செய்திகள் :

ஏக்நாத் ஷிண்டேவை பாராட்டிய சரத் பவாருக்கு சிவசேனா எதிர்ப்பு!

post image

தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை பாராட்டியதற்கு சிவசேனா புதன்கிழமை கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதுதொடர்பாக செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத் கூறியது,

அமித் ஷாவின் உதவியுடன் சிவசேனாவை பிளவுபடுத்தியது ஷிண்டே தான், அவரைப் பாராட்டுவது பாஜக தலைவரை கௌரவிப்பதற்கு ஒப்பானது.

98-வது அகில பாரதிய மராத்தி சாகித்ய சம்மேளனத்தின்போது, ​​ஏக்நாத் ஷிண்டே தில்லியில் சரத் பவாரிடம் இருந்து மகாத்ஜி ஷிண்டே ராஷ்ட்ரீய கௌரவ் புரஸ்கார் விருதைப் பெற்றார். அடுத்த வாரம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ள இலக்கியக் கூட்டத்தின் வரவேற்புக் குழுவிற்கு பவார் தலைமை தாங்குகிறார்.

2022ஆம் ஆண்டு மகாராஷ்டிரத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா-என்சிபி ஆட்சியைக் கவிழ்த்ததால், சரத் பவார் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளக்கூடாது என்று சஞ்சய் ராவுத் கூறினார்.

அரசியலில் சில விஷயங்களைத் தவிர்க்க வேண்டும். மகாராஷ்டிரத்தின் எதிரியாக நாங்கள் கருதும் ஒருவருக்கு இதுபோன்ற மரியாதை வழங்குவது மகாராஷ்டிராவின் பெருமைக்கு ஒரு அதிர்ச்சி. பவார் வித்தியாசமாக நினைத்திருக்க வேண்டும், ஆனால் அத்தகைய அரசியல் மகாராஷ்டிர மக்களுக்குப் பிடிக்கவில்லை.

நீங்கள் (சரத் பவார்) ஒரு மூத்த அரசியல்வாதி, நாங்கள் உங்களை மதிக்கிறோம். ஆனால், அமித் ஷாவின் உதவியுடன் பாலாசாகேப் தாக்கரேவின் சிவசேனாவைப் பிரித்து மகாராஷ்டிராவைப் பலவீனப்படுத்தியவர்கள், நீங்கள் அத்தகைய மக்களை மதிக்கிறீர்கள். இது மராத்திய மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளது என்று அவர் கூறினார்.

மாகி பௌர்ணமி: சங்கமத்தில் 1.60 கோடி பேர் புனித நீராடல்!

மாகி பௌர்ணமியை முன்னிட்டு பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் கிட்டத்தட்ட 1.60 கோடி பேர் புனித நீராடியதாக மாநில அரசு அறிக்கையில் தெரிவித்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைப... மேலும் பார்க்க

இலவசங்களால் மக்கள் உழைப்பதற்குத் தயாராக இல்லை: உச்ச நீதிமன்றம்!

தேர்தலுக்கு முன்பு கட்சிகள் இலவசங்களை வழங்குவதாக வாக்குறுதி அளிப்பது குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நகர்ப்புறங்களில் வீடற்றவர்கள் தங்குவதற்கான உரிமை தொடர்பான வழக்கு விசாரணை நீதிபதிகள்... மேலும் பார்க்க

ஆம் ஆத்மியிடமிருந்து விடுதலை பெற விரும்பும் பஞ்சாப்: பாஜக

பஞ்சாப் விரைவில் ஆம் ஆத்மி கட்சியிடமிருந்து விடுதலை பெறும் என பாஜக தலைவர் துஷ்யந்த் கௌதம் கூறியுள்ளார். இதுதொடர்பாக ஆங்கில ஊடகத் தளமான ஏஎன்ஐ-க்கு அவர் அளித்த பேட்டியில், பஞ்சாப் மக்கள் தாங்கள் ஏமாற்றப... மேலும் பார்க்க

மும்பையில் ஜிபிஎஸ் நோய்க்கு முதல் பலி!

மும்பையில் ஜிபிஎஸ் நோய்த் தொற்றுக்கு ஒருவர் பலியாகியுள்ளார். இது மும்பையில் பதிவான முதல் இறப்பாகும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். புணேவில் சமீபத்தில் ஜிபிஎஸ் என அழைக்கப்படும் கிலான் பாரே ச... மேலும் பார்க்க

ரிஷப் பந்த் உயிரைக் காப்பாற்றிய இளைஞர் காதலியுடன் தற்கொலை முயற்சி!

கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த்தின் உயிரைக் காப்பாற்றிய இளைஞர், தனது காதலியுடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் காதலி உயிரிழந்த நிலையில், இளைஞர் உயிருக்குப் போராடி வருகிறார். மேலும் பார்க்க

பெண்களுக்கு வீட்டிலிருந்து வேலை: ஆந்திர ஐடி கொள்கையில் மாற்றம்!

ஆந்திர பிரதேசத்தில் குறிப்பாகப் பெண்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் திட்டத்தை பெரிதளவில் செயல்படுத்தவுள்ளதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.கரோனா பேரிடர் காலத்தில் தகவல் தொழில்நுட்பத... மேலும் பார்க்க