செய்திகள் :

YouTuber: ``குடும்ப உறவை சீரழிக்கும் ஆபாச பேச்சு'' -பிரபல யூடியூபர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு

post image

YouTuber: சோசியல் மீடியா பிரபலங்களான ரன்வீர் அல்லாபாடியா மற்றும் அபூர்வா மகிஜா, காமெடியன் சமய் ரைனா ஆகியோர் இணைந்து யூடியூப்பில் ‘India’s Got Latent'என்ற நிகழ்ச்சியை நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் 30-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இதில் கலந்து கொண்ட ரன்வீர் போட்டியாளர் ஒருவரிடம், "உங்கள் வாழ்நாள் முழுக்க பெற்றோர் ஒவ்வொரு நாளும் உடலுறவு கொள்வதை பார்ப்பீர்களா அல்லது அதை பார்ப்பதை நிறுத்த ஒரு முறை அவர்களுடன் அதில் பங்கேற்பீர்களா" என்று கேட்டு சர்ச்சையை கிளப்பி இருந்தார். இக்கருத்துக்கு நாடு முழுவதும் சர்ச்சையும் எதிர்ப்பும் கிளம்பி இருக்கிறது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ரன்வீர் அல்லாபாடியா, அபூர்வா மற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு மும்பை போலீஸார் சம்மன் அனுப்பினர். சிவசேனா எம்.பி.க்கள் பிரியங்கா சதுர்வேதி, நரேஷ் மஸ்கே ஆகியோர் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பாராளுமன்றத்தில் தெரிவித்தனர்.

YouTuber அபூர்வா மகிஜா

அஸ்ஸாம் போலீஸாரும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்தனர். தேசிய பெண்கள் கமிஷன், ரன்வீர் உள்பட இந்த ஷோவில் பங்கேற்றவர்களுக்கு சம்மன் அனுப்பியது. மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸும் இந்நிகழ்ச்சி குறித்து கண்டனம் தெரிவித்திருந்தார். மும்பையில் இன்று அபூர்வா கார்ரோடு போலீஸ் நிலையத்தில் ஆஜராகி வாக்குமூலம் கொடுத்தார்.

இந்நிலையில், இன்று சன்மதி பாண்டே என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மும்பை போலீஸார் இந்நிகழ்ச்சியை நடத்தியவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளனர். சன்மதி பாண்டே தனது புகாரில், திருமணம் என்பது ஒரு மத சடங்கு. அதனை அவமதிக்கும் விதமாக ரன்வீர் பேசியுள்ளார்.

அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அபூர்வா மகிஜா, அருணாச்சல பிரதேச உணவு முறை குறித்து பேசியிருப்பது வடகிழக்கு மாநில அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அமைந்துள்ளது. அருணாச்சல பிரதேச மக்கள் நாய்களை சாப்பிடுவதாக குறிப்பிட்டுள்ளார்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

யூடியூப்பர் ஆசிஷ் என்பவரையும் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையில் மும்பை போலீஸார் ரன்வீர், அபூர்வா மற்றும் காமெடியன் சமய் ரைனா ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர். அதில் இந்திய கலாச்சாரம் மற்றும் குடும்ப உறவை சீரழிக்கும் விதமாக பேசியதாக போலீஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தெலங்கானாவில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட 250 கிலோ கஞ்சா - சிக்காமல் தப்பிய குற்றவாளிகள்

ராமநாதபுரம் கடலோர பகுதிகள் வழியாக இலங்கைக்கு கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தப்படுவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் கடந்த இரு நாள்களுக்கு முன் ஏர்வாடி அருகே உள்ள பிச்சை மூப்பன் வலசை கிராம பகுதியில் ... மேலும் பார்க்க

யாசகம் பெறும் பெண்ணுடன் திருமணம் மீறிய உறவு... கொலையில் முடிந்த சோகம்; இளைஞர் கைது..!

திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் கடந்த மாதம் 3 -ம் தேதி திருச்சி டு சென்னை பைபாஸ் சாலையோர முள் புதரில் அடையாளம் தெரியாத 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சடலம் கிடப்பதாக சமயபுரம் காவல் நிலையத்திற்கு தகவ... மேலும் பார்க்க

மாத்தூர் தொட்டில் பாலத்தில் காமராஜர் கல்வெட்டு உடைப்பு; போலீஸ் விசாரணை!

கன்னியாகுமரி மாவட்டம், அருவிக்கரை ஊராட்சியில் மாத்தூர் பகுதியில் தொட்டில் பாலம் அமைந்துள்ளது. ஒருபுறம் அருவிக்கரை ஊராட்சியையும் மறுபுறம் வேர்கிளம்பி பேரூராட்சியையும் இணைக்கும் வகையில் மாத்தூர் தொட்டில... மேலும் பார்க்க

விருதுநகர்: நகை, கைத்துப்பாக்கி பிடிபட்ட வழக்கு; போலீஸ்காரர் உட்பட இருவர் கைது!

விருதுநகர் மாவட்டம், வச்சகாரப்பட்டி அருகே நகை, கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் பிடிபட்ட சம்பவத்தில் இரண்டு பேரை கைது செய்துள்ளனர். இது குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்க... மேலும் பார்க்க

தென்காசி: அதீத துர்நாற்ற்றம்... புதர் அருகே எரிந்த நிலையில் பெண்ணின் சடலம்! - போலீஸ் விசாரணை

தென்காசி மாவட்டத்தில் உடல் எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், " தென்காசியை அடுத்த... மேலும் பார்க்க

கரூர் தண்டவாளத்தில் விரிசல்; ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியரின் துரித செயல்; 100 மீட்டர் முன்பு நின்ற ரயில்

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள திருக்காம்புலியூர் பகுதியில் கரூர் - திருச்சி ஒருவழி ரயில் பாதையில் ரயில்வே தண்டவாளம் விரிசல் ஏற்பட்டு உடைந்துள்ளது. இந்நிலையில், அதன் அருகே குடியிருந்து வரு... மேலும் பார்க்க