செய்திகள் :

தில்லி முதல்வராக பெண் அல்லது பட்டியலினத்தவர் தேர்வாக வாய்ப்பு!

post image

தில்லி முதல்வராக பெண் அல்லது பட்டியலினத்தவர் தேர்வாக வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

70 உறுப்பினா்களைக் கொண்ட தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 48 தொகுதிகளில் வெற்றிப்பெற்று ஆட்சியமைக்கத் தகுதி பெற்றுள்ளது. 26 ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு பாஜக தில்லியில் மீண்டும் ஆட்சியமைக்கவுள்ளது.

தில்லி முதல்வர் யார் என்பது குறித்து உயர்மட்ட அளவில் ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.

பெண் வேட்பாளர் ரேகா குப்தா

முதல்வர் போட்டியில் அரவிந்த கேஜரிவாலை வீழ்த்திய பர்வேஷ் சாஹிப் சிங், மாநில பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா, சுஷ்மா ஸ்வராஜின் மகள் பான்கரி ஸ்வராஜ், மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் ரேகா குப்தா உள்ளிட்டோரின் பெயர்கள் அடிபடுகிறது.

இந்த நிலையில், தில்லியின் அடுத்த முதல்வரைத் தேர்ந்தெடுக்கும் முனைப்பில் பாஜக ஈடுபட்டு வருகிறது. முக்கியமாக ஜாதி மற்றும் பாலினம் போன்ற காரணிகளை சமன்படுத்தும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது.

பெண் அல்லது பட்டியலின வேட்பாளரை தில்லி முதல்வராக மத்திய பாஜக தேர்வு செய்வதற்கான வாய்ப்பு அதிகம் எனக் கூறப்படுகிறது.

ரேகா குப்தாவின் பின்னணியைப் பார்க்கும்போது மாணவ பருவத்தில் இருந்து அரசியல் பயணம், கட்சியில் நடுநிலை போன்ற காரணிகளுடன் வலுவான போட்டியாளராக உள்ளார்.

ஒரு பெண் வேட்பாளரை முதல்வராக்க நினைத்தால் இவரின் வைஷ்ய சமூகப் பின்னணியும் தில்லி பல்கலைக்கழக சங்கத் தலைவராக இருந்த அனுபவமும் இவருக்கு நன்மை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: இந்தியாவில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன்கள் பட்டியல்!

இவர் ஷாலிமார் தொகுதியில் ஆம் ஆத்மி போட்டியாளரை 29,595 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

பட்டியலின வேட்பாளர் ராஜ்குமார் செளஹான்

மற்றொரு கோணத்தில் பார்த்தால் பட்டியலின வேட்பாளரான ராஜ்குமார் செளஹானை தில்லி முதல்வராகத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. அரசுக்குள் ஜாதி மற்றும் சமூக பிரதிநிதித்துவத்தை சமன்படுத்த பாஜக முயலும் என்பதால் இவரை துணை முதல்வராக தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக் கூறப்படுகிறது.

தில்லி முதல்வரை பாஜக மூன்று காரணிகளை வைத்து தேர்ந்தெடுக்கும் என்று கூறப்படுகிறது. முதல் காரணி ஜாட் சமூகத்தைச் சேர்ந்தவரை தேர்ந்தெடுப்பது, காரணம் தில்லி மற்றும் அண்டை மாநிலங்களான பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் இந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் அதிகம் உள்ளனர்.

இரண்டாவது பட்டியலினத்தவரை தேர்ந்தெடுப்பது, பிகாரில் இருந்து வரும் வாக்காளர்களுக்கு இது பயன்படும். மூன்றாவது பெண் வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பது பிரதமரின் பெண்கள் வளர்ச்சிக்கான திறமையான நகர்வாக இது இருக்கும்.

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா: பிரதமர் வாழ்த்து!

தைப்பூசத்தையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது பற்றி பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”அனைவருக்கும் மகிழ்ச்சியான, ஆசிர்வதிக்கப்பட்ட தைப்பூசத்... மேலும் பார்க்க

சுழல் - 2 வெப் தொடரின் வெளியீட்டுத் தேதி!

சுழல் - 2 வெப் தொடரின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், ஷ்ரேயா ரெட்டி நடிப்பில் பிரம்மா, அனுசரண் இயக்கத்தில் உருவான வெப் தொடர் சுழல். இத்தொடரை புஷ்கர் - காயத... மேலும் பார்க்க

ஒரேநாளில் ரூ. 237.98 கோடி வருவாய்! - பத்திரப் பதிவுத் துறை தகவல்

முகூர்த்த நாளான நேற்று(பிப். 10) ஒரேநாளில் ரூ.237.98 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக பத்திரப்பதிவுத் துறை தகவல் தெரிவித்துள்ளது. ஆவணங்கள் அதிகமாக பதிவு செய்யப்படுவதால் பத்திரப்பதிவுத் துறை அலுவலகங்களில் மு... மேலும் பார்க்க

ராகுல் இன்று சென்னை வருகை! பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

காங்கிரஸ் தலைவரும் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி இன்று(பிப். 11) சென்னை வரவுள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பார்க்க

ஐஐடி முனைவர் படிப்பில் 560 ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. இடங்கள் பறிப்பு!

ஐ.ஐ.டி.க்களில் இடஒதுக்கீட்டை முறையாக நடைமுறை படுத்தப்படாததால் முனைவர் படிப்பில் 560 ஓ.பி.சி, எஸ்.சி, எஸ்.டி மாணவர் இடங்கள் பறிக்கப்பட்டுள்ளதாக மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.... மேலும் பார்க்க

ஆதாரமற்ற செய்திகளை அண்ணாமலை வெளியிடுகிறார்: அமைச்சர் காந்தி

ஆதாரமற்ற செய்திகளை அண்ணாமலை வெளியிடுகிறார் என்று அமைச்சர் ஆர். காந்தி தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு பா.ஜ.க. மாநில தலைவர் கே. அண்ணாமலை, வேட்டி சேலை வழங்கும் திட்டம் குறித்து நேற்று(பிப். 10) வெளியிட்ட அறி... மேலும் பார்க்க