செய்திகள் :

இளம் வீரர்களுடன் களமிறங்கிய ஆஸி..! 214 ரன்களுக்கு ஆட்டமிழந்த இலங்கை!

post image

இலங்கை அணி முதல் ஒருநாள் போட்டியில் 214 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

டெஸ்ட் தொடரை 2-0 என முழுமையாக வென்ற ஆஸி. அணி இலங்கையுடனான முதல் ஒருநாள் போட்டியில் பந்துவீச்சை செய்தது.

முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 46 ஓவர்கள் முடிவில் 214 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதிகபட்சமாக இலங்கை கேப்டன் அசலங்கா 127 ரன்கள் எடுத்து அசத்தினார்.

அனுபவமிக்க வீரர்கள் இல்லாமல் இளம் வேகப் பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கிய ஆஸி. அணியில் ஷான் அப்பாட் 3, ஸ்பென்சர் ஜான்சன், ஆரோன் ஆர்டி, நாதன் எல்லிஸ் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.

தற்போது, ஆஸி. அணி 4 விக்கெட்டுகளை இழந்து 45 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் லபுஷேன், அலெக்ஸ் கேரி விளையாடி வருகிறார்கள்.

அதிவேக 2,500..! ஷுப்மன் கில் புதிய சாதனை!

இந்திய கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டன் ஷுப்மன் கில் சதம் விளாசியதன் மூலம் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் வி... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபி, ஐபிஎல்: ஆப்கன் வீரர் கஸன்ஃபர் விலகல்!

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆப்கன் பந்து வீச்சாளர் அல்லா கஸன்ஃபர் விலகுவதாக தெரிவித்துள்ளார்.இந்தியா, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 9-வது சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானின் கராச்சி, லாகூர், ... மேலும் பார்க்க

கடைசி ஒருநாள்: இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா முதலில் பேட்டிங்!

கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.3 ஆட்டங்கள் கொண்ட தொடரில், முதலிரு ஆட்டங்களில் வென்று தொடரைக் கைப்பற்றிவிட்ட இந்தியா, அதை முழுமை... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபி: ஸ்டார்க் விலகல்! 5 முன்னணி வீரர்கள் இல்லாமல் களமிறங்கும் ஆஸி.!

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து தனிப்பட்ட காரணத்துக்காக மிட்செல் ஸ்டார்க் விலகியதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகின்ற 19 ஆம் தேதி தொடங்... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபி: பும்ரா விலகல்! இந்தியாவுக்கு பின்னடைவு!

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து காயம் காரணமாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விலகியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.அவருக்கு பதிலாக இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா சேர்க்கப்பட்டு... மேலும் பார்க்க

தொடரை முழுமையாகக் கைப்பற்றும் முனைப்பில் இந்தியா - இன்று கடைசி ஒருநாள் கிரிக்கெட்

இங்கிலாந்துடனான கடைசி ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா புதன்கிழமை அகமதாபாதில் மோதுகிறது.3 ஆட்டங்கள் கொண்ட தொடரில், முதலிரு ஆட்டங்களில் வென்று தொடரைக் கைப்பற்றிவிட்ட இந்தியா, அதை முழுமையாக வெல்லும் முனைப... மேலும் பார்க்க