செய்திகள் :

ஸ்ரீராம் பிராப்பர்டீஸ் லாபம் 30% சரிவு!

post image

புதுதில்லி: ரியல் எஸ்டேட் நிறுவனமான, ஸ்ரீராம் பிராப்பர்ட்டீஸ் நிறுவனத்தின் நிகர லாபம், 2024 டிசம்பர் காலாண்டில், 30 சதவிகிதம் சரிவடைந்து ரூ.12.97 கோடி ஆக உள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் இதன் நிகர லாபம் ரூ.18.48 கோடியாக இருந்தது.

நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் அதன் மொத்த வருமானம் ரூ.240.57 கோடியிலிருந்து குறைந்து ரூ.179.87 கோடியானது.

பெங்களூருவைச் சேர்ந்த ஸ்ரீராம் பிராப்பர்டீஸ் நாட்டின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்றாகும்.

கோல்டே-பாட்டீல் காலாண்டு லாபம் உயர்வு!

புதுதில்லி: புனேவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனமான கோல்டே-பாட்டீல் டெவலப்பர்ஸ் லிமிடெட் டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த சமீபத்திய காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.25.30 கோடியாக உள்ளது என்று... மேலும் பார்க்க

மல்ஹோத்ரா கையெழுத்துடன் ரூ.50 நோட்டுகளை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு!

மும்பை: கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ராவின் கையெழுத்துடன் கூடிய ரூ.50 நோட்டுகள் விரைவில் வெளியிடப்படும் என்று ரிசர்வ் வங்கி இன்று தெரிவித்துள்ளது.நீட்டிக்கப்பட்ட பதவிக்காலம் முடிந்த பிறகு, பதவியிலிருந்து வில... மேலும் பார்க்க

சில்லறை பணவீக்கம் ஜனவரியில் 4.31% ஆக சரிவு!

புதுதில்லி: உணவுப் பொருட்களின் விலை குறைந்துள்ளதால், சில்லரை விலை பணவீக்கம், ஜனவரியில் 4.31% குறைந்துள்ளது.நுகர்வோர் விலைக் குறியீடு அடிப்படையிலான சில்லறை பணவீக்கம் டிசம்பரில் 5.22 சதவிகிதமாகவும், 202... மேலும் பார்க்க

வர்த்தகப் போர் அச்சம்: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!

மும்பை: அந்நிய நிதி முதலீடுகள் தொடர்ந்து வெளியேறி வரும் நிலையில், வர்த்தகப் போர் குறித்த அச்சம் முதலீட்டாளர்களை தொடர்ந்து கலக்கமடையச் செய்ததால், இன்றைய ஆரம்ப வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ... மேலும் பார்க்க

சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை! சென்சென்ஸ் 157; நிஃப்டி 78 புள்ளிகள் சரிவு!

இந்திய பங்குச் சந்தை வணிகம் இன்று மீண்டும் சரிவுடன் தொடங்கியது. சென்செக்ஸ் 157 புள்ளிகளும், நிஃப்டி 78 புள்ளிகளும் சரிவுடன் தொடங்கின. 5வது நாளாக நேற்று பங்குச் சந்தை வணிகம் சரிவுடன் முடிந்த நிலையில், ... மேலும் பார்க்க

இந்திய பங்குச் சந்தையில் கடந்த 5 நாட்களில் ரூ.16.97 லட்சம் கோடி இழப்பு!

புதுதில்லி: அமெரிக்க கட்டண அச்சுறுத்தல்களை தொடர்ந்து வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் பங்குகளை தொடர்ந்து விற்பனை செய்து வருவதும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வெகுவாக குறைத்தது.கடந்த ஐந்து நாட்களில... மேலும் பார்க்க