செய்திகள் :

சிங்கப்பூரில் பயங்கரவாத தாக்குதலுக்கு வாய்ப்பு! உள்துறை எச்சரிக்கை

post image

சிங்கப்பூரில்பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தப்படலாம் என்றும், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் உள்துறை அமைச்சர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத சதித் திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் பெண் உள்பட மூன்று பேரை சிங்கப்பூர் பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ள நிலையில், இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : காஸா மருத்துவர்களை துன்புறுத்தும் இஸ்ரேல் ராணுவம்!

சிங்கப்பூரில் நடைபெற்ற தைப்பூசத் திருவிழாவில் செவ்வாய்க்கிழமை கலந்துகொண்ட அமைச்சர் சண்முகம் செய்தியாளர்களுடன் பேசியதாவது:

”தீவிர வலதுசாரி சித்தாந்தங்களை பின்பற்றும் மூன்றாவது இளைஞர் பயங்கரவாத சதித் திட்டத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளார். சீன மற்றும் மலேசிய மக்களுக்கு இடையே இனக் கலவரத்தை தூண்ட திட்டமிட்டிருந்தார்.

கடந்த 2019 நியூசிலாந்து மசூதிகளில் பயங்கரவாத தாக்குதல் நடத்தி 51 பேரைக் கொன்றவரை இந்த இளைஞர் பின்தொடர்ந்து வருகிறார்.

சிங்கப்பூர் மசூதிகளில் பயங்கரவாத தாக்குதல் நடத்தி இஸ்லாமியர்களை கொல்ல சதித் திட்டமிட்டிருந்தார். இதே வழக்கில் இல்லத்தரசி ஒருவரும், தூய்மைப் பணியாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒருவேளை பயங்கரவாத தாக்குதல் நடக்கும் பட்சத்தில், மக்கள் மன ரீதியில் தயாராக இருக்க வேண்டியது முக்கியம்” எனத் தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீன குடியிருப்புப் பகுதிகள் மீது மீண்டும் இஸ்ரேல் தாக்குதல்!

பாலஸ்தீன எல்லைக்குட்பட்ட துல்காரெம் குடியிருப்பு மற்றும் அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேல் ராணுவம் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேல் ராணுவம் முற்றுகையிட்டுள்ளதால் தொடர்ந்து 17வது நாளாக துல்கா... மேலும் பார்க்க

லிபியா: படகு கவிழ்ந்த விபத்தில் 16 பாகிஸ்தானியர்கள் பலி!

லிபியாவில் 64 பேருடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் உயிரிழந்தனர். இவர்கள் பாகிஸ்தானில் இருந்து சட்டவிரோதமாக படகு மூலம் வந்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் 37 பே... மேலும் பார்க்க

பிணைக் கைதிகளை விடுவிக்காவிட்டால் போரைத் தொடங்குவோம்: இஸ்ரேல்

ஹமாஸ் பிடித்துவைத்துள்ள பிணைக் கைதிகள் அனைவரையும் சனிக்கிழமைக்குள் விடுவிக்காவிட்டால் போரைத் தொடங்குவோம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.மேலும், காஸாவைச் சுற்று பாதுகாப்புப் ... மேலும் பார்க்க

காஸா மருத்துவர்களை துன்புறுத்தும் இஸ்ரேல் ராணுவம்!

காஸாவில் இருந்து சிறைபிடிக்கப்பட்ட மருத்துவர்களை இஸ்ரேல் ராணுவம் துன்புறுத்துவதாக அவர்களின் வழக்குரைஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். போரின்போது முதலுதவிப் பணிகளில் ஈடுபட்டிருந்த மருத்துவர்களை சட்டவிரோதம... மேலும் பார்க்க

பொலிவியாவில் தொடர் கனமழை, வெள்ளம்! 24 பேர் பலி!

பொலிவியா நாட்டில் தொடர் கனமழை பெய்து வருவதால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர் மழையால் 8 மாகாணங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் முழுக்க மழ... மேலும் பார்க்க

‘உக்ரைன் ரஷியா ஒரு நாள் ஆகலாம்’

‘உக்ரைன் ஒரு நாள் ரஷிய பகுதியாக ஆகலாம்’ என்று என்று டிரம்ப் என்று டிரம்ப் கூறியுள்ளாா். இது குறித்து ‘ஃபாக்ஸ் நியூஸ்’ தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவா் கூறியதாவது: 3 ஆண்டுகால உக்ரைன் போரை முடிவு... மேலும் பார்க்க