செய்திகள் :

அரசு பள்ளி சுவர் இடிந்து விழுந்து விபத்து! 3 மாணவர்கள் காயம்!

post image

புதுச்சேரியில் அரசு பள்ளி சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 3 மாணவர்கள் காயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி தவளகுப்பம் அடுத்த புதுக்குப்பத்தில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. 1991 ஆம் ஆண்டு கட்டப்பட்ட கட்டடத்தில் இந்தப் பள்ளி இயங்கி வருகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவர்கள் இங்கு பயின்று வருகின்றனர்.

இந்த கட்டடம் மிகப் பழமையான நிலையில் உள்ளதால், இது தொடர்பாக பெற்றோர் பலமுறை கல்வித்துறைக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை வகுப்பறைகள் சீரமைக்கப்படவில்லை.

இந்த நிலையில், இன்று பள்ளி துவங்கிய நிலையில் பள்ளி வளாகத்தில் உள்ள குடிநீர் குழாய்க்கு தண்ணீர் பிடிக்க மாணவர்கள் சென்றபோது, அதன் சுவர் திடீரென இடிந்து விழுந்து 3 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.

இதையும் படிக்க: பிரதமர் மோடியின் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

உடனடியாக பள்ளி ஆசிரியர்களும், ஊழியர்களும் மாணவர்களை மீட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போது மாணவர்கள் உடல் நலத்துடன் இருப்பதாகவும், கல்வித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று மாற்று நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தகவல் அறிந்து மருத்துவமனைக்கு சென்று படுகாயம் அடைந்த மாணவ மாணவிகளை புதுச்சேரி பேரவைத் தலைவர் செல்வம் பார்வையிட்டு நலம் விசாரித்தார். தொடர்ந்து விபத்து நடந்த பள்ளிக்கூடத்துக்கு சென்று பொதுப்பணித்துறை மற்றும் கல்வித் துறை அதிகாரிகளை அழைத்து பள்ளி கட்டடம் வேறு ஏதேனும் சேதம் அடைந்துள்ளதா என்பதை ஆய்வு செய்து அப்படி சேதம் அடைந்திருந்தால் உடனடியாக விரைந்து அதனை சரி செய்யுமாறு உத்தரவிட்டார்.

சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் நாடு கடத்தல்!

குஜராத் மாநிலத்தில் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் குடியேறிய வங்கதேசத்தினர் 15 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். மேலும், 35 பேர் மார்ச் மாத இறுதிக்குள் நாடு கடத்த திட்டமிட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.தலைநகர்... மேலும் பார்க்க

தென் கொரியா: மீன்பிடி படகு கவிழ்ந்ததில் 5 பேர் மாயம்!

தென் கொரியாவில் மீன்பிடி படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் மாயாமகியுள்ளனர். அந்நாட்டின் ஜேஜு தீவின் கடல் பகுதியில் 10 பேர் பயணம் செய்த 32 டன் எடையுள்ள மீன்பிடி படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான... மேலும் பார்க்க

ஆஸ்திரிய வலது சாரி தலைவரின் புதிய அரசமைக்கும் முயற்சிகள் தோல்வி!

மத்திய ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில் புதிய அரசை அமைக்க அந்நாட்டின் வலது சாரி தலைவரின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆஸ்திரியாவின் தீவிர வலது சாரி தலைவரான ஹெர்பெர்ட் க... மேலும் பார்க்க

தந்தை மீது மகள் புகார்! தாயின் உடல் தோண்டியெடுப்பு!

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் மகளின் புகாரின் அடிப்படையில் தாயின் உடலை காவல் துறையினர் தோண்டியெடுத்துள்ளனர்.அலப்புழாவைச் சேர்ந்த வி.சி.சாஜி (வயது 48) என்ற பெண், கடந்த பிப்.8 அன்று வீட்டின் படிகளி... மேலும் பார்க்க

மாசி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று(பிப். 12) மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. கேரள மாநிலம், சபரிமலையில் உள்ள பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோயிலில் வருடாந்திர மண்டல பூஜை காலம் கடந்த நவம்பா் 1... மேலும் பார்க்க

புதிய ஆளுநர் கையெழுத்துடன் ரூ.50 நோட்டுக்கள்! ஆர்பிஐ தகவல்!

இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநரின் கையெழுத்துடன் ரூ.50 பணத்தாள்கள் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்திய ரிசர்வ் வங்கி இன்று (பிப்.12) வெளியிட்டுள்ள அறிக்கையில் புதிய ஆளுநராக பதவியேற... மேலும் பார்க்க