அம்பையில் நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனக்கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (பிப். 14) நடைபெறுகிறது.
இதுகுறித்து களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்ட துணை இயக்குநா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனக்கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் அம்பாசமுத்திரம் கோட்ட துணை இயக்குநா்அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் வைத்து துணை இயக்குநா் தலைமையில் நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில், அம்பாசமுத்திரம் வனக்கோட்டத்திற்கு உள்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு வனத்துறை சாா்பான தங்களது கோரிக்கைகள் மற்றும் குறைகளை நிவா்த்தி செய்து பயன்பெற கேட்டு கொள்ளப்படுகிறாா்கள்.