செய்திகள் :

தந்தை மீது மகள் புகார்! தாயின் உடல் தோண்டியெடுப்பு!

post image

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் மகளின் புகாரின் அடிப்படையில் தாயின் உடலை காவல் துறையினர் தோண்டியெடுத்துள்ளனர்.

அலப்புழாவைச் சேர்ந்த வி.சி.சாஜி (வயது 48) என்ற பெண், கடந்த பிப்.8 அன்று வீட்டின் படிகளில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்ததாகக் கூறி அவரது குடும்பத்தினரால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது உடல் நிலை தொடர்ந்து மோசமடைந்ததினால் அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டிருந்தது. இருப்பினும், கடந்த பிப். 9 அன்று அவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.

இந்நிலையில், அவரது இறுதி சடங்கிற்கு பின்னர் அவரது கணவர் சோனிக்கும் அவர்களது மகளுக்கும் வாக்குவாதம் எழுந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, சாஜியை சோனிதான் அடித்து தாக்கியதாகவும், அவரது தலையை பிடித்து சுவற்றில் அடித்தப்போது அதனை தான் பார்த்ததாகவும், அவர்களது மகள் சேரத்தலா காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

இதையும் படிக்க: மாசி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

மேலும், தனது தாயின் சிகிச்சை தடைப்படக்கூடும் என்பதினால் மருத்துவமனை அதிகாரிகளிடன் இதுகுறித்து அப்பெண் எதுவும் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, அந்த புகாரின் அடிப்படையில் இன்று (பிப்.12) சாஜியின் உடலை தோண்டியெடுத்த காவல் துறையின் அலப்புழா அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வு சோதனைக்காகக் கொண்டு சென்றனர். மேலும், சோனியை காவலில் எடுத்த போலிஸார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் நாடு கடத்தல்!

குஜராத் மாநிலத்தில் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் குடியேறிய வங்கதேசத்தினர் 15 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். மேலும், 35 பேர் மார்ச் மாத இறுதிக்குள் நாடு கடத்த திட்டமிட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.தலைநகர்... மேலும் பார்க்க

தென் கொரியா: மீன்பிடி படகு கவிழ்ந்ததில் 5 பேர் மாயம்!

தென் கொரியாவில் மீன்பிடி படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் மாயாமகியுள்ளனர். அந்நாட்டின் ஜேஜு தீவின் கடல் பகுதியில் 10 பேர் பயணம் செய்த 32 டன் எடையுள்ள மீன்பிடி படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான... மேலும் பார்க்க

ஆஸ்திரிய வலது சாரி தலைவரின் புதிய அரசமைக்கும் முயற்சிகள் தோல்வி!

மத்திய ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில் புதிய அரசை அமைக்க அந்நாட்டின் வலது சாரி தலைவரின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆஸ்திரியாவின் தீவிர வலது சாரி தலைவரான ஹெர்பெர்ட் க... மேலும் பார்க்க

அரசு பள்ளி சுவர் இடிந்து விழுந்து விபத்து! 3 மாணவர்கள் காயம்!

புதுச்சேரியில் அரசு பள்ளி சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 3 மாணவர்கள் காயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.புதுச்சேரி தவளகுப்பம் அடுத்த புதுக்குப்பத்தில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது.... மேலும் பார்க்க

மாசி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று(பிப். 12) மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. கேரள மாநிலம், சபரிமலையில் உள்ள பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோயிலில் வருடாந்திர மண்டல பூஜை காலம் கடந்த நவம்பா் 1... மேலும் பார்க்க

புதிய ஆளுநர் கையெழுத்துடன் ரூ.50 நோட்டுக்கள்! ஆர்பிஐ தகவல்!

இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநரின் கையெழுத்துடன் ரூ.50 பணத்தாள்கள் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்திய ரிசர்வ் வங்கி இன்று (பிப்.12) வெளியிட்டுள்ள அறிக்கையில் புதிய ஆளுநராக பதவியேற... மேலும் பார்க்க