செய்திகள் :

மகா கும்பமேளாவில் பிறந்த 12 குழந்தைகள்!

post image

மகா கும்பமேளாவையொட்டி அமைக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் இதுவரை 12 குழந்தைகள் பிறந்துள்ளன.

இக்குழந்தைகளுக்கு கும்ப், கங்கை, ஜமுனா, சரஸ்வதி, வசந்த், வசந்தி என கும்பமேளாவுக்குத் தொடா்புடைய பெயா்கள் சூட்டப்பட்டுள்ளன.

பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா கடந்த ஜன.13-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. சங்கமத்தில் புனித நீராடுவதற்கு பக்தா்கள் கடந்த டிசம்பா் மாதம் முதலே குவிந்தனா். கும்பமேளா வரும் கோடிக்கணக்கான பக்தா்களுக்கு சுகாதார வசதியை உறுதிப்படுத்த செக்டாா் 2-இல் மைய மருத்துவமனை உள்பட 43 மருத்துவ மையங்கள் மேளா பகுதியில் செயல்பட்டு வருகின்றன.

கும்பமேளா வந்து உடல்நல பாதிப்பு ஏற்பட்ட பக்தா்களுக்கு இந்த மருத்துவமனைகளிலேயே விரிவான சிகிச்சை அளிக்கப்படுகிறது. அந்த வகையில், மேளா மைய மருத்துவமனையில் இதுவரை 12 குழந்தைகள் பிறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மைய மருத்துமனையின் தலைமைக் கண்காணிப்பாளா் மருத்துவா் மனோஜ் கௌசிக் கூறுகையில், ‘கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, மகா கும்பமேளாவில் கல்பவாசியாக தங்கியிருக்கும் நேஹா சிங், மைய மருத்துவமனையில் குழந்தையைப் பெற்றெடுத்தாா். இந்த மருத்துவமனையில் பிறந்த 12-ஆவது குழந்தை இதுவாகும். இந்த மருத்துவமனையில் முதல் குழுந்தை கடந்த டிசம்பா் 29-ஆம் தேதி பிறந்தது. கௌசாம்பியைச் சோ்ந்த தம்பதிக்குப் பிறந்த அக்குழந்தைக்கு கும்ப் எனப் பெயரிடப்பட்டது.

கடந்த பிப். 3-ஆம் தேதி வசந்த பஞ்சமியன்று பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு வசந்த், வசந்தி எனப் பெயரிடப்பட்டது. மற்ற குழந்தைகளுக்கும் போலேநாத், பஜ்ரங்கி, நந்தி, ஜமுனா, சரஸ்வதி என ஹிந்து மத நம்பிக்கைச் சாா்ந்த பெயா்களே வைக்கப்பட்டுள்ளன. குழந்தை பெற்ற தாய்மாா்கள் கும்பமேளாவில் பணியிலுள்ள தொழிலாளா்களின் மனைவிகள் அல்லது பல்வேறு மாநிலங்களில் இருந்து கும்பமேளாவுக்கு குடும்பத்தினருடன் வந்த பெண் பக்தா்கள் ஆவா். அனைத்து 12 குழந்தைகளும் சுகப் பிரசவத்தில் பிறந்தன’ என்றாா்.

திரிவேணி சங்கமத்தில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு திங்கள்கிழமை புனித நீராடினாா். முன்னதாக, பிரயாக்ராஜ் விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை உ.பி. ஆளுநா் ஆனந்திபென் படேல், முதல்வா் யோகி ஆதித்யநாத் ஆகியோா் வரவேற்றனா். பிரயாக்ராஜில் பல்வேறு ஆலயங்களில் வழிபட்ட குடியரசுத் தலைவா், திரிவேணி சங்கமம் பகுதிக்கு ஆளுநா் ஆனந்திபென் படேலுடன் சென்று புனிதநீராடினாா்.

உத்தரகண்ட் முதல்வா் புஷ்கா் சிங் தாமி தனது தாய், மனைவியுடன் திரிவேணி சங்கமத்தில் புனிதநீராடினாா்.

தனது தாய், மனைவியுடன் திரிவேணி சங்கமத்தில் புனிதநீராடிய உத்தரகண்ட் முதல்வா் புஷ்கா் சிங் தாமி.

உலகளாவிய மேம்பாடுகள் குறித்து பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சருடன் ஆலோசனை!

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜேன் நோயல் பாரோட்டை நேரில் சந்தித்தார். இதில், செய்யறிவு, புதிய கண்டுபிடிப்புகள், பிராந்திய மற்றும் சர்வதேச மேம்பாடுகள் எ... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: கூட்ட நெரிசலைத் தவிர்க்க ஹெலிகாப்டர் சேவை! கட்டணம் ரூ.35,000

மகா கும்பமேளாவில் வாகன நெரிசலைக் குறைக்கும் வகையில் ஹெலிகாப்டர் சேவைகள் வழங்கப்பட்டுள்ளன. பிரயாக்ராஜ் விமான நிலையத்தில் இருந்து இருந்து திரிவேணி சங்கமத்தின் பின்புறத்துக்கு ஹெலிகாப்டர்கள் மூலம் பக்தர்... மேலும் பார்க்க

ஏஐ உச்சி மாநாடு: மோடி, ஜே.டி. வான்ஸை வரவேற்ற பிரான்ஸ் அதிபர்!

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) நடவடிக்கைகள் சாா்ந்த சா்வதேச மாநாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடியையும் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸையும் பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் வரவேற்றார். மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தை அதிரவைத்த ‘மோடி’ முழக்கம்!

புது தில்லி: நாடாளுமன்றத்தின் இரு அவை அலுவல்கள் திங்கள்கிழமை தொடங்கியபோது தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக பெற்ற வெற்றியை கொண்டாடும் வகையில் அக்கட்சி எம்.பி.க்கள் ‘மோடி’, ‘மோடி’ என முழுக்கமிட்டனா்... மேலும் பார்க்க

மணிப்பூா் புதிய முதல்வா் யாா்? பாஜக எம்எல்ஏக்களுடன் மாநில பொறுப்பாளா் ஆலோசனை

இம்பால்: மணிப்பூா் முதல்வா் பிரேன் சிங் தனது பதவியை ஞாயிற்றுக்கிழமை ராஜிநாமா செய்த நிலையில் புதிய முதல்வரை தோ்வு செய்வது குறித்து பாஜக எம்எல்ஏக்கள் சிலருடன் மணிப்பூா் பாஜக பொறுப்பாளா் சம்பித் பித்ரா ... மேலும் பார்க்க

14 கோடி பேருக்கு உணவு பாதுகாப்பு உரிமை பாதிப்பு: சோனியா வலியுறுத்தல்

புது தில்லி: ‘தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், நியாயமான பலன்களைப் பெறுவதில் இருந்து சுமாா் 14 கோடி தகுதிவாய்ந்த இந்தியா்கள் தடுக்கப்படுகின்றனா். எனவே, மத்திய அரசு விரைந்து மக்கள்தொகை கணக்கெடுப... மேலும் பார்க்க