள் சுட்டுக் கொலை!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் தடைசெய்யப்பட்ட தலிபான் அமைப்பைச் சேர்ந்த 5 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். கரக் மாவட்டத்தில் உள்ள மிர் க... மேலும் பார்க்க

ராகுல் மீதான அவதூறு வழக்கு பிப்.24-க்கு ஒத்திவைப்பு!

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கு பிப்ரவரி 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சுல்தான்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடகத் தேர்தலின்போது அமித் ஷா குறித்து சர்ச்சைக்க... மேலும் பார்க்க

ஷ்ரத்தா வாக்கரின் தந்தை மரணம்! நீதி கேட்டு போராடியவர்

தில்லியில், திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்த காதலனால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட ஷ்ரத்தா வாக்கரின் தந்தை மாரடைப்பால் மரணம் அடைந்தார்.கடந்த 2022ஆம் ஆண்டு காதலனால் படுகொலை செய்யப்பட்ட ஷ்ரத்தா... மேலும் பார்க்க

பஞ்சாப் இடைத்தேர்தலில் கேஜரிவால் போட்டி? முதல்வராகிறாரா?

பஞ்சாப் மாநிலத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.தில்லியில் நடைபெற்ற பஞ்சாப் எம்எல்ஏக்களுடனான ஆலோசனைக் க... மேலும் பார்க்க