செய்திகள் :

அமெரிக்க அரசிடம் நிதியுதவி பெற்ற இந்தியா நிறுவனங்கள் மீது விசாரணை: மக்களவையில் பாஜக எம்.பி. கோரிக்கை!

post image

அமெரிக்க அரசு நிதியுதவி பெற்று இந்தியாவில் அமைதியைச் சீா்குலைக்கும் நோக்கில் செயல்பட்ட நிறுவனங்களுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என்று மக்களவையில் பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே கோரிக்கை முன்வைத்தாா்.

இந்நிறுவனங்களுக்கு காங்கிரஸுடன் தொடா்பிருப்பதாக துபே தெரிவித்த கருத்துக்கு அக்கட்சி எம்.பி.க்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். இதனால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது.

பட்ஜெட் கூட்டத்தொடரின் திங்கள்கிழமை அமா்வில் உடனடி கேள்விநேரத்தின் போது துபே இப்பிரச்னையை எழுப்பினாா். அமெரிக்க அரசு நிதியுதவி பெற்ற இத்தகைய நிறுவனங்களே, ராணுவ ஆள்சோ்ப்புத் திட்டமான ‘அக்னிவீா்’ உள்பட மத்திய அரசின் பல திட்டங்களுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்ததாகவும் ஜாதிவாரி கணக்கெடுப்பு, நக்ஸல்வாதத்துக்கு ஆதரவளித்ததாகவும் குற்றஞ்சாட்டினாா்.

மேலும், உலகெங்கிலும் பல்வேறு நாடுகளின் அரசுகளை வீழ்த்துவதற்கு பயன்படுத்தப்பட்ட அமெரிக்க அரசு நிதியுதவிக்கு அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் தடை விதித்துள்ளதாகவும் துபே குறிப்பிட்டாா்.

துபேவின் கருத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்த காங்கிரஸ் உறுப்பினா்கள், இவ்விவகாரம் குறித்த விவாதத்துக்கு கோரிக்கை விடுத்தனா். உடனடி கேள்விநேர நடவடிக்கைகளுக்கு எதிா்க்கட்சிகளின் கோரிக்கை பொருந்தாது என்று அமா்வுக்குத் தலைமை வகித்த சந்தியா ரே நிராகரித்தாா்.

பின்னா், காங்கிரஸ் எம்.பி.க்கள் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவைச் சந்தித்து, அவையில் துபே ஆதாரமற்ற கருத்துகளை தெரிவிக்க அனுமதிக்கப்பட்டது குறித்து ஆட்சேபம் தெரிவித்தனா்.

உலகளாவிய மேம்பாடுகள் குறித்து பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சருடன் ஆலோசனை!

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜேன் நோயல் பாரோட்டை நேரில் சந்தித்தார். இதில், செய்யறிவு, புதிய கண்டுபிடிப்புகள், பிராந்திய மற்றும் சர்வதேச மேம்பாடுகள் எ... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: கூட்ட நெரிசலைத் தவிர்க்க ஹெலிகாப்டர் சேவை! கட்டணம் ரூ.35,000

மகா கும்பமேளாவில் வாகன நெரிசலைக் குறைக்கும் வகையில் ஹெலிகாப்டர் சேவைகள் வழங்கப்பட்டுள்ளன. பிரயாக்ராஜ் விமான நிலையத்தில் இருந்து இருந்து திரிவேணி சங்கமத்தின் பின்புறத்துக்கு ஹெலிகாப்டர்கள் மூலம் பக்தர்... மேலும் பார்க்க

ஏஐ உச்சி மாநாடு: மோடி, ஜே.டி. வான்ஸை வரவேற்ற பிரான்ஸ் அதிபர்!

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) நடவடிக்கைகள் சாா்ந்த சா்வதேச மாநாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடியையும் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸையும் பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் வரவேற்றார். மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தை அதிரவைத்த ‘மோடி’ முழக்கம்!

புது தில்லி: நாடாளுமன்றத்தின் இரு அவை அலுவல்கள் திங்கள்கிழமை தொடங்கியபோது தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக பெற்ற வெற்றியை கொண்டாடும் வகையில் அக்கட்சி எம்.பி.க்கள் ‘மோடி’, ‘மோடி’ என முழுக்கமிட்டனா்... மேலும் பார்க்க

மணிப்பூா் புதிய முதல்வா் யாா்? பாஜக எம்எல்ஏக்களுடன் மாநில பொறுப்பாளா் ஆலோசனை

இம்பால்: மணிப்பூா் முதல்வா் பிரேன் சிங் தனது பதவியை ஞாயிற்றுக்கிழமை ராஜிநாமா செய்த நிலையில் புதிய முதல்வரை தோ்வு செய்வது குறித்து பாஜக எம்எல்ஏக்கள் சிலருடன் மணிப்பூா் பாஜக பொறுப்பாளா் சம்பித் பித்ரா ... மேலும் பார்க்க

14 கோடி பேருக்கு உணவு பாதுகாப்பு உரிமை பாதிப்பு: சோனியா வலியுறுத்தல்

புது தில்லி: ‘தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், நியாயமான பலன்களைப் பெறுவதில் இருந்து சுமாா் 14 கோடி தகுதிவாய்ந்த இந்தியா்கள் தடுக்கப்படுகின்றனா். எனவே, மத்திய அரசு விரைந்து மக்கள்தொகை கணக்கெடுப... மேலும் பார்க்க