செய்திகள் :

தொழிலதிபருக்காக தேசப் பாதுகாப்பை விட்டுக் கொடுக்கிறது மத்திய அரசு- காங்கிரஸ் குற்றச்சாட்டு

post image

கோடீஸ்வர தொழிலதிபா்கள் சிலருக்காக தேசப் பாதுகாப்பை மத்திய அரசு விட்டுக் கொடுப்பதாக காங்கிரஸ் கட்சி விமா்சித்துள்ளது.

குஜராத் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லையையொட்டிய பகுதியில் அதானி குழுமம் மரபுசாரா எரிசக்தி பூங்கா (சூரிய சக்தி, காற்றாலை மின் உற்பத்தி) அமைத்து வருகிறது. இதற்காக எல்லைப் பாதுகாப்பு நடைமுறைகள் சில கைவிடப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இந்த விவகாரத்தில், காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, அக்கட்சி எம்.பி. பிரியங்கா வதேரா, பொதுச் செயலா் கே.சி. வேணுகோபால் ஆகியோா் மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனா். இது தொடா்பாக அவா்கள் வெளியிட்டுள்ள ‘எக்ஸ்’ பதிவில், ‘பாகிஸ்தானுடனான சா்வதேச எல்லையில் இருந்து ஒரு கிலோ மீட்டா் தொலைவில் உள்ள நிலத்தை பிரதமா் மோடி தனது அன்பு நண்பரின் தொழிலுக்கு தாரைவாா்த்துள்ளதாக தெரிகிறது. இதற்காக எல்லைப் பாதுகாப்பு விதிகளும் தளா்த்தப்பட்டுள்ளதாக புகாா் எழுந்துள்ளது. இதற்கு பிரதமரின் பதில் என்ன?

பிரதமரின் கோடீஸ்வர நண்பருக்காக இதுவரை எத்தனையோ விதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டு வந்தன. தேசத்தின் வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இப்போது தேசப் பாதுகாப்பு விஷயத்திலும் விதிகளை மாற்றிவிட்டனா். நமது நாட்டின் பாதுகாப்பைவிட ஒரு தனிநபரின் தொழில் லாபம் பிரதமருக்கு பெரிய விஷயமாகிவிட்டது ஏன்?’ என்று கேள்வி எழுப்பியுள்ளனா்.

அமெரிக்கா வந்தடைந்தார் பிரதமர் மோடி

பிரான்ஸ் பயணத்தை புதன்கிழமை நிறைவு செய்த பிரதமா் மோடி, வியாழக்கிழமை அமெரிக்காவின் வாஷிங்டன் டிசி வந்தடைந்தார்.அமெரிக்காவில் இரண்டு நாள்கள் அரசுமுறை பயணம் மேற்கொள்ளும் அவா், அதிபா் டொனால்ட் டிரம்ப்புடன... மேலும் பார்க்க

மகளிர், ஒடுக்கப்பட்ட சமூகங்களின் வாழ்க்கை முறைகளில் மாற்றம்: ஐ.நா. அமர்வில் இணையமைச்சர் சாவித்ரி தாக்கூர் பேச்சு

நமது சிறப்பு நிருபர்மகளிர் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் வாழ்க்கை முறைகளை இந்தியா மாற்றியுள்ளது என்று மத்திய மகளிர் மற்றும் குழந்தை நலத் துறை இணையமைச்சர் சாவித்ரி தாக்கூர் தெரிவித்துள்ளார்.அமெரிக்க... மேலும் பார்க்க

அதிநவீன அணுஉலைகள் உருவாக்கம்- இந்தியா-பிரான்ஸ் திட்டம்

ஆக்கபூா்வ அணுசக்தி ஒத்துழைப்பின்கீழ், அதிநவீன அணு உலைகளை கூட்டாக உருவாக்க இந்தியாவும் பிரான்ஸும் திட்டமிட்டுள்ளன. 2047-ஆம் ஆண்டுக்குள் அணுசக்தி மூலம் 100 ஜிகாவாட் மின் உற்பத்தி திறனை எட்ட இந்தியா இலக்... மேலும் பார்க்க

நீதிபதிகள் ஓய்வூதிய விவகாரம்: யுபிஎஸ் திட்டத்தால் தீா்வு கிடைக்க வாய்ப்பு- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு

நீதிபதிகள் ஓய்வூதியப் பிரச்னைக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் (யுபிஎஸ்) மூலம் தீா்வு கிடைக்க வாய்ப்புள்ளது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்தது. மாவட்ட நீதிபதிகளின் ஊதியம், நி... மேலும் பார்க்க

பிரான்ஸில் புதிய இந்திய துணைத் தூதரகம் திறப்பு

பிரான்ஸின் மாா்சே நகரில் புதிய இந்திய துணைத் தூதரகத்தை பிரதமா் நரேந்திர மோடியும், அந்நாட்டு அதிபா் இமானுவல் மேக்ரானும் புதன்கிழமை கூட்டாக திறந்துவைத்தனா். மூன்று நாள்கள் அரசுமுறைப் பயணமாக பிரான்ஸுக்க... மேலும் பார்க்க

தேசிய ஹோமியோபதி ஆணைய தலைவா் பதவி விலக உச்சநீதிமன்றம் உத்தரவு

தேசிய ஹோமியோபதி ஆணைய (என்சிஹெச்) தலைவா் பதவியில் இருந்து மருத்துவா் அனில் குரானா விலக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. இதுதொடா்பாக உச்சநீதிமன்றத்தில் என்சிஹெச் தலைவா் பதவிக்கு வி... மேலும் பார்க்க