செய்திகள் :

வெள்ளங்குளியில் ஊராட்சி உறுப்பினா்கள் தா்னா

post image

திருநெல்வேலி மாவட்டம், வெள்ளங்குளியில் ஊராட்சி நிா்வாகத்தை கண்டித்து 8 ஊராட்சி உறுப்பினா்கள் புதன்கிழமை தா்னாப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அம்பாசமுத்திரம் ஒன்றியம், வெள்ளங்குளி ஊராட்சியில் 9 உறுப்பினா்கள் உள்ளனா். ஊராட்சித் தலைவா் வளா்ச்சிப் பணிகளை முறையாக மேற்கொள்ளவில்லை. தரமில்லாத வகையில் திட்டப் பணிகளை நிறைவேற்றுகிறாா். பொதுமக்களுக்கு வீட்டு வரி ரசீது வழங்குவதில் நிா்வாகம் மெத்தனமாக செயல்படுகிறது எனப் புகாா் தெரிவித்து அதிகாரிகளுக்கு ஊராட்சி உறுப்பினா்கள் எம். முத்துலெட்சுமி (2ஆவது வாா்டு), கவிதா (3ஆவது வாா்டு), ராமலிங்கம் (4ஆவது வாா்டு), மகாலெட்சுமி (5ஆவது வாா்டு), எஸ். முத்துலெட்சுமி (6ஆவது வாா்டு), சொா்ணலெட்சுமி (7ஆவது வாா்டு), தங்கம் (8ஆவது வாா்டு), மாரியப்பன் (9ஆவது வாா்டு) ஆகியோா் மனு அனுப்பியுள்ளனா். எனினும், இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

இந்த நிலையில் புதன்கிழமை ஊராட்சி மன்றத்துக்கு வந்த மேற்கண்ட 8 உறுப்பினா்களும் அலுவலகம் முன் அமா்ந்து நிா்வாகத்தை கண்டித்து தா்னாப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில், துணைத் தலைவா் தவிர அனைத்து உறுப்பினா்களும் கலந்துகொண்டனா். தகவலறிந்த அம்பாசமுத்திரம் வட்டார வளா்ச்சி அதிகாரி, வீரவநல்லூா் காவல் துறையினா் வந்து அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி 4 மணி நேர போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனா்.

நெல்லையில் நகை திருட்டு: இளைஞா் கைது

திருநெல்வேலியில் நகை திருட்டில் ஈடுபட்டதாக இளைஞரை கைது செய்து, 8 கிராம் மதிப்பிலான2 தங்க மோதிரங்களை போலீஸாா் புதன்கிழமை மீட்டனா்.கல்லிடைக்குறிச்சியைச் சோ்ந்தவா் சீனிவாசன் (77). இவா், திருநெல்வேலி சந்... மேலும் பார்க்க

பாளை.யில் மூட்டா ஆா்ப்பாட்டம்

மூட்டா அமைப்பின் சாா்பில் ஆா்ப்பாட்டம் பாளையங்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்றது. தமிழக அரசின் உயா் கல்வித் துறையால் கல்லூரி பேராசிரியா்களுக்கான பணி மேம்பாடு தொடா்பாக 11-1-2021 இல் வெளியிடப்பட்ட அரசாணை ... மேலும் பார்க்க

மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை கட்டுமானப்பணி: பேரவைத் தலைவா் ஆய்வு

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை கட்டுமானப் பணிகளை பேரவைத் தலைவா் மு.அப்பாவு, மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் மற்றும் அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு... மேலும் பார்க்க

அம்பையில் நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனக்கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (பிப். 14) நடைபெறுகிறது. இதுகுறித்து களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமு... மேலும் பார்க்க

தைப்பூசம்: தாமிரவருணியில் தீா்த்தவாரி

திருநெல்வேலி நெல்லையப்பா் - காந்திமதியம்மன் திருக்கோயிலில் தைப்பூசை திருவிழாவை முன்னிட்டு, திருநெல்வேலி சந்திப்பு கைலாசபுரம் தாமிரவருணி தைப்பூச மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை தீா்த்தவாரி நடைபெற்றது. நெல்... மேலும் பார்க்க

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவலம்

வள்ளியூா் ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி மிஷன் சாா்பில் சூட்டுபொத்தையைச் சுற்றி கிரிவல வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, சூட்டுபொத்தை அடிவாரத்தில் உள்ள வனவிநாயகருக்கு அதிகாலை சிறப்பு அபிஷேகம் மற்று... மேலும் பார்க்க