செய்திகள் :

14 கோடி பேருக்கு உணவு பாதுகாப்பு உரிமை பாதிப்பு: சோனியா வலியுறுத்தல்

post image

புது தில்லி: ‘தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், நியாயமான பலன்களைப் பெறுவதில் இருந்து சுமாா் 14 கோடி தகுதிவாய்ந்த இந்தியா்கள் தடுக்கப்படுகின்றனா். எனவே, மத்திய அரசு விரைந்து மக்கள்தொகை கணக்கெடுப்பை மேற்கொண்டு, அந்தப் பலன்கள் தகுதிவாய்ந்த இந்தியா்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்’ என்று காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான சோனியா காந்தி வலியுறுத்தினாா்.

இதுதொடா்பாக மாநிலங்களவையில் அவா் திங்கள்கிழமை பேசியதாவது:

கடந்த 2013-ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது. நாட்டில் உள்ள 140 கோடி மக்களின் உணவு மற்றும் ஊட்டச்சத்துப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

கோடிக்கணக்கான குடும்பங்களைப் பட்டினியில் இருந்து பாதுகாத்ததில் இந்தச் சட்டம் முக்கிய பங்காற்றியது. குறிப்பாக கரோனா பரவல் காலத்தில், இந்தச் சட்டம் முக்கிய பங்களித்தது.

ஆனால் இந்தச் சட்டத்தின் கீழ் பயன்பெற வேண்டிய பயனாளிகள் 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படிதான் அடையாளம் காணப்படுகிறாா்களே தவிர, தற்போதைய மக்கள்தொகையின்படி அல்ல.

14 கோடி பேருக்குப் பலன்கள் கிடைக்கவில்லை: சுதந்திர இந்திய வரலாற்றில் முதல்முறையாக, 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்பட வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பு 4 ஆண்டுகளுக்கும் மேலாக தாமதமாகியுள்ளது. 2021-ஆம் ஆண்டே அந்தக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். ஆனால் எப்போது அந்தக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. அந்தக் கணக்கெடுப்பு நிகழாண்டு மேற்கொள்ளப்பட வாய்ப்பில்லை என்பதை பட்ஜெட் ஒதுக்கீடுகளும் எடுத்துரைக்கின்றன.

இதனால் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், நியாயமான பலன்களைப் பெறுவதில் இருந்து சுமாா் 14 கோடி தகுதிவாய்ந்த இந்தியா்கள் தடுக்கப்படுகின்றனா். எனவே மத்திய அரசு விரைந்து மக்கள்தொகை கணக்கெடுப்பை மேற்கொண்டு, அந்தப் பலன்கள் தகுதிவாய்ந்த இந்தியா்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். உணவுப் பாதுகாப்பு என்பது சிறப்புரிமை அல்ல; அடிப்படை உரிமை என்றாா்.

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், ஏழைகளுக்கு மாதந்தோறும் 5 கிலோ இலவச உணவு தானியங்களை மத்திய அரசு வழங்குகிறது.

இறுதிச் சடங்கில் ஊழியரின் சடலத்தை சுமந்துசென்ற பிரபல தொழிலதிபர்!

அபுதாபியில் மாரடைப்பால் உயிரிழந்த தனது ஊழியரின் சடலத்தை லூலூ குழுமத் தலைவர் யூசப் அலி சுமந்து சென்றார்.அபுதாபியை தலைமையிடமாக கொண்ட லூலூ குழுமத்துக்கு 23-க்கும் மேற்பட்ட நாடுகளில் கிளைகள் உள்ளன. இந்திய... மேலும் பார்க்க

நாளை பௌர்ணமி: பிரயாக்ராஜில் அதிகாரிகள் பிறப்பித்த முக்கிய உத்தரவு

நாளை மாகி பூர்ணிமா புனித நீராடல் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, பிரயாக்ராஜில் போக்குவரத்துக் காவல்துறையினர் மிக முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளனர். மேலும் பார்க்க

பெற்றோர் உடலுறவு குறித்து அவதூறு: யூடியூபர்கள் மீது வழக்கு!

பெற்றோர் உடலுறவு கொள்வது குறித்து பொதுவெளியில் அவதூறாகப் பேசிய யூடியூபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.நகைச்சுவை நடிகர் சமய் ரெய்னாவின் இந்தியாஸ் காட் லேடன்ட் என்ர நிகழ்ச்சியில் ரன்வீர் அல்ல... மேலும் பார்க்க

விலைவாசி உயர்வு, மணிப்பூர் நிலவரம்: மக்களவையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் நோட்டீஸ்!

விலைவாசி உயர்வு குறித்து விவாதம் நடத்தக் கோரி காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் இன்று(செவ்வாய்க்கிழமை) மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கினார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜன. 31 ஆம... மேலும் பார்க்க

கான்பூர் ஐஐடியில் பி.எச்டி. மாணவர் தற்கொலை! ஓராண்டில் 3-வது சம்பவம்!

கான்பூர் ஐஐடியில் பி.எச்டி. பயிலும் மாணவர் திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.நொய்டாவைச் சேர்ந்த அங்கித் யாதவ்(வயது 24) என்ற இளைஞர் கான்பூர் ஐஐடியில் வேதியியல் துறையில் பி.எச்டி. ஆராய்ச்சி... மேலும் பார்க்க

தில்லி தோல்விக்குப் பிறகு... கேஜரிவாலை சந்திக்கிறார் பஞ்சாப் முதல்வர்!

ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் தில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவாலை, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சிங் சந்திக்கவுள்ளார். இதற்காக பஞ்சாபில் இருந்து தில்லிக்கு அவர் புறப்பட்டுள்ளார். மேலும் பார்க்க