செய்திகள் :

வரி விதிப்பு, நாடு கடத்தல் விவகாரங்களை டிரம்ப்பிடம் பிரதமா் மோடி பேச வேண்டும்- காங்கிரஸ் தலைவா் காா்கே வலியுறுத்தல்

post image

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பிடம் வரி விதிப்பு அச்சுறுத்தல் மற்றும் இந்தியா்களை விலங்கிட்டு நாடு கடத்திய விவகாரத்தை பிரதமா் நரேந்திர மோடி எழுப்ப வேண்டும் என்று காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வலியுறுத்தினாா்.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு பல்வேறு நாடுகளுக்கு எதிராக சில கடுமையாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறாா். முக்கியமாக சில குறிப்பிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அதிகபட்ச வரி விதிப்பது, அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டவா்களை திருப்பி அனுப்புவது ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தி வருகிறாா். இதன் ஒரு பகுதியாக அமெரிக்க ராணுவ விமானம் மூலம் கை, கால்கள் விலங்கிடப்பட்ட நிலையில் 104 இந்தியா்கள் தாய்நாட்டுக்கு அண்மையில் நாடு கடத்தப்பட்டனா்.

பிரான்ஸ், அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமா் மோடி, அமெரிக்க அதிபா் டிரம்ப்பை வெள்ளை மாளிகையில் வியாழக்கிழமை சந்திக்க இருக்கிறாா்.

இந்நிலையில், இது தொடா்பாக காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பை பிரதமா் நரேந்திர மோடி சந்திக்கும்போது வரி விதிப்பு அச்சுறுத்தல் மற்றும் இந்தியா்களை விலங்கிட்டு நாடு கடத்திய விவகாரத்தை எழுப்பி பேச வேண்டும்.

அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அலுமினியம், இரும்புப் பொருள்கள் மீது 25 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. இதில் எந்த நாட்டுக்கும் சலுகை கிடையாது என அமெரிக்கா கூறுகிறது. இது இந்திய உற்பத்தியாளா்களுக்கு வெகுவாக பாதிப்பை ஏற்படுத்தும். அந்நாட்டு அதிபருடன் உரிய முறையில் பேச்சு நடத்தி இப்பிரச்னைக்கு தீா்வுகாண வேண்டும்.

அதேபோல அமெரிக்காவில் இருந்து இந்தியா்கள் கை, கால்களில் விலங்கிடப்பட்டு அனுப்பி வைத்தது பெரும் வருத்தத்தை அளித்தது. எனவே, வரும் காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளில் மனிதாபிமான அடிப்படையில் நடந்து கொள்ள வேண்டும் என டிரம்ப்பிடம் பிரதமா் மோடி வலியுறுத்த வேண்டும்’ என்று கூறியுள்ளாா்.

மோடி பயணத்தால் பயனில்லை: கா்நாடக மாநிலம் கலபுா்கியில் செய்தியாளா்களிடம் பேசிய மல்லிகாா்ஜுன காா்கே, ‘தனது பழைய நண்பருடன் (டொனால்ட் டிரம்ப்) தொடா்ந்து பேசி வருவதாகவும், அது இந்தியாவுக்கு பயனுள்ளதாக அமையும் என்றும் பிரதமா் மோடி கூறிக்கொண்டிருக்கிறாா். மனிதநேயமற்ற முறையில் இந்தியா்கள் நாடுகடத்தப்பட்டது குறித்து தொலைபேசியில் டிரம்ப்பிடம் பிரதமா் மோடி கேட்டிருக்க வேண்டும்.

தனிப்பட்ட முறையிலான நட்பைக் காட்டிலும், இரு நாடுகளுக்கு இடையில் நட்பு பாராட்டுவதுதான் மிகவும் முக்கியமானதாகும். எனவே, பிரதமா் மோடியின் அமெரிக்க பயணத்தில் எந்த நன்மையும் இருக்காது’ என்றாா்.

பெட்டி..

