செய்திகள் :

Delhi: ``முஸ்தஃபாபாத் தொகுதியின் பெயரை `ஷிவ்புரி' என மாற்றுவேன்'' -பாஜக மோகன் சிங்

post image
சமீபத்தில் நடந்து முடிந்த டெல்லி சட்டமன்றத் தேர்தலில் முஸ்தஃபாபாத் தொகுதியில் வெற்றி பெற்ற மோகன் சிங் பிஷ்ட், முஸ்தஃபாபாதை 'ஷிவ்புரி' அல்லது ஷிவ் விஹார் என பெயர் மாற்றம் செய்வது குறித்து மீண்டும் வலியுறுத்தினார்.

பாஜக வேட்பாளரான மோகன் சிங் பிஷ்ட், 2025 டெல்லி சட்டமன்றத் தேர்தலில் முஸ்தஃபாபாத் தொகுதியில் போட்டியிட்டு சுமார் 17,578 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தனது வெற்றி குறித்து பேசிய மோகன் சிங் பிஷ்ட், "நான் வெற்றி பெற்றால் முஸ்தஃபாபாத் தொகுதியின் பெயரை 'ஷிவ்புரி' அல்லது 'ஷிவ் விஹார்' என மாற்றுவதாய் கூறியிருந்தேன். நான் அதைச் செய்வேன். வளர்ச்சிப் பணிகள் பெயருக்கு சம்பந்தமாக இல்லை. 1998 முதல் 2008 வரை இப்பகுதியில் வளர்ச்சிப்பணிகளை நான் செய்ததால், நிச்சயம் பெயரை மாற்றிவிடுவேன்.

மோகன் சிங் பிஷ்ட்

ஒரு பக்கம் 58% மக்கள் தொகை மற்றும் மறுபக்கம் 42 சதவீத மக்கள் தொகை இருக்கும் நிலையில், 58 சதவீத மக்களை கௌரவிப்பதே நியாயமானது. எனவே முஸ்தஃபாபாத் பகுதி, 'ஷிவ் விஹார்' அல்லது 'ஷிவ்புரி' என பெயர் மாற்றம் செய்யப்படும்" என கூறினார். மேலும், இந்துக்கள் வாழும் பகுதிக்கு முஸ்தஃபாபாத் என்பதற்குப் பதிலாக 'ஷிவ்புரி' அல்லது 'ஷிவ் விஹார்' என ஏன் பெயரிட இயலாது" எனவும் கேள்வி எழுப்பினார்.

டெல்லி மாநிலத்தில் வளர்ச்சி இல்லை என விமர்சித்த மோகன் சிங், அடிப்படை வசதிகளை மேம்படுத்த முறையாக நடவடிக்கைகள் மேற்கொள்ள இருப்பதாகவும் உறுதியளித்தார். இது குறித்து பேசிய அவர், "டெல்லியில் வளர்ச்சிக்கான அறிகுறிகளே இல்லை. குடிநீர், சாலை வசதி, பள்ளிகள் மேம்பாடு, பூங்காக்கள் பராமரிப்பு, போக்குவரத்து வசதிகள் போன்றவற்றை சீரமைக்க கடுமையாக உழைப்பேன்" என குறிப்பிட்டார்.

மோகன் சிங் பிஷ்ட்

முஸ்தாஃபாபாத் முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதி என கூறப்படும் நிலையில், இத்தொகுதியின் மொத்த மக்கள்தொகையில் சுமார் 30%-40% முஸ்லீம் மக்களே வசிக்கின்றனர். அதிக முஸ்லிம் மக்கள்தொகையுடைய வடகிழக்கு டெல்லியில் அமைந்துள்ள முஸ்தஃபாபாத் தொகுதி, 2020 கலவரத்தின் போது மிக அதிக பாதிப்புக்குட்பட்ட பகுதிகளில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

DMK: "திமுக ஆட்சியில் அதிக பாலியல் வழக்குகள் பதிவாக இதான் காரணம்..." - அமைச்சர் ரகுபதி சொல்வதென்ன?

அண்ணாமலை பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் கொடுமை, கிருஷ்ணகிரியில் 8ம் வகுப்பு படிக்கும் அரசுப் பள்ளி மாணவி மூன்று ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், வேலூரில் ஓடும் ரயில் கர்ப்பிணிப் ப... மேலும் பார்க்க

"சாதி வாரிக் கணக்கெடுப்பு... இல்லையெனில் தமிழ்நாடே கலவர பூமியாகும்" - அன்புமணி காட்டம்

பாட்டாளி மக்கள் கட்சியின் 'தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான அவசர, அவசிய தேவைகள்' குறித்த கலந்தாய்வுக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது.இந்தக் கலந்தாய்வுக் கூட்டத்தில் , தமிழ்நாட்டி... மேலும் பார்க்க

'பட்ஜெட்டில் நிதியமைச்சர் அறிவித்த புதிய வருமான வரி சட்டம்..!' - எப்போது, எதற்காக வருகிறது?!

கடந்த 1-ம் தேதி தாக்கல் செய்த பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "அடுத்த வாரம் புதிய வருமான வரி சட்டம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்" என்று அறிவித்திருந்தார். இந்த சட்டத்திற்கு... மேலும் பார்க்க

Meta: 3000 பேரை பணி நிக்கம் செய்யும் மெட்டா; AI தொழில்நுட்பம்தான் காரணமா... பின்னனி என்ன?

கூகுள், மைக்ரோசாஃப்ட், ஆமேசான் போன்ற நிறுவனங்கள் தொடர்ந்து ஆயிரக் கணக்கான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வருகிறது.அந்த வரிசையில் தற்போது ஃபேஸ்புக், வாட்ஸ் ஆஃப், இன்ஸ்டாகிராம் நிறுவனங்களின் தாய் நிறுவனம... மேலும் பார்க்க

US penny: ``இனி புதிய பென்னி நாணயங்களை அச்சிட வேண்டாம்'' -ட்ரம்ப் சொன்ன கணக்கு... தொடரும் அதிரடி!

'இனி நாணயங்களை அச்சிடாதீர்கள்' - இதோ ட்ரம்பின் அடுத்த அதிரடி வந்துவிட்டது. அமெரிக்காவில் 'பென்னி' என்ற நாணயத்தை இனி அச்சிட வேண்டாம் என்று இப்போது ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். பென்னி என்பது அமெரிக்காவில்... மேலும் பார்க்க

ADMK: ``எடப்பாடி நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்கள் இல்லை..'' -செங்கோட்டையன் ஓபன் டாக்

தமிழகத்தின் மேற்கு மண்டலமான கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் மத்தியில் கடந்த அரை நூற்றாண்டுக்காலமாக இருந்துவந்த கோரிக்கையான `அத்திக்கடவு - அவிநாசி’ திட்டம் நிறைவேறியிருக்கிறது.ஜெயலலிதா மறைவுக... மேலும் பார்க்க