செய்திகள் :

லிபியா சிறையிலிருந்து 24 அகதிகள் விடுதலை!

post image

வட அப்பிரிக்க நாடான லிபியாவின் சிறையிலிருந்து 24 அகதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் திரிப்பொலியிலுள்ள அபுஸ்லியென் சிறையிலிருந்து அந்நாட்டில் தஞ்சம் புகுந்த பெண்கள் குழந்தைகள் உள்பட 24 அகதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா.வின் அகதிகள் ஆணையம் நேற்று (பிப்.11) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அந்த ஆணையம் சார்பில் விடுதலை செய்யப்பட்ட அகதிகள் அனைவரின் பெயர்களையும் பதிவு செய்ப்பட்டு அவர்களுக்கு தேவையான போர்வைகள், ஆடைகள், அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் மருத்துவ உதவிகள் ஆகிவை வழங்கப்பட்டு தற்காலிகள் தங்குமிடங்களில் அவர்களை தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், லிபியா சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள மீதமுள்ள அகதிகள் மற்றும் புகலிடம் தேடி அந்நாட்டிற்குள் தஞ்சமடைந்தவர்கள் ஆகியோரை விடுவிக்க அந்நாட்டு அதிகாரிகளை தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக ஐ.நா. ஆணையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க:இலவச மதுபானம், கேளிக்கை விடுமுறைகள் வழங்கி ஊழியர்களை ஈர்க்கும் நிறுவனம்!

இந்நிலையில், நேற்று (பிப்.11) லிபியா உள்துறை அமைச்சகம் கூறுகையில் லிபியாவிற்குள் சட்டவிரோதமாக குடியேறிய நைஜீரிய நாட்டு மக்கள் சிலர் அவர்களது தாயகத்திற்கு நாடு கடத்தியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, அந்நாட்டு உள்துறை அமைச்சகத்தின் சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் லிபியா நாட்டினுள் சட்டவிரோதமாக சுமார் 30 லட்சம் பேர் குடியேறியுள்ளதாகவும், இதனால் அந்நாடு பெரும் அளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த விவகாரத்தில் சர்வதேச சமூகம் உதவியளிக்கவில்லையென்றால் அவர்கள் வலுக்கட்டாயமாக சொந்த நாடுகளுக்கு நாடு கடத்தப்படுவார்கள் என எச்சரித்துள்ளது.

அரசு பள்ளி சுவர் இடிந்து விழுந்து விபத்து! 3 மாணவர்கள் காயம்!

புதுச்சேரியில் அரசு பள்ளி சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 3 மாணவர்கள் காயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.புதுச்சேரி தவளகுப்பம் அடுத்த புதுக்குப்பத்தில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது.... மேலும் பார்க்க

மாசி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று(பிப். 12) மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. கேரள மாநிலம், சபரிமலையில் உள்ள பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோயிலில் வருடாந்திர மண்டல பூஜை காலம் கடந்த நவம்பா் 1... மேலும் பார்க்க

புதிய ஆளுநர் கையெழுத்துடன் ரூ.50 நோட்டுக்கள்! ஆர்பிஐ தகவல்!

இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநரின் கையெழுத்துடன் ரூ.50 பணத்தாள்கள் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்திய ரிசர்வ் வங்கி இன்று (பிப்.12) வெளியிட்டுள்ள அறிக்கையில் புதிய ஆளுநராக பதவியேற... மேலும் பார்க்க

மீண்டும் சின்ன திரையில் நதியா!

நடிகை நதியா சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுள்ளார்.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சி சூப்பர் சிங்கர் ஜூனியர். இந்நிகழ்ச்சியின் 10-வது சீசன... மேலும் பார்க்க

இந்திய எல்லையில் 1.1 கிலோ போதைப் பொருள் பறிமுதல்! 2 பேர் கைது!

பஞ்சாப் மாநிலத்திலுள்ள இந்திய எல்லையில் 1.1 கிலோ அளவிலான போதைப் பொருள் கடத்த முயன்ற 2 பேர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடி... மேலும் பார்க்க

காதலர் நாள்: திரையரங்குகளில் வெளியாகும் 10 படங்கள்!

காதலர் நாளை கொண்டாடும் வகையில் திரையரங்குகளில் வரும் பிப். 14 ஆம் தேதி 10 படங்கள் வெளியாகவுள்ளன.இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், நவீன இளைஞர்களின் காதலைப் பேசும் படமாக உருவாகியுள்ள திரைப்படம் ’2கே லவ... மேலும் பார்க்க