செய்திகள் :

பிரான்ஸ்: சர்வதேச அனல் அணு உலையில் பிரதமர் மோடி!

post image

இண்டெர்நேஷனல் தெர்மோ நியூக்ளியர் எக்ஸ்பெரிமெண்டல் ரியாக்டர்(ஐடிஈஆர்) என்றழைக்கப்படும் சர்வதேச அனல் அணு உலை வளாகத்துக்கு இன்று(பிப். 12) பிரதமர் நரேந்திர மோடியும் பிரான்ச் அதிபர் இம்மானுவேல் மேக்ரானும் சென்றுள்ளனர்.

இது குறித்து, பிரதமர் மோடி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சர்வதேச அனல் அணு உலை திட்டத்தில் பணியாற்றும் குழுவினருடன் சென்று அவ்வளாகத்தைப் பார்வையிட்டுள்லதுடன் அவர்களை பாராட்டினேன். இத்திட்டமானது, எதிர்காலத்திற்கான நிலையான மற்றும் அளவில்லா சுத்தமான எரிசக்தியைப் பெறுவதற்கான குறிப்பிடத்தக்கதொரு நகர்வாகும்” என்று பதிவிட்டுள்ளார்.

‘மினி சூரியன்’ என்றழைக்கப்படும் இந்த பிரம்மாண்ட அறிவியல் திட்டத்தின் மூலம், சுமார் 500 மெகாவாட் திறன் எரிசக்தி உற்பத்தி செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. எதிர்கால எரிசக்தி தேவையைக் கருத்திற்கொண்டு கட்டமைக்கப்பட்டு வரும் இத்திட்டத்துக்கு இந்தியா கடந்த 20 ஆண்டுகளாக முக்கிய பங்களிப்பை வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி!

பாரிஸ் : பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் முதலாவது சா்வதேச செயற்கை நுண்ணறிவு செயல் உச்சிமாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில் பங்கேற்பதற்காக மூன்று நாள் பயணமாக பிரான்ஸுக்கு திங்கள்கிழமை சென்றடைந்தார் மோடி... மேலும் பார்க்க

வங்கதேச வன்முறை சம்பவங்களில் 1,400 பேர் உயிரிழப்பு!

ஜெனீவா : வங்கதேசத்தில் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கடந்தாண்டு மாணவர்கள் பெருமளவில் திரண்டு நடத்திய போராட்டங்களின்போது நிகழ்ந்த வெவ்வேறு வன்முறை சம்பவங்களில், அதிலும் குறிப்பாக... மேலும் பார்க்க

உக்ரைனுக்கான உதவிகளை அதிகப்படுத்த நேட்டோவிடம் அமெரிக்கா வலியுறுத்தல்!

அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை செயலராகப் புதிதாகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள பீட் ஹெக்செத், ப்ரூஸ்ஸெல்ஸ் நகரில் அமைந்துள்ள நேட்டோ தலைமையகத்தில் இன்று(பிப். 12) நடைபெற்ற நேட்டோ ஆலோசனைக் கூட்டத்தில் கலந... மேலும் பார்க்க

பிரிட்டனில் இந்திய வம்சாவளி பெண்ணுக்கு இனப் பாகுபாடு!

பிரிட்டனில் இந்திய வம்சாவளி பெண் ஒருவரை அந்நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் ஓடும் ரயிலில் இனரீதியாக அவதூறாகப் பேசி மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் இருந்து மான்செஸ்டர் செல்லும் ரயி... மேலும் பார்க்க

பாலஸ்தீன குடியிருப்புப் பகுதிகள் மீது மீண்டும் இஸ்ரேல் தாக்குதல்!

பாலஸ்தீன எல்லைக்குட்பட்ட துல்காரெம் குடியிருப்பு மற்றும் அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேல் ராணுவம் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேல் ராணுவம் முற்றுகையிட்டுள்ளதால் தொடர்ந்து 17வது நாளாக துல்கா... மேலும் பார்க்க

லிபியா: படகு கவிழ்ந்த விபத்தில் 16 பாகிஸ்தானியர்கள் பலி!

லிபியாவில் 64 பேருடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் உயிரிழந்தனர். இவர்கள் பாகிஸ்தானில் இருந்து சட்டவிரோதமாக படகு மூலம் வந்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் 37 பே... மேலும் பார்க்க