செய்திகள் :

இறுதிச் சடங்கில் ஊழியரின் சடலத்தை சுமந்துசென்ற பிரபல தொழிலதிபர்!

post image

அபுதாபியில் மாரடைப்பால் உயிரிழந்த தனது ஊழியரின் சடலத்தை லூலூ குழுமத் தலைவர் யூசப் அலி சுமந்து சென்றார்.

அபுதாபியை தலைமையிடமாக கொண்ட லூலூ குழுமத்துக்கு 23-க்கும் மேற்பட்ட நாடுகளில் கிளைகள் உள்ளன. இந்தியாவிலும் பல்வேறு நகரங்களில் லூலூ வணிக வளாகங்கள் திறப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், அபுதாபியில் அல் வஹ்தா வணிக வளாகத்தில் உள்ள லூலூ ஹைபர் மார்ட்டில் மேற்பார்வையாளராக பணிபுரிந்த கேரளத்தைச் சேர்ந்த ஷிஹாபுதீன் என்பவர், கடந்த வாரம் மாரடைப்பால் பலியானார்.

இதையும் படிக்க : பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸுக்கு கெடு விதித்த டிரம்ப்!

அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர முடியாத நிலையில், அபுதாபியிலேயே இறுதிச் சடங்கு நடத்தப்பட்டது. அந்த நிகழ்வில், நேரில் கலந்துகொண்ட யூசப் அலி பிரார்த்தனை மேற்கொண்டதுடன், அவரின் சவப்பெட்டியை தோளில் சுமந்து சென்றார்.

இந்த காணொலியை அவரது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து யூசப் அலி இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், அவரது செயலுக்கு பலரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.

கேரளத்தை பூர்விகமாக கொண்ட யூசப் அலி, முன்னதாக கேரளத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு உதவி செய்ததன் மூலம் அனைவராலும் பாராட்டப்பட்டார்.

எர்ணாகுளத்தைச் சேர்ந்த தம்பதி, கடந்த 2019ஆம் ஆண்டில் வீடு கட்டுவதற்காக நிதி நிறுவனத்திடம் ரூ. 4 லட்சம் கடன் பெற்றிருந்தனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில், அவரது கணவர் வீட்டைவிட்டு சென்றுவிட்டார்.

வட்டியுடன் கடன் தொகை ரூ. 8 லட்சத்தை எட்டிய நிலையில், நிதி நிறுவனத்தினர் வீட்டை பறிமுதல் செய்தனர். இந்த செய்தி அறிந்த யூசப் அலி, பாதிக்கப்பட்ட பெண்ணின் கடனை அடைத்ததுடன், அவருக்கு ரூ. 10 லட்சம் நிதியும் வழங்கி உதவினார்.

இந்த உதவியின் மூலம் பிரபலமான யூசப் அலி, தனது ஊழியரின் இறுதிச் சடங்கில் பங்கேற்று சவப்பெட்டியை சுமந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கட்சிவிட்டுக் கட்சி தாவுவது காங்கிரஸ் கலாசாரம்! -ஆம் அத்மி

புது தில்லி : ஆம் ஆத்மி கட்சிக்குள் எந்தவொரு சலசலப்பும் இல்லை என்று பஞ்சாப் மாநில முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற... மேலும் பார்க்க

விருந்து விஷமானது: உ.பி.யில் 40 பேர் உடல்நல பாதிப்பு!

உத்தரப் பிரதேசத்தின் ஃபரித்பூர் கிராமத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் விருந்து சாப்பிட்ட சுமார் 40 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றுள்ள... மேலும் பார்க்க

போதைப்பொருள் வழக்கு: நடிகர் ஷைன் டாம் சாக்கோ விடுதலை

கொச்சி : மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவை போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கிலிருந்து விடுவித்து கொச்சி கூடுதல் அமர்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை(பிப். 11) தீர்ப்பளித்துள்ளது. அவருடன் சேர்த்து இந்த வழக்க... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் 5 பயங்கரவதிகள் சுட்டுக் கொலை!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் தடைசெய்யப்பட்ட தலிபான் அமைப்பைச் சேர்ந்த 5 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். கரக் மாவட்டத்தில் உள்ள மிர் க... மேலும் பார்க்க

ராகுல் மீதான அவதூறு வழக்கு பிப்.24-க்கு ஒத்திவைப்பு!

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கு பிப்ரவரி 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சுல்தான்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடகத் தேர்தலின்போது அமித் ஷா குறித்து சர்ச்சைக்க... மேலும் பார்க்க

ஷ்ரத்தா வாக்கரின் தந்தை மரணம்! நீதி கேட்டு போராடியவர்

தில்லியில், திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்த காதலனால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட ஷ்ரத்தா வாக்கரின் தந்தை மாரடைப்பால் மரணம் அடைந்தார்.கடந்த 2022ஆம் ஆண்டு காதலனால் படுகொலை செய்யப்பட்ட ஷ்ரத்தா... மேலும் பார்க்க