செய்திகள் :

பிணைக் கைதிகளை விடுவிக்காவிட்டால் போரைத் தொடங்குவோம்: இஸ்ரேல்

post image

ஹமாஸ் பிடித்துவைத்துள்ள பிணைக் கைதிகள் அனைவரையும் சனிக்கிழமைக்குள் விடுவிக்காவிட்டால் போரைத் தொடங்குவோம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.

மேலும், காஸாவைச் சுற்று பாதுகாப்புப் படை வீரர்களை குவித்து தயார் நிலையில் இருக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

ஹமாஸ் - இஸ்ரேல் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் கொண்டுவரப்பட்டு, முதல் கட்டமாக ஹமாஸ் 21 பிணைக் கைதிகளையும் இஸ்ரேல் 730 பிணைக் கைதிகளையும் விடுவித்துள்ளனர்.

இதனிடையே, ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்த 3 பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் படையினர் தாமதப்படுத்தியுள்ள நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் மீறியதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது.

இதையடுத்து, இரண்டாம் கட்டத்தில் அனைத்து கைதிகளையும் விடுக்கப்படும் என்று ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில், காஸா வசமுள்ள அனைத்து பிணைக் கைதிகளையும் சனிக்கிழமை பகல் 1 மணிக்குள் விடுவிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கெடு விதித்திருந்தார்.

மேலும், பிணைக் கைதிகளை விடுவிக்க தவறினால் போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்றும் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் திங்கள்கிழமை எச்சரித்திருந்தார்.

இதையும் படிக்க : ‘காஸா போா் நிறுத்தம் தொடரக்கூடாது’

இந்த நிலையில், சனிக்கிழமைக்குள் அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவிக்காவிட்டால் போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு, தாக்குதலை தொடருவோம் என்று இஸ்ரேல் பிரதமரும் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார்.

மேலும், காஸாவைச் சுற்றி வீரர்களை குவித்து தயார் நிலையில் இருக்க உத்தரவிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிரிட்டனில் இந்திய வம்சாவளி பெண்ணுக்கு இனப் பாகுபாடு!

பிரிட்டனில் இந்திய வம்சாவளி பெண் ஒருவரை அந்நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் ஓடும் ரயிலில் இனரீதியாக அவதூறாகப் பேசி மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் இருந்து மான்செஸ்டர் செல்லும் ரயி... மேலும் பார்க்க

பாலஸ்தீன குடியிருப்புப் பகுதிகள் மீது மீண்டும் இஸ்ரேல் தாக்குதல்!

பாலஸ்தீன எல்லைக்குட்பட்ட துல்காரெம் குடியிருப்பு மற்றும் அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேல் ராணுவம் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேல் ராணுவம் முற்றுகையிட்டுள்ளதால் தொடர்ந்து 17வது நாளாக துல்கா... மேலும் பார்க்க

லிபியா: படகு கவிழ்ந்த விபத்தில் 16 பாகிஸ்தானியர்கள் பலி!

லிபியாவில் 64 பேருடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் உயிரிழந்தனர். இவர்கள் பாகிஸ்தானில் இருந்து சட்டவிரோதமாக படகு மூலம் வந்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் 37 பே... மேலும் பார்க்க

சிங்கப்பூரில் பயங்கரவாத தாக்குதலுக்கு வாய்ப்பு! உள்துறை எச்சரிக்கை

சிங்கப்பூரில்பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தப்படலாம் என்றும், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் உள்துறை அமைச்சர் சண்முகம் தெரிவித்துள்ளார்.பயங்கரவாத சதித் திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் பெண் உள்பட ம... மேலும் பார்க்க

காஸா மருத்துவர்களை துன்புறுத்தும் இஸ்ரேல் ராணுவம்!

காஸாவில் இருந்து சிறைபிடிக்கப்பட்ட மருத்துவர்களை இஸ்ரேல் ராணுவம் துன்புறுத்துவதாக அவர்களின் வழக்குரைஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். போரின்போது முதலுதவிப் பணிகளில் ஈடுபட்டிருந்த மருத்துவர்களை சட்டவிரோதம... மேலும் பார்க்க

பொலிவியாவில் தொடர் கனமழை, வெள்ளம்! 24 பேர் பலி!

பொலிவியா நாட்டில் தொடர் கனமழை பெய்து வருவதால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர் மழையால் 8 மாகாணங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் முழுக்க மழ... மேலும் பார்க்க