செய்திகள் :

தெலங்கானாவில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட 250 கிலோ கஞ்சா - சிக்காமல் தப்பிய குற்றவாளிகள்

post image

ராமநாதபுரம் கடலோர பகுதிகள் வழியாக இலங்கைக்கு கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தப்படுவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் கடந்த இரு நாள்களுக்கு முன் ஏர்வாடி அருகே உள்ள பிச்சை மூப்பன் வலசை கிராம பகுதியில் உள்ள தென்னந்தோப்பு அருகில் சாலையில் கிடந்த 20 கிலோ கஞ்சா பார்சல்களை ஏர்வாடி போலீஸார் கைபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

போதை தடுப்பு பிரிவினரிடம் சிக்கிய கஞ்சா பார்சல்கள்

இந்நிலையில் தெலங்கானா மாநிலத்தில் இருந்து காரில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக போதை தடுப்பு பிரிவினருக்கு தகவல் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட பகுதியில் அவர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போதை தடுப்பு பிரிவினரை தெலங்கானா மாநில பதிவு எண் கொண்ட கார் ஒன்று கடந்து சென்றுள்ளது.

இதையடுத்து அந்த இனோவா கிரிஸ்டா காரை போதை தடுப்பு பிரிவினர் பின் தொடர்ந்து சென்றுள்ளனர். இந்நிலையில் தங்களை போலீஸார் பின் தொடர்வதை அறிந்த அந்த காரில் வந்தவர்கள் தங்கள் காரை வேகமாக செலுத்தினர். இவர்களை பிடிக்க முயல்வதற்குள் அந்த காரில் வந்தவர்கள், ராமநாதபுரம் நகரில் இருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள ராம் நகர் என்ற பகுதியில் காரை நிறுத்தி விட்டு தப்பினர்.

கஞ்சா கடத்தி வரப்பட்ட கார்

இதன் பின் அங்கு வந்த போதை தடுப்பு பிரிவினர் அந்த காரை திறந்து சோதனை செய்தனர். இந்த சோதனையின் போது காரின் பின் பகுதியில் தலா 2 கிலோ எடை கொண்ட 125 கஞ்சா பார்சல்கள் சிக்கின. இதையடுத்து கார் மற்றும் கஞ்சாவை கைபற்றிய போதை தடுப்பு பிரிவினர், தப்பி ஓடிய கஞ்சா கடத்தல்காரர்களை தேடி வருகின்றனர். போதை பொருள் கடத்தலை தடுக்க மாவட்ட போலீஸார் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருவதையும் மீறி அடுத்தடுத்து கஞ்சா பார்சல்கள் சிக்கி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Vikatan Play

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

YouTuber: ``குடும்ப உறவை சீரழிக்கும் ஆபாச பேச்சு'' -பிரபல யூடியூபர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு

YouTuber: சோசியல் மீடியா பிரபலங்களான ரன்வீர் அல்லாபாடியா மற்றும் அபூர்வா மகிஜா, காமெடியன் சமய் ரைனா ஆகியோர் இணைந்து யூடியூப்பில் ‘India’s Got Latent'என்ற நிகழ்ச்சியை நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் 30-க... மேலும் பார்க்க

யாசகம் பெறும் பெண்ணுடன் திருமணம் மீறிய உறவு... கொலையில் முடிந்த சோகம்; இளைஞர் கைது..!

திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் கடந்த மாதம் 3 -ம் தேதி திருச்சி டு சென்னை பைபாஸ் சாலையோர முள் புதரில் அடையாளம் தெரியாத 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சடலம் கிடப்பதாக சமயபுரம் காவல் நிலையத்திற்கு தகவ... மேலும் பார்க்க

மாத்தூர் தொட்டில் பாலத்தில் காமராஜர் கல்வெட்டு உடைப்பு; போலீஸ் விசாரணை!

கன்னியாகுமரி மாவட்டம், அருவிக்கரை ஊராட்சியில் மாத்தூர் பகுதியில் தொட்டில் பாலம் அமைந்துள்ளது. ஒருபுறம் அருவிக்கரை ஊராட்சியையும் மறுபுறம் வேர்கிளம்பி பேரூராட்சியையும் இணைக்கும் வகையில் மாத்தூர் தொட்டில... மேலும் பார்க்க

விருதுநகர்: நகை, கைத்துப்பாக்கி பிடிபட்ட வழக்கு; போலீஸ்காரர் உட்பட இருவர் கைது!

விருதுநகர் மாவட்டம், வச்சகாரப்பட்டி அருகே நகை, கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் பிடிபட்ட சம்பவத்தில் இரண்டு பேரை கைது செய்துள்ளனர். இது குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்க... மேலும் பார்க்க

தென்காசி: அதீத துர்நாற்ற்றம்... புதர் அருகே எரிந்த நிலையில் பெண்ணின் சடலம்! - போலீஸ் விசாரணை

தென்காசி மாவட்டத்தில் உடல் எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், " தென்காசியை அடுத்த... மேலும் பார்க்க

கரூர் தண்டவாளத்தில் விரிசல்; ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியரின் துரித செயல்; 100 மீட்டர் முன்பு நின்ற ரயில்

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள திருக்காம்புலியூர் பகுதியில் கரூர் - திருச்சி ஒருவழி ரயில் பாதையில் ரயில்வே தண்டவாளம் விரிசல் ஏற்பட்டு உடைந்துள்ளது. இந்நிலையில், அதன் அருகே குடியிருந்து வரு... மேலும் பார்க்க