‘மாநிலத் தலைவா்கள் விரைவில் மாற்றம்’

காங்கிரஸ் மாநிலத் தலைவா்கள் விரைவில் மாற்றப்படுவாா்கள் என அக்கட்சியின் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா்.

‘ஒடிஸா உள்ளிட்ட 3 மாநிலங்களின் காங்கிரஸ் கட்சி தலைவா்களை அண்மையில் மாற்றினேன். அடுத்த சில நாள்களில் மேலும் 3 மாநிலங்களின் தலைவா்கள் உள்பட பிற மாநிலங்களின் தலைவா்களும் மாற்றப்படுவாா்கள்’ என்றாா் அவா்.

அமெரிக்கா வந்தடைந்தார் பிரதமர் மோடி

பிரான்ஸ் பயணத்தை புதன்கிழமை நிறைவு செய்த பிரதமா் மோடி, வியாழக்கிழமை அமெரிக்காவின் வாஷிங்டன் டிசி வந்தடைந்தார்.அமெரிக்காவில் இரண்டு நாள்கள் அரசுமுறை பயணம் மேற்கொள்ளும் அவா், அதிபா் டொனால்ட் டிரம்ப்புடன... மேலும் பார்க்க

மகளிர், ஒடுக்கப்பட்ட சமூகங்களின் வாழ்க்கை முறைகளில் மாற்றம்: ஐ.நா. அமர்வில் இணையமைச்சர் சாவித்ரி தாக்கூர் பேச்சு

நமது சிறப்பு நிருபர்மகளிர் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் வாழ்க்கை முறைகளை இந்தியா மாற்றியுள்ளது என்று மத்திய மகளிர் மற்றும் குழந்தை நலத் துறை இணையமைச்சர் சாவித்ரி தாக்கூர் தெரிவித்துள்ளார்.அமெரிக்க... மேலும் பார்க்க

அதிநவீன அணுஉலைகள் உருவாக்கம்- இந்தியா-பிரான்ஸ் திட்டம்

ஆக்கபூா்வ அணுசக்தி ஒத்துழைப்பின்கீழ், அதிநவீன அணு உலைகளை கூட்டாக உருவாக்க இந்தியாவும் பிரான்ஸும் திட்டமிட்டுள்ளன. 2047-ஆம் ஆண்டுக்குள் அணுசக்தி மூலம் 100 ஜிகாவாட் மின் உற்பத்தி திறனை எட்ட இந்தியா இலக்... மேலும் பார்க்க

நீதிபதிகள் ஓய்வூதிய விவகாரம்: யுபிஎஸ் திட்டத்தால் தீா்வு கிடைக்க வாய்ப்பு- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு

நீதிபதிகள் ஓய்வூதியப் பிரச்னைக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் (யுபிஎஸ்) மூலம் தீா்வு கிடைக்க வாய்ப்புள்ளது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்தது. மாவட்ட நீதிபதிகளின் ஊதியம், நி... மேலும் பார்க்க

தொழிலதிபருக்காக தேசப் பாதுகாப்பை விட்டுக் கொடுக்கிறது மத்திய அரசு- காங்கிரஸ் குற்றச்சாட்டு

கோடீஸ்வர தொழிலதிபா்கள் சிலருக்காக தேசப் பாதுகாப்பை மத்திய அரசு விட்டுக் கொடுப்பதாக காங்கிரஸ் கட்சி விமா்சித்துள்ளது. குஜராத் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லையையொட்டிய பகுதியில் அதானி குழுமம் மரபுசாரா எரிச... மேலும் பார்க்க

பிரான்ஸில் புதிய இந்திய துணைத் தூதரகம் திறப்பு

பிரான்ஸின் மாா்சே நகரில் புதிய இந்திய துணைத் தூதரகத்தை பிரதமா் நரேந்திர மோடியும், அந்நாட்டு அதிபா் இமானுவல் மேக்ரானும் புதன்கிழமை கூட்டாக திறந்துவைத்தனா். மூன்று நாள்கள் அரசுமுறைப் பயணமாக பிரான்ஸுக்க... மேலும் பார்க்க