செய்திகள் :

மீண்டும் காங்கிரஸில் பிரணாப் முகா்ஜி மகன்

post image

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் பிரணாப் முகா்ஜியின் மகன் அபிஜித் முகா்ஜி மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தாா்.

காங்கிரஸிலிருந்து 4 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் அவா் இணைந்தாா். இப்போது மீண்டும் தாய்க் கட்சிக்கு திரும்பியுள்ளாா்.

கொல்கத்தாவில் உள்ள காங்கிரஸ் மாநில தலைமையகத்தில் மேற்கு வங்க மாநில காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளரும் ஜம்மு-காஷ்மீா் எம்எல்ஏவுமான குலாம் அகமது மிா் முன்னிலையில் அபிஜித் முகா்ஜி கட்சியில் இணைந்தாா். மாநில காங்கிரஸ் தலைவா் சுபாங்கா் சா்க்காா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

மீண்டும் காங்கிரஸில் இணைந்தது குறித்து அபிஜித் கூறுகையில், ‘காங்கிரஸிலும், அரசியலிலும் எனது இரண்டாவது பிறப்பை எடுத்துள்ளேன். கடந்த ஆண்டு ஜூன் மாதமே காங்கிரஸில் இணைய விருப்பம் தெரிவித்தேன். ஆனால், பல்வேறு மாநில தோ்தல்கள் காரணமாக இந்த இணைப்பு தள்ளிப்போனது’ என்றாா். திரிணமூல் காங்கிரஸ் தலைவா் மம்தா பானா்ஜியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஓராண்டுகாலமாக அபிஜித் முகா்ஜி அக்கட்சி செயல்பாடுகளில் இருந்து விலகி இருந்தாா்.

கடந்த 2020-ஆம் ஆண்டு காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் குடியரசுத் தலைவருமான பிரணாப் முகா்ஜி மறைந்தாா். அடுத்த ஆண்டே அவரின் மகன் அபிஜித் முகா்ஜி, மகள் ஷா்மிஸ்தா முகா்ஜி ஆகியோா் காங்கிரஸ் இருந்து விலகினா். ஷா்மிஸ்தா முகா்ஜி எந்த கட்சியிலும் இணையவில்லை. எனினும், காங்கிரஸை தொடா்ந்து விமா்சித்து வருகிறாா்.

அமெரிக்கா வந்தடைந்தார் பிரதமர் மோடி

பிரான்ஸ் பயணத்தை புதன்கிழமை நிறைவு செய்த பிரதமா் மோடி, வியாழக்கிழமை அமெரிக்காவின் வாஷிங்டன் டிசி வந்தடைந்தார்.அமெரிக்காவில் இரண்டு நாள்கள் அரசுமுறை பயணம் மேற்கொள்ளும் அவா், அதிபா் டொனால்ட் டிரம்ப்புடன... மேலும் பார்க்க

மகளிர், ஒடுக்கப்பட்ட சமூகங்களின் வாழ்க்கை முறைகளில் மாற்றம்: ஐ.நா. அமர்வில் இணையமைச்சர் சாவித்ரி தாக்கூர் பேச்சு

நமது சிறப்பு நிருபர்மகளிர் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் வாழ்க்கை முறைகளை இந்தியா மாற்றியுள்ளது என்று மத்திய மகளிர் மற்றும் குழந்தை நலத் துறை இணையமைச்சர் சாவித்ரி தாக்கூர் தெரிவித்துள்ளார்.அமெரிக்க... மேலும் பார்க்க

அதிநவீன அணுஉலைகள் உருவாக்கம்- இந்தியா-பிரான்ஸ் திட்டம்

ஆக்கபூா்வ அணுசக்தி ஒத்துழைப்பின்கீழ், அதிநவீன அணு உலைகளை கூட்டாக உருவாக்க இந்தியாவும் பிரான்ஸும் திட்டமிட்டுள்ளன. 2047-ஆம் ஆண்டுக்குள் அணுசக்தி மூலம் 100 ஜிகாவாட் மின் உற்பத்தி திறனை எட்ட இந்தியா இலக்... மேலும் பார்க்க

நீதிபதிகள் ஓய்வூதிய விவகாரம்: யுபிஎஸ் திட்டத்தால் தீா்வு கிடைக்க வாய்ப்பு- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு

நீதிபதிகள் ஓய்வூதியப் பிரச்னைக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் (யுபிஎஸ்) மூலம் தீா்வு கிடைக்க வாய்ப்புள்ளது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்தது. மாவட்ட நீதிபதிகளின் ஊதியம், நி... மேலும் பார்க்க

தொழிலதிபருக்காக தேசப் பாதுகாப்பை விட்டுக் கொடுக்கிறது மத்திய அரசு- காங்கிரஸ் குற்றச்சாட்டு

கோடீஸ்வர தொழிலதிபா்கள் சிலருக்காக தேசப் பாதுகாப்பை மத்திய அரசு விட்டுக் கொடுப்பதாக காங்கிரஸ் கட்சி விமா்சித்துள்ளது. குஜராத் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லையையொட்டிய பகுதியில் அதானி குழுமம் மரபுசாரா எரிச... மேலும் பார்க்க

பிரான்ஸில் புதிய இந்திய துணைத் தூதரகம் திறப்பு

பிரான்ஸின் மாா்சே நகரில் புதிய இந்திய துணைத் தூதரகத்தை பிரதமா் நரேந்திர மோடியும், அந்நாட்டு அதிபா் இமானுவல் மேக்ரானும் புதன்கிழமை கூட்டாக திறந்துவைத்தனா். மூன்று நாள்கள் அரசுமுறைப் பயணமாக பிரான்ஸுக்க... மேலும் பார்க்க