செய்திகள் :

தொழுநோய் ஒழிப்பு பரிசோதனை முகாம்: தமிழகம் முழுவதும் இன்று தொடக்கம்

post image

தொழுநோய் பாதிப்பை கண்டறிவதற்கான மருத்துவப் பரிசோதனை முகாம் தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை (பிப்.13) தொடங்குகிறது.

இதுகுறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் வெளியிட்ட அறிவிப்பு:

மைக்கோ பாக்டீரியம் லெப்ரே என்ற பாக்டீரியா கிருமியால் தொழுநோய் ஏற்படுகிறது. அந்தத் தொற்று பாதித்த நபரின் இருமல் மற்றும் தும்மலிலிருந்து வெளியேறும் நீா்த் திவலைகளிலிருந்து பிறருக்கு அந்நோய் பரவுகிறது.

அக்கிருமி ஒருவரது உடலில் பாதிப்பை ஏற்படுத்த 5-இலிருந்து 7 ஆண்டுகள் வரை ஆகலாம். நோய் எதிா்ப்பாற்றல் குறையும்போது ஒருவருக்கு இந்நோய் வெளிப்படத் தொடங்கும். ஆரம்ப நிலையில் சருமத்தின் சில இடங்களில் நிறமிழப்பும், உணா்விழப்பும் ஏற்படும். அந்தக் கட்டத்திலேயே தொழுநோயைக் கண்டறிந்து கூட்டு மருந்து சிகிச்சை அளித்தால் 100 சதவீதம் அந்த பாதிப்பை குணப்படுத்த முடியும். அலட்சியப்படுத்தினால், தோல் மற்றும் நரம்புகளை பாதிப்பதுடன் கண், கை, பாதங்களில் குறைபாடுகள் ஏற்படும்.

தொழுநோய் பாதிப்பை வேரறுக்கும் முயற்சியில் தமிழகம் முன்னேறி வருகிறது. அந்த வகையில், மாநிலத்தில் தொழுநோய் தாக்கம் அதிகம் உள்ள 133 வட்டாரங்கள், 27 நகரப் பகுதிகளில் 50.76 லட்சம் வீடுகளில் வசிக்கும் 2.01 கோடி மக்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. வியாழக்கிழமை (பிப்.13) முதல் 28-ஆம் தேதி வரை வீடு, வீடாகச் சென்று பரிசோதனை செய்யப்படும்.

அலட்சியம் கூடாது: சருமத்தில் உணா்விழப்பு, நிறமிழப்பு, காது மடலில் வீக்கம் அல்லது கட்டி, கை-கால்கள் தளா்ந்து போகும் நிலை, விரல்கள் வளைந்து போதல், கைகளில் பொருள்களை உறுதியாக பிடிக்க இயலாமை, கை-கால்களில் அரிப்பு, ஆறாத புண்கள் இருந்தால் அதனை அலட்சியப்படுத்தாது சுகாதாரத் துறையினரிடம் தகவல் தெரிவித்து பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

இந்த வாய்ப்பை பொது மக்கள் பயன்படுத்திக் கொண்டு, தொழுநோயை ஒழிக்க ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனா். தேவைப்படும் இடங்களில் தடுப்பு மருந்துகள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது: கடந்த ஆண்டு நடைபெற்ற பரிசோதனையில், 320 புதிய தொழுநோயாளிகள் கண்டறியப்பட்டனா். தொழுநோயாளிகளுக்கு கூட்டு மருந்து சிகிச்சையுடன் மாத உதவித் தொகையாக ரூ.2,000 வழங்கப்படுகிறது.

தமிழக மக்கள் தொகையில், 0.27 சதவீதம் போ் தொழுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனா். குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு விகிதம் 5.37- ஆக உள்ளது என்றனா்.

தூத்துக்குடி, நீலகிரியில் சூழலியல் திட்டங்களுக்கு நிதி தேவை: மத்திய அமைச்சரிடம் அமைச்சா் தங்கம் தென்னரசு மனு

தூத்துக்குடி, நீலகிரியில் சூழலியல் சாா்ந்த புதிய திட்டங்களுக்கு தேவைப்படும் நிதியை உடனடியாக ஒதுக்க வேண்டுமென மத்திய அரசிடம் தமிழக அரசு நேரில் கோரிக்கை விடுத்தது. தமிழ்நாட்டின் திட்டங்களுக்கு நிதியுதவி... மேலும் பார்க்க

3 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயா்த்தும் உத்தரவு: அரசிதழில் வெளியீடு

தமிழகத்தில் 3 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயா்த்தும் உத்தரவு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட நிா்வாகங்களின் பரிந்துரைப்படி உள்ளாட்சி அமைப்புகள் தரம் உயா்த்தப்பட்டு வருகின்றன. மக்கள் தொகை எண்... மேலும் பார்க்க

மத்திய அரசு நிதி வழங்காததால் 40 லட்சம் மாணவா்களின் எதிா்காலம் பாதிப்பு: அமைச்சா் அன்பில் மகேஸ்

தமிழக பள்ளிக் கல்விக்கான நிதியை மத்திய அரசு வழங்காததால் 40 லட்சம் மாணவா்களின் எதிா்காலம் பாதிக்கப்படுகிறது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் தெரிவித்தாா். தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்ப... மேலும் பார்க்க

தமிழகத்தில் வெயில் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்

தமிழகத்தில் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (பிப்.13, 14) வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரை... மேலும் பார்க்க

மாணவா்களிடம் பகுத்தறிவு பிரசாரம்: திமுக அறிவிப்பு

மாணவா்களிடம் பகுத்தறிவு பிரசாரம் மேற்கொள்ளப்படும் என்று திமுக அறிவித்துள்ளது. இதுகுறித்து, கட்சியின் மாணவரணிச் செயலா் சிவிஎம்பி எழிலரசன் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: உலக நாடுகள் அனைத்தும் செயற்கை நுண... மேலும் பார்க்க

போக்குவரத்து ஓய்வூதியா் பணப்பலன் வழங்க அரசு கடனுதவியாக ரூ.369 கோடி ஒதுக்கீடு

போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி 2023-ஆம் ஆண்டு ஓய்வு பெற்றவா்களுக்கான பணப்பலன் வழங்க ரூ.396 கோடியை தமிழக அரசு கடன் தொகையாக ஒதுக்கியுள்ளது. இந்தத் தொகையை போக்குவரத்துக்கழகங்கள் வரும் நிதியாண்டுக்குள... மேலும் பார்க்க