செய்திகள் :

பாலஸ்தீன குடியிருப்புப் பகுதிகள் மீது மீண்டும் இஸ்ரேல் தாக்குதல்!

post image

பாலஸ்தீன எல்லைக்குட்பட்ட துல்காரெம் குடியிருப்பு மற்றும் அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேல் ராணுவம் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தியுள்ளது.

இஸ்ரேல் ராணுவம் முற்றுகையிட்டுள்ளதால் தொடர்ந்து 17வது நாளாக துல்காரெம் பகுதிக்கு உணவு, மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

குடியிருப்புப் பகுதிகளுக்குட்பட்ட 3 கட்டடங்களை இஸ்ரேல் ராணுவம் ஆக்கிரமித்துள்ளதாகவும், அங்கிருந்து பாலஸ்தீன மக்கள் வசிக்கும் குடியிருப்புகள் மீது தாகுதல் நடத்துவதாகவும் கூறப்படுகிறது.

துல்காரெம் மற்றும் நுர் ஷாம்ஸ் பகுதிகளில் உள்ள முகாம்களை இஸ்ரேல் ராணுவம் தீயிட்டு எரித்துள்ளது. இதனால் அங்கிருந்த மக்கள் வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் மூன்று வீடுகளையும் முற்றிலும் அழித்துள்ளது.

மேலும் துக்காரெம் பகுதியிலுள்ள மசூதி அருகே இருந்த வீட்டில் இரு பெண்களை இஸ்ரேல் ராணுவம் சிறைபிடித்துச் சென்றுள்ளதாக வாஃபா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே 6 வார போர் நிறுத்தம் ஏற்பட்டு, ஹமாஸ் வசம் உள்ள 33 இஸ்ரேல் பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். அதற்கு ஈடாக இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்படுகின்றனர்.

இதுவரை 5 முறை விடுவிப்புகள் மூலம் 21 இஸ்ரேல் பணயக்கைதிகளும், 730 பாலஸ்தீன சிறை கைதிகளும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

எனினும், பாலஸ்தீன எல்லையின் மேற்கு கரைக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | காஸா மருத்துவர்களை துன்புறுத்தும் இஸ்ரேல் ராணுவம்!

பிரிட்டனில் இந்திய வம்சாவளி பெண்ணுக்கு இனப் பாகுபாடு!

பிரிட்டனில் இந்திய வம்சாவளி பெண் ஒருவரை அந்நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் ஓடும் ரயிலில் இனரீதியாக அவதூறாகப் பேசி மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் இருந்து மான்செஸ்டர் செல்லும் ரயி... மேலும் பார்க்க

லிபியா: படகு கவிழ்ந்த விபத்தில் 16 பாகிஸ்தானியர்கள் பலி!

லிபியாவில் 64 பேருடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் உயிரிழந்தனர். இவர்கள் பாகிஸ்தானில் இருந்து சட்டவிரோதமாக படகு மூலம் வந்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் 37 பே... மேலும் பார்க்க

பிணைக் கைதிகளை விடுவிக்காவிட்டால் போரைத் தொடங்குவோம்: இஸ்ரேல்

ஹமாஸ் பிடித்துவைத்துள்ள பிணைக் கைதிகள் அனைவரையும் சனிக்கிழமைக்குள் விடுவிக்காவிட்டால் போரைத் தொடங்குவோம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.மேலும், காஸாவைச் சுற்று பாதுகாப்புப் ... மேலும் பார்க்க

சிங்கப்பூரில் பயங்கரவாத தாக்குதலுக்கு வாய்ப்பு! உள்துறை எச்சரிக்கை

சிங்கப்பூரில்பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தப்படலாம் என்றும், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் உள்துறை அமைச்சர் சண்முகம் தெரிவித்துள்ளார்.பயங்கரவாத சதித் திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் பெண் உள்பட ம... மேலும் பார்க்க

காஸா மருத்துவர்களை துன்புறுத்தும் இஸ்ரேல் ராணுவம்!

காஸாவில் இருந்து சிறைபிடிக்கப்பட்ட மருத்துவர்களை இஸ்ரேல் ராணுவம் துன்புறுத்துவதாக அவர்களின் வழக்குரைஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். போரின்போது முதலுதவிப் பணிகளில் ஈடுபட்டிருந்த மருத்துவர்களை சட்டவிரோதம... மேலும் பார்க்க

பொலிவியாவில் தொடர் கனமழை, வெள்ளம்! 24 பேர் பலி!

பொலிவியா நாட்டில் தொடர் கனமழை பெய்து வருவதால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர் மழையால் 8 மாகாணங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் முழுக்க மழ... மேலும் பார்க்க