செய்திகள் :

சிசுவின் உடலைக் கடித்துத் தின்ற நாய்கள்: அரசு மருத்துவமனையில் அவலம்!

post image

அரசு மருத்துவமனையில் பிறந்த பச்சிளங் குழந்தையின் உடலை நாய்கள் கடித்துக் குதறித் தின்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் லலித்பூரில் உள்ள மாவட்ட பெண்கள் மருத்துவமனையில், உடல் பாகங்கள் கடித்துக் குதறப்பட்ட நிலையில் ஒரு சிசுவின் உடலானது குப்பைகளுடன் குப்பையாகப் வீசிச் செல்லப்பட்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

இதே மருத்துவமனையில் கடந்த 9-ஆம் தேதி பிரசவ வலி ஏற்பட்டதால் அனுமதிக்கப்பட்டிருந்த சங்கீதா என்ற கர்ப்பிணிக்கு அன்றைய நாளில் மாலை 7 மணியளவில் ஒரு குழந்தை பிறந்துள்ளது.

குறைப்பிரசவத்தில் பிறந்த இந்த குழந்தைக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டதைத் தொடர்ந்து, குழந்தைகள் சிறப்பு சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு அதன் உடல்நிலை தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வந்தது. எனினும், சிகிச்சை பலனின்றி அந்த குழந்தை பிறந்த 45 நிமிடங்களிலேயே உயிரிழந்தது.

இதனைத்தொடர்ந்து, பெற்றொரிடம் குழந்தையின் உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குப்பைத்தொட்டியில் ஒரு குழந்தையின் உடல் கிடப்பதாக, மருத்துவமனை ஊழியர்களுக்கு செவ்வாய்க்கிழமை(பிப். 11) தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து, அந்த குழந்தையின் உடலை மீட்டு பரிசோதனை செய்ததில், சங்கீதா பெற்றெடுத்த குழந்தைதான் அது என்பது உறுதி செய்யப்பட்டது. அதன்பின், பிரேதப் பாதுகாப்பு அறைக்கு அந்த குழந்தையின் உடல் எடுத்துச்செல்லப்பட்டு அங்கு உடற்கூராய்வும் செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, குழந்தையின் உடலை பெற்றுக்கொண்ட அந்த குழந்தையின் தந்தை அகிலேஷிடம் மருத்துவமனையில் சேவையாற்றும் செவிலியர் ஒருவர், “குழந்தையின் உடலை எரிக்க கட்டணமாக ரூ. 200 செலுத்தினால் போதும், அதற்காக ஆள்கள் உள்ளனர்” என்று தெரிவித்ததுடன், ஒரு நபரை அகிலேஷுக்கு அறிமுகப்படுத்தியுமுள்ளார்.

இந்த நிலையில், குழந்தையின் உடலை எரித்துவிடுவதாகப் பணத்தை பெற்றுக் கொண்டு உடலை எடுத்துச் சென்ற அந்த நபர், அதன்பின் அந்த உடலை அநாதைப் பிணமாக வீசிச் சென்றிருப்பதும், அதனை நாய்கள் சில கடித்துத் தின்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ராகிங் புகார்: முதலாமாண்டு மாணவர்களின் அந்தரங்க உறுப்புகளில் டம்ப்-பெல்ஸ் தொங்கவிட்டுக் கொடுமை! -கல்லூரி முதல்வர் விளக்கம்

கேரளத்தில் அரசு கல்லூரியில் மாணவர்கள் சிலர் ராகிங் கொடுமைப்படுத்துதலுக்குள்படுத்தப்பட்டுள்ளது பற்றி அக்கல்லூரியின் முதல்வர் விளக்கமளித்துள்ளார். கேரளத்தின் கோட்டயத்தில் உள்ள அரசு செவிலியர் கல்லூரியில்... மேலும் பார்க்க

சீக்கியர்களுக்கு எதிரான கலவரம்: முன்னாள் காங்கிரஸ் எம்.பி. குற்றவாளி என தீர்ப்பு!

சீக்கியர்களுக்கு எதிராக 1984-ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தில் இரட்டைக் கொலை வழக்கில் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. சஜ்ஜன் குமார் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியி... மேலும் பார்க்க

பிரதமர் மோடியின் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

பிரதமர் நரேந்திர மோடியின் விமானத்தை வெடிகுண்டு வைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தவுள்ளதாக மும்பை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு செவ்வாய்க்கிழமை மிரட்டல் வந்துள்ளது.மேலும், அமெரிக்க பயங்கரவாதிகள் இந... மேலும் பார்க்க

மாகி பௌர்ணமி: சங்கமத்தில் 1.60 கோடி பேர் புனித நீராடல்!

மாகி பௌர்ணமியை முன்னிட்டு பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் கிட்டத்தட்ட 1.60 கோடி பேர் புனித நீராடியதாக மாநில அரசு அறிக்கையில் தெரிவித்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைப... மேலும் பார்க்க

இலவசங்களால் மக்கள் உழைப்பதற்குத் தயாராக இல்லை: உச்ச நீதிமன்றம்!

தேர்தலுக்கு முன்பு கட்சிகள் இலவசங்களை வழங்குவதாக வாக்குறுதி அளிப்பது குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நகர்ப்புறங்களில் வீடற்றவர்கள் தங்குவதற்கான உரிமை தொடர்பான வழக்கு விசாரணை நீதிபதிகள்... மேலும் பார்க்க

ஆம் ஆத்மியிடமிருந்து விடுதலை பெற விரும்பும் பஞ்சாப்: பாஜக

பஞ்சாப் விரைவில் ஆம் ஆத்மி கட்சியிடமிருந்து விடுதலை பெறும் என பாஜக தலைவர் துஷ்யந்த் கௌதம் கூறியுள்ளார். இதுதொடர்பாக ஆங்கில ஊடகத் தளமான ஏஎன்ஐ-க்கு அவர் அளித்த பேட்டியில், பஞ்சாப் மக்கள் தாங்கள் ஏமாற்றப... மேலும் பார்க்க