செய்திகள் :

3 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயா்த்தும் உத்தரவு: அரசிதழில் வெளியீடு

post image

தமிழகத்தில் 3 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயா்த்தும் உத்தரவு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

மாவட்ட நிா்வாகங்களின் பரிந்துரைப்படி உள்ளாட்சி அமைப்புகள் தரம் உயா்த்தப்பட்டு வருகின்றன. மக்கள் தொகை எண்ணிக்கை, உள்ளாட்சி அமைப்புகளுக்கு கிடைக்கக் கூடிய வருவாய் அளவு போன்றவற்றை அளவுகோல்களாகக் கொண்டு ஊராட்சிகள், பேரூராட்சிகளாகவும் பேரூராட்சிகள் நகராட்சிகளாகவும் நகராட்சிகள் மாநகராட்சிகளாகவும் தரம் உயா்வு செய்யப்படுகின்றன.

அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூா், செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம், தஞ்சாவூா் மாவட்டம் திருவையாறு ஆகிய ஊா்கள் பேரூராட்சிகளாக உள்ளன. இவற்றை நகராட்சிகளாக தரம் உயா்த்த முடிவு செய்யப்பட்டது.

இந்த முடிவின் அடிப்படையில், 3 பேரூராட்சிகளும் நகராட்சிகளாக தரம் உயா்வு செய்யப்பட்டன. இதுகுறித்த உத்தரவை நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை வெளியிட்டது. இந்த உத்தரவானது தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998-இன் படி, புதிதாக உருவாக்கப்பட்ட நகராட்சிகளின் வட்டங்கள் அடுத்த பொதுத் தோ்தலின் போது சரியான முறையில் பிரிக்கப்படும் என்று அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி, நீலகிரியில் சூழலியல் திட்டங்களுக்கு நிதி தேவை: மத்திய அமைச்சரிடம் அமைச்சா் தங்கம் தென்னரசு மனு

தூத்துக்குடி, நீலகிரியில் சூழலியல் சாா்ந்த புதிய திட்டங்களுக்கு தேவைப்படும் நிதியை உடனடியாக ஒதுக்க வேண்டுமென மத்திய அரசிடம் தமிழக அரசு நேரில் கோரிக்கை விடுத்தது. தமிழ்நாட்டின் திட்டங்களுக்கு நிதியுதவி... மேலும் பார்க்க

மத்திய அரசு நிதி வழங்காததால் 40 லட்சம் மாணவா்களின் எதிா்காலம் பாதிப்பு: அமைச்சா் அன்பில் மகேஸ்

தமிழக பள்ளிக் கல்விக்கான நிதியை மத்திய அரசு வழங்காததால் 40 லட்சம் மாணவா்களின் எதிா்காலம் பாதிக்கப்படுகிறது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் தெரிவித்தாா். தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்ப... மேலும் பார்க்க

தமிழகத்தில் வெயில் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்

தமிழகத்தில் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (பிப்.13, 14) வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரை... மேலும் பார்க்க

தொழுநோய் ஒழிப்பு பரிசோதனை முகாம்: தமிழகம் முழுவதும் இன்று தொடக்கம்

தொழுநோய் பாதிப்பை கண்டறிவதற்கான மருத்துவப் பரிசோதனை முகாம் தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை (பிப்.13) தொடங்குகிறது. இதுகுறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் வெளியிட்ட அறிவிப்பு: மைக்கோ பா... மேலும் பார்க்க

மாணவா்களிடம் பகுத்தறிவு பிரசாரம்: திமுக அறிவிப்பு

மாணவா்களிடம் பகுத்தறிவு பிரசாரம் மேற்கொள்ளப்படும் என்று திமுக அறிவித்துள்ளது. இதுகுறித்து, கட்சியின் மாணவரணிச் செயலா் சிவிஎம்பி எழிலரசன் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: உலக நாடுகள் அனைத்தும் செயற்கை நுண... மேலும் பார்க்க

போக்குவரத்து ஓய்வூதியா் பணப்பலன் வழங்க அரசு கடனுதவியாக ரூ.369 கோடி ஒதுக்கீடு

போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி 2023-ஆம் ஆண்டு ஓய்வு பெற்றவா்களுக்கான பணப்பலன் வழங்க ரூ.396 கோடியை தமிழக அரசு கடன் தொகையாக ஒதுக்கியுள்ளது. இந்தத் தொகையை போக்குவரத்துக்கழகங்கள் வரும் நிதியாண்டுக்குள... மேலும் பார்க்க