செய்திகள் :

Kerala Ragging: அந்தரங்க உறுப்பில் தம்பிள்ஸை கட்டி தொங்கவிட்டு சித்திரவதை; கல்லூரியில் கொடூர ராகிங்

post image

கேரள மாநிலம் கோட்டயம் காந்தி நகரில் அரசு நர்ஸிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த நர்ஸிங் கல்லூரியைச் சேர்ந்த மூன்றாம் ஆண்டு மாணவர்கள் முதலாம் ஆண்டு மாணவர்களை கடந்த 3 மாதங்களுக்கு மேலாக கொடூரமாக ராகிங் செய்த சம்பவம் இப்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

முதலாம் ஆண்டு மாணவர்கள் 3 பேரை கூர்மையான பொருள்கள் மூலம் குத்தி காயம் ஏற்படுத்தி உள்ளனர். காயத்திலும் லோசன் ஊற்றி கொடுமைப்படுத்தி உள்ளனர். எல்லாவற்றுக்கும் மேலாக மாணவர்களை நிர்வாணமாக்கி அந்தரங்க உறுப்பில் தம்பிள்ஸை கட்டி தொங்கவிட்டும் ராகிங் செய்துள்ளனர்.

கோட்டயம் அரசு நர்ஸிங் கல்லூரி

தம்பிள்ஸ் கட்டி தொங்கவிடும்போது மாணவர்கள் கத்தினால் அவர்களின் வாயில் லோசன் ஊற்றி குரூரமாக ரசித்துள்ளனர். மூன்றாம் ஆண்டு மாணவர்கள் மது குடிக்க முதலாம் ஆண்டு மாணவர்கள் வாரம் ஒருமுறை சுழற்சி முறையில் பணம் கொடுக்க வேண்டும் என மிரட்டி பணம் வாங்கியுள்ளனர். சீனியரான மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு பயந்து ராகிங் கொடுமை பற்றி வெளியில் யாரிடமும் சொல்லாமல் இருந்ததாக பாதிக்கப்பட்ட 3 மாணவர்களும் தெரிவித்தனர்.

ராகிங் எல்லைமீறி சென்றதை அடுத்து கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்ததாகவும் முதலாம் ஆண்டு மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

ராகிங்கால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் ராகிங் தடுப்புச் சட்டப்படி கல்லூரி முதல்வர் விசாரணை நடத்தினார். அதில் ராகிங் செய்யப்பட்டது உண்மை என தெரியவந்ததை அடுத்து ராக்கிங்கில் ஈடுபட்ட மூன்றாம் ஆண்டு மாணவர்கள் 5 பேரை சஸ்பெண்ட் செய்தார்.

கைதுசெய்யப்பட்ட மாணவர்கள்

சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவர்களை போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதில், கோட்டயம் முந்நிலவு பகுதியைச் சேர்ந்த சாமுவேல் ஜாண்சன்,  வயநாடு நடவயல் பகுதியைச் சேர்ந்த ஜீவா, மலப்புறம் வண்டூரைச்சேர்ந்த ராகுல்ராஜ், மலப்புறம் மஞ்சேரியைச் சேர்ந்த ரிஜின் ஜித்து, கோட்டயம் கோருத்தோடு பகுதியைச் சேர்ந்த விவேக் ஆகியோர் ராகிங் செய்தது உறுதியானது. இதையடுத்து 5 மாணவர்களையும் போலீஸார் போலீஸார் கைது செய்தனர்.

சென்னை: தண்டவாளத்தில் தோழியோடு பேசிக்கொண்டு வந்த இளைஞர்... ரயில் மோதி உயிரிழந்த சோகம்!

சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூரில் இருந்து வண்டலூர் செல்லும் ரயில்வே தண்டவாளத்தில் இளைஞர் ஒருவரும், இளம்பெண் ஒருவர் சடலமாக கிடப்பதாக தாம்பரம் ரயில்வே போலீஸாருக்குகு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ரய... மேலும் பார்க்க

தெலங்கானாவில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட 250 கிலோ கஞ்சா - சிக்காமல் தப்பிய குற்றவாளிகள்

ராமநாதபுரம் கடலோர பகுதிகள் வழியாக இலங்கைக்கு கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தப்படுவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் கடந்த இரு நாள்களுக்கு முன் ஏர்வாடி அருகே உள்ள பிச்சை மூப்பன் வலசை கிராம பகுதியில் ... மேலும் பார்க்க

YouTuber: ``குடும்ப உறவை சீரழிக்கும் ஆபாச பேச்சு'' -பிரபல யூடியூபர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு

YouTuber: சோசியல் மீடியா பிரபலங்களான ரன்வீர் அல்லாபாடியா மற்றும் அபூர்வா மகிஜா, காமெடியன் சமய் ரைனா ஆகியோர் இணைந்து யூடியூப்பில் ‘India’s Got Latent'என்ற நிகழ்ச்சியை நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் 30-க... மேலும் பார்க்க

யாசகம் பெறும் பெண்ணுடன் திருமணம் மீறிய உறவு... கொலையில் முடிந்த சோகம்; இளைஞர் கைது..!

திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் கடந்த மாதம் 3 -ம் தேதி திருச்சி டு சென்னை பைபாஸ் சாலையோர முள் புதரில் அடையாளம் தெரியாத 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சடலம் கிடப்பதாக சமயபுரம் காவல் நிலையத்திற்கு தகவ... மேலும் பார்க்க

மாத்தூர் தொட்டில் பாலத்தில் காமராஜர் கல்வெட்டு உடைப்பு; போலீஸ் விசாரணை!

கன்னியாகுமரி மாவட்டம், அருவிக்கரை ஊராட்சியில் மாத்தூர் பகுதியில் தொட்டில் பாலம் அமைந்துள்ளது. ஒருபுறம் அருவிக்கரை ஊராட்சியையும் மறுபுறம் வேர்கிளம்பி பேரூராட்சியையும் இணைக்கும் வகையில் மாத்தூர் தொட்டில... மேலும் பார்க்க

விருதுநகர்: நகை, கைத்துப்பாக்கி பிடிபட்ட வழக்கு; போலீஸ்காரர் உட்பட இருவர் கைது!

விருதுநகர் மாவட்டம், வச்சகாரப்பட்டி அருகே நகை, கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் பிடிபட்ட சம்பவத்தில் இரண்டு பேரை கைது செய்துள்ளனர். இது குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்க... மேலும் பார்க்க