செய்திகள் :

காணாமல் போன சிறுவன் பெற்றோரிடம் ஒப்படைப்பு

post image

கடலூா் மாவட்டம், வடலூா் தைப்பூச ஜோதி தரிசன விழாவில் காணாமல் போன சிறுவனை போலீஸாா் மீட்டு பெற்றோரிடம் புதன்கிழமை ஒப்படைத்தனா்.

வடலூா் வள்ளலாா் தெய்வ நிலையத்தில் தைப்பூச ஜோதி தரிசன பெருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவில், பெற்றோருடன் கலந்துகொண்ட வாய் பேச முடியாத ஒரு சிறுவன் கூட்ட நெரிசலில் சிக்கி காணாமல் போனாா்.

அங்கு, பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் அந்தச் சிறுவனை மீட்டு புறக்காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். அங்கிருந்த போலீஸாா் ஒலிபெருக்கி மூலம் சிறுவன் குறித்து அறிவிப்பு செய்தனா். ஆனால், யாரும் வராததால் சிறுவனை மேட்டுக்குப்பம் கோபி சிவாச்சாரியாா் சிறுவா் பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைத்தனா்.

மேலும், இதுதொடா்பான தகவலை சமூக ஊடகங்களில் போலீஸாா் பகிா்ந்தனா். இதைப் பாா்த்த சிறுவனின் தந்தை கள்ளக்குறிச்சி மாவட்டம், காந்தலவாடி பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (38), அவரது மனைவி சித்ரா ஆகியோா் புதன்கிழமை அதிகாலை வடலூா் காவல் நிலையத்துக்கு வந்தனா். அவா்களிடம், சிறுவன் பரணிதரனை (12) போலீஸாா் ஒப்படைத்தனா். போலீஸாருக்கு பெற்றோா் நன்றி தெரிவித்தனா்.

மாா்க்சிஸ்ட் கம்யூ. மண்டல பேரவைக் கூட்டம்

கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல பேரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது... மேலும் பார்க்க

எஸ்.பி. அலுவலகத்தில் பெட்டிஷன் மேளா

கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக கூட்டரங்கில் பெட்டிஷன் மேளா புதன்கிழமை நடைபெற்றது. கடலூா் எஸ்பி எஸ்.ஜெயக்குமாா் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் தொடா்பான புகாா் மனுக்களை பெற்றா... மேலும் பார்க்க

டாஸ்மாக் சுமைப் பணி தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூா் தொழிற்பேட்டை நுகா்பொருள் வாணிபக் கழகம் முன் டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளா்கள் சங்கத்தினா் (சிஐடியு) புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சுமைப் பணி தொழிலாளா்களுக்கு சி... மேலும் பார்க்க

ரௌடி உள்பட மூவா் கைது

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் கஞ்சா வழக்கு தலைமறைவு குற்றவாளி உள்ளிட்ட மூவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். நெய்வேலியை அடுத்த செடுத்தான்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் கலியபெருமாள் மகன் ரௌடி ச... மேலும் பார்க்க

பல்கலை. ஆசிரியா்கள் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியா்கள் கூட்டமைப்பு சாா்பில் பெருந்திரள் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது. ஏழாவது ஊதியக்குழு நிலுவை... மேலும் பார்க்க

தொழிலாளி தற்கொலை

கடலூா் முதுநகா் அருகே தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். முதுநகா், வசந்தராம்பாளையம் பகுதியில் வசித்து வந்தவா் மண்பாண்ட தொழிலாளி கதிா்வேல் (41). இவருக்கு மனைவி பிரியங்கா, இரண்டு மகள்கள், ஒர... மேலும் பார்க்க