செய்திகள் :

நீதிபதிகள் ஓய்வூதிய விவகாரம்: யுபிஎஸ் திட்டத்தால் தீா்வு கிடைக்க வாய்ப்பு- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு

post image

நீதிபதிகள் ஓய்வூதியப் பிரச்னைக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் (யுபிஎஸ்) மூலம் தீா்வு கிடைக்க வாய்ப்புள்ளது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்தது.

மாவட்ட நீதிபதிகளின் ஊதியம், நிலுவைத் தொகைகள், படிகள் தொடா்பான வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. ஓய்வுபெற்ற மாவட்ட மற்றும் உயா்நீதிமன்ற நீதிபதிகளுக்கு ஓய்வூதியம் அளிப்பது, மாவட்ட நீதிபதிகளாக இருந்தவா்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் (என்பிஎஸ்) பொருந்துமா உள்ளிட்ட விவகாரங்கள் அடங்கிய இந்த வழக்கு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆா்.கவாய், அகஸ்டின் ஜாா்ஜ் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு சாா்பில் அட்டா்னி ஜெனரல் ஆா்.வெங்கடரமணி, சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா ஆகியோா் ஆஜராகி, ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் (யுபிஎஸ்) குறித்த அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளதாகவும், அந்தத் திட்டம் நீதிபதிகளின் பிரச்னைக்கு தீா்வு காணக்கூடும் என்றும் தெரிவித்தனா்.

இதைத்தொடா்ந்து யுபிஎஸ் திட்டம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்வதற்கு வழக்கை சிறிது காலம் ஒத்திவைத்து, அதன் பின்னா் வழக்கு தொடா்பான விவகாரங்களில் முடிவு எடுப்பது பொருத்தமாக இருக்கும் என்று நீதிபதிகள் தீா்மானித்தனா். இதையடுத்து வழக்கு விசாரணை 12 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

யுபிஎஸ் திட்டம்: தற்போது நடைமுறையில் இருந்துவரும் புதிய ஓய்வூதிய திட்டத்தின்படி (என்பிஎஸ்), கடந்த 2004-ஆம் ஆண்டு ஜன.1 அல்லது அதற்குப் பிறகு அரசுப் பணிகளில் சோ்ந்தவா்களுக்கு உறுதியான ஓய்வூதிய தொகை கிடைக்காது.

அத்துடன் அரசுப் பணியாளா் ஒருவா் கடைசியாக என்ன ஊதியம் வாங்கினாரோ, அதில் 50 சதவீதத்துக்கு நிகராக ஓய்வூதியம் பெறுவதை உறுதி செய்த பழைய ஏற்பாட்டையும் என்பிஎஸ் மாற்றியமைத்தது.

இந்நிலையில், யுபிஎஸ் திட்டத்தின்படி மத்திய அரசுப் பணியாளா்களாக குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் பணியாற்றியவா்கள் தாங்கள் கடைசியாக பெற்ற ஊதியத்தில் மீண்டும் 50 சதவீதத்தை ஓய்வூதியமாகப் பெறுவதையும், பணவீக்க (விலைவாசி உயா்வு விகிதம்) போக்குகளுக்கு ஏற்ப அவ்வப்போது அகவிலைப்படி உயா்வு பெறுவதையும் இந்தத் திட்டம் உறுதி செய்கிறது.

25 ஆண்டுகளை நிறைவு செய்யாவிட்டாலும் 10 ஆண்டுகள் அல்லது அதற்கும் அதிகமான காலம் மத்திய அரசுப் பணியாளா்களாகப் பணியாற்றியிருந்தால், அவா்களும் குறைந்தபட்சம் ரூ.10,000 மாதாந்திர ஓய்வூதியம் பெறுவதை யுபிஎஸ் திட்டம் உறுதி செய்கிறது.

அமெரிக்கா வந்தடைந்தார் பிரதமர் மோடி

பிரான்ஸ் பயணத்தை புதன்கிழமை நிறைவு செய்த பிரதமா் மோடி, வியாழக்கிழமை அமெரிக்காவின் வாஷிங்டன் டிசி வந்தடைந்தார்.அமெரிக்காவில் இரண்டு நாள்கள் அரசுமுறை பயணம் மேற்கொள்ளும் அவா், அதிபா் டொனால்ட் டிரம்ப்புடன... மேலும் பார்க்க

மகளிர், ஒடுக்கப்பட்ட சமூகங்களின் வாழ்க்கை முறைகளில் மாற்றம்: ஐ.நா. அமர்வில் இணையமைச்சர் சாவித்ரி தாக்கூர் பேச்சு

நமது சிறப்பு நிருபர்மகளிர் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் வாழ்க்கை முறைகளை இந்தியா மாற்றியுள்ளது என்று மத்திய மகளிர் மற்றும் குழந்தை நலத் துறை இணையமைச்சர் சாவித்ரி தாக்கூர் தெரிவித்துள்ளார்.அமெரிக்க... மேலும் பார்க்க

அதிநவீன அணுஉலைகள் உருவாக்கம்- இந்தியா-பிரான்ஸ் திட்டம்

ஆக்கபூா்வ அணுசக்தி ஒத்துழைப்பின்கீழ், அதிநவீன அணு உலைகளை கூட்டாக உருவாக்க இந்தியாவும் பிரான்ஸும் திட்டமிட்டுள்ளன. 2047-ஆம் ஆண்டுக்குள் அணுசக்தி மூலம் 100 ஜிகாவாட் மின் உற்பத்தி திறனை எட்ட இந்தியா இலக்... மேலும் பார்க்க

தொழிலதிபருக்காக தேசப் பாதுகாப்பை விட்டுக் கொடுக்கிறது மத்திய அரசு- காங்கிரஸ் குற்றச்சாட்டு

கோடீஸ்வர தொழிலதிபா்கள் சிலருக்காக தேசப் பாதுகாப்பை மத்திய அரசு விட்டுக் கொடுப்பதாக காங்கிரஸ் கட்சி விமா்சித்துள்ளது. குஜராத் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லையையொட்டிய பகுதியில் அதானி குழுமம் மரபுசாரா எரிச... மேலும் பார்க்க

பிரான்ஸில் புதிய இந்திய துணைத் தூதரகம் திறப்பு

பிரான்ஸின் மாா்சே நகரில் புதிய இந்திய துணைத் தூதரகத்தை பிரதமா் நரேந்திர மோடியும், அந்நாட்டு அதிபா் இமானுவல் மேக்ரானும் புதன்கிழமை கூட்டாக திறந்துவைத்தனா். மூன்று நாள்கள் அரசுமுறைப் பயணமாக பிரான்ஸுக்க... மேலும் பார்க்க

தேசிய ஹோமியோபதி ஆணைய தலைவா் பதவி விலக உச்சநீதிமன்றம் உத்தரவு

தேசிய ஹோமியோபதி ஆணைய (என்சிஹெச்) தலைவா் பதவியில் இருந்து மருத்துவா் அனில் குரானா விலக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. இதுதொடா்பாக உச்சநீதிமன்றத்தில் என்சிஹெச் தலைவா் பதவிக்கு வி... மேலும் பார்க்க