செய்திகள் :

சீக்கியர்களுக்கு எதிரான கலவரம்: முன்னாள் காங்கிரஸ் எம்.பி. குற்றவாளி என தீர்ப்பு!

post image

சீக்கியர்களுக்கு எதிராக 1984-ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தில் இரட்டைக் கொலை வழக்கில் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. சஜ்ஜன் குமார் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் படுகொலைக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக தில்லியில் கடந்த 1984-ஆம் ஆண்டு சீக்கியா்களுக்கு எதிரான வன்முறை வெடித்தது. கொடிய ஆயுதங்களுடன் பெரிய அளவிலான கொலை, தீவைப்பு, சீக்கியா்களின் சொத்துக்களை அழித்தல் ஆகியவை நிகழ்ந்தன.

இந்த கலவரத்தின்போது சரஸ்வதி விஹாா் பகுதியைச் சோ்ந்த ஜஸ்வந்த் சிங், அவரது மகன் ஆகியோர் கொல்லப்பட்டு அவா்களது வீட்டுக்கு தீ வைக்கப்பட்டது.

இதையும் படிக்க | இலவசங்களால் மக்கள் உழைப்பதற்குத் தயாராக இல்லை: உச்ச நீதிமன்றம்!

இந்த கலவரம் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. சஜ்ஜன் குமார் தலைமையில் நடைபெற்றதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடா்பாக தில்லி காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை மேற்கொண்டது.

கடந்த 2021-ஆம் ஆண்டு சஜ்ஜன் குமாருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை பதிவு செய்த உயா்நீதிமன்றம், போதுமான ஆதாரங்கள் இருப்பதால் வழக்கை விசாரிக்க ஒப்புக்கொண்டது.

இந்த நிலையில் கடந்த மாதம் நடைபெற்ற வழக்கின் விசாரணைக்கு ஏற்கனவே ஒரு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 6 ஆண்டுகளாக திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சஜ்ஜன் குமாா் காணொளி வாயிலாக ஆஜரானாா். அப்போது, இறுதி வாதங்களை கேட்ட சிறப்பு நீதிபதி இந்த வழக்கின் தீர்ப்பினை ஒத்தி வைத்திருந்தார்.

இந்த வழக்கில் விசாரணை தீவிரமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் பெயரளவில் மேற்கொள்ளப்படக் கூடாது என்றும் தில்லி காவல் துறைக்கு உச்சநீதிமன்றம் பிப். 10 அன்று அறிவுறுத்தியது.

இதனைத் தொடர்ந்து இந்தப் படுகொலை வழக்கில் மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் எம்பியுமான சஜ்ஜன் குமார் குற்றவாளி என தில்லி நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. சஜ்ஜன் குமாருக்கான தண்டனை குறித்த விவரங்கள் வருகிற பிப்ரவரி 18 அன்று வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளது.

ராகிங் புகார்: முதலாமாண்டு மாணவர்களின் அந்தரங்க உறுப்புகளில் டம்ப்-பெல்ஸ் தொங்கவிட்டுக் கொடுமை! -கல்லூரி முதல்வர் விளக்கம்

கேரளத்தில் அரசு கல்லூரியில் மாணவர்கள் சிலர் ராகிங் கொடுமைப்படுத்துதலுக்குள்படுத்தப்பட்டுள்ளது பற்றி அக்கல்லூரியின் முதல்வர் விளக்கமளித்துள்ளார். கேரளத்தின் கோட்டயத்தில் உள்ள அரசு செவிலியர் கல்லூரியில்... மேலும் பார்க்க

பிரதமர் மோடியின் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

பிரதமர் நரேந்திர மோடியின் விமானத்தை வெடிகுண்டு வைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தவுள்ளதாக மும்பை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு செவ்வாய்க்கிழமை மிரட்டல் வந்துள்ளது.மேலும், அமெரிக்க பயங்கரவாதிகள் இந... மேலும் பார்க்க

சிசுவின் உடலைக் கடித்துத் தின்ற நாய்கள்: அரசு மருத்துவமனையில் அவலம்!

அரசு மருத்துவமனையில் பிறந்த பச்சிளங் குழந்தையின் உடலை நாய்கள் கடித்துக் குதறித் தின்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.உத்தரப் பிரதேசத்தின் லலித்பூரில் உள்ள மாவட்ட ... மேலும் பார்க்க

மாகி பௌர்ணமி: சங்கமத்தில் 1.60 கோடி பேர் புனித நீராடல்!

மாகி பௌர்ணமியை முன்னிட்டு பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் கிட்டத்தட்ட 1.60 கோடி பேர் புனித நீராடியதாக மாநில அரசு அறிக்கையில் தெரிவித்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைப... மேலும் பார்க்க

இலவசங்களால் மக்கள் உழைப்பதற்குத் தயாராக இல்லை: உச்ச நீதிமன்றம்!

தேர்தலுக்கு முன்பு கட்சிகள் இலவசங்களை வழங்குவதாக வாக்குறுதி அளிப்பது குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நகர்ப்புறங்களில் வீடற்றவர்கள் தங்குவதற்கான உரிமை தொடர்பான வழக்கு விசாரணை நீதிபதிகள்... மேலும் பார்க்க

ஆம் ஆத்மியிடமிருந்து விடுதலை பெற விரும்பும் பஞ்சாப்: பாஜக

பஞ்சாப் விரைவில் ஆம் ஆத்மி கட்சியிடமிருந்து விடுதலை பெறும் என பாஜக தலைவர் துஷ்யந்த் கௌதம் கூறியுள்ளார். இதுதொடர்பாக ஆங்கில ஊடகத் தளமான ஏஎன்ஐ-க்கு அவர் அளித்த பேட்டியில், பஞ்சாப் மக்கள் தாங்கள் ஏமாற்றப... மேலும் பார்க்க