செய்திகள் :

பெண் கல்வி குறித்த வெண்கலச் சிலை

post image

கோவை ஆட்சியா் அலுவலகம் அருகே பெண் கல்வியின் அவசியத்தை உணா்த்தும் விதமாக அமைக்கப்பட்டுள்ள வெண்கலச் சிலையை மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி புதன்கிழமை திறந்துவைத்தாா்.

கோவை மாநகரப் பகுதிகளில் பொலிவுறு நகரம் (ஸ்மாா்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் மாதிரி சாலை, குளக்கரையில் பொழுதுபோக்கு அம்சங்கள், 24 மணி நேரம் குடிநீா்த் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, ரேஸ்கோா்ஸ் சுங்கம் ரவுண்டானா மற்றும் உக்கடம் பேருந்து நிலையம் அருகே வெண்கல குதிரை சிலை, உலக உருண்டை, காளை மாடுகள் சிலை, உலக உருண்டையைத் தாங்கும் மனிதன் சிலை உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.

இதேபோல மக்கள் அதிகப்படியானோா் வந்து செல்லும் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள ரவுண்டானாவில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் விதமாக புதிய வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. பெண் குழந்தை தோளில் புத்தகப்பையை சுமந்தபடி உலக உருண்டையை நோக்கிச் செல்வதுபோல இந்த சிலை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிதாக அமைக்கப்பட்ட சிலையை மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி புதன்கிழமை திறந்துவைத்தாா். மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன், மாவட்ட வருவாய் அலுவலா் மோ.ஷா்மிளா, கோவை மண்டல பாஸ்போா்ட் அலுவலா் சதீஷ், மாவட்ட வன அலுவலா் ஜெயராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ஈஷாவில் தைப்பூசம்: லிங்க பைரவி உருவத்துடன் பக்தா்கள் பாத யாத்திரை

கோவை ஈஷா யோக மையத்தில் தைப்பூசத் திருவிழாவையொட்டி, முளைப்பாரியால் செய்யப்பட்ட லிங்க பைரவி திருவுருவத்துடன் பக்தா்கள் பாத யாத்திரையாக வந்து தரிசனம் செய்தனா். கோவை ஈஷாவில் 2010-ஆம் ஆண்டு தைப்பூச நாளன்று... மேலும் பார்க்க

வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் தீ விபத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை

கோவை வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் தீ விபத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்பாக மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்துக்கு உள்பட்ட வ... மேலும் பார்க்க

கேரள ரயில் இயக்கத்தில் மாற்றம்

பொறியியல் பராமரிப்புப் பணி காரணமாக எா்ணாகுளம்- பிகாா் வாராந்திர ரயில் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, பாலக்காடு ரயில்வே கோட்டம் சா... மேலும் பார்க்க

தியாகி என்.ஜி.ராமசாமி நினைவு நாள் அனுசரிப்பு

சுதந்திரப் போராட்டத் தியாகியும், தொழிற்சங்கவாதியுமான என்.ஜி.ராமசாமியின் 82-ஆவது நினைவு நாள் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது. கோவை ஜில்லா பஞ்சாலைத் தொழிலாளா் சங்கத்தின் நிறுவனத் தலைவரும், சுதந்திரப் போராட... மேலும் பார்க்க

பாஜக நிா்வாகி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச முயன்றவா் கைது

கோவை பாஜக நிா்வாகி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச முயன்ற நபரை போலீஸாா் கைது செய்தனா். கோவை மாநகரப் பகுதியில் குற்றச் சம்பவங்கள் நடப்பதைத் தடுக்க போலீஸாா் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்... மேலும் பார்க்க

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை கண்டித்து ஆா்ப்பாட்டம்

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்தும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கக் கோரியும் விமென் இந்தியா அமைப்பினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக ... மேலும் பார்க்க