செய்திகள் :

வார விடுமுறை நாள்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

post image

வார விடுமுறை நாள்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வரும் 14/02/2025 (வெள்ளிக்கிழமை) 15/02/2025 (சனிக்கிழமை) 16/02/2025 (ஞாயிறு) வார விடுமுறை நாள்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 14/02/2025 (வெள்ளிக்கிழமை) அன்று 245 பேருந்துகளும், 15/02/2025 (சனிக்கிழமை) 240 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: தேமுதிகவுக்கு மாநிலங்களவை பதவி உறுதி: விரைவில் பெயர் அறிவிப்பு!

சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 14/02/2025 வெள்ளிக்கிழமை அன்று 51 பேருந்துகளும் 15/02/2025 சனிக்கிழமை அன்று 51 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது,

மேலும் மாதவரத்திலிருந்து 14/02/2025 அன்று 20 பேருந்துகளும் 15/02/2025 அன்று 20 பேருந்துகளும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது .

பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணம் செய்யுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

சிறுமியைக் கட்டாயப்படுத்தி பிச்சையெடுக்க வைத்த பெற்றோர் மீது வழக்கு!

மகாராஷ்டிர மாநிலம் தாணே மாவட்டத்தில் 17 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி பிச்சையெடுக்க வைத்த பெற்றோர் மீது அம்மாநில காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.தாணேவின் கல்வா பகுதியைச் சேர்ந்த தம்பதி தங்... மேலும் பார்க்க

தேர்தல் ஆணையர்கள் நியமன வழக்கு: விசாரணை பிப். 19-க்கு மாற்றம்!

தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் மத்திய அரசு கொண்டுவந்த புதிய சட்டத்தின்படி நியமனம் செய்யப்படுவதற்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை பிப். 19 ஆம் தேதிக்கு எடுத்துக்கொள்ளப்படும் ... மேலும் பார்க்க

இந்தியாவின் எரிசக்தி துறையில் ஏராளமான முதலீடுகளுக்கு வாய்ப்பு: பிரதமர் மோடி

இந்தியாவில் பல கண்டுபிடிப்புகள் மற்றும் உள்கட்டமைப்பு காரணமாக, இயற்கை எரிவாயு விநியோகம் அதிகரித்து வருவதால் எதிர்காலத்தில் இயற்கை எரிவாயு பயன்பாடு அதிகரிக்க வழிவகுக்கும் என்றும் இந்தத் துறைகளில் ஏராளம... மேலும் பார்க்க

இலவச மதுபானம், கேளிக்கை விடுமுறைகள் வழங்கி ஊழியர்களை ஈர்க்கும் நிறுவனம்!

ஜப்பானைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனம் புதிய ஊழியர்களை ஈர்க்க இலவச மதுபானம் மற்றும் கேளிக்கை விடுமுறைகள் வழங்கும் புதுமையான திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.அந்நாட்டின் ஒசாகா மாகாணத்தைச் சேர்ந்த சிறிய த... மேலும் பார்க்க

ஆந்திரம்: பறவைகள் கண்காட்சி திடலில் தீ விபத்து!

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள சிதாரா மைய கண்காட்சி திடலில் தீடீர் தீ விபத்து ஏற்பட்டது.இந்த திடலில் பறவைகள் கண்காட்சி நடைபெற்று வந்த நிலையில், கண்காட்சிக்காக வைக்கப்பட்டு இருந்த பறவைகளும், பெரிய அள... மேலும் பார்க்க

லாம் ரிசர்ச் இந்தியாவில் ரூ.10,000 கோடி முதலீடு: அஷ்வினி வைஷ்ணவ் தகவல்

புதுதில்லி: அமெரிக்காவைச் சேர்ந்த செமிகண்டக்டர் நிறுவனமான லாம் ரிசர்ச், இந்தியாவில் குறிப்பிடத்தக்க ரூ.10,000 கோடி முதலீட்டை அறிவித்துள்ளது என மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஷ... மேலும் பார்க்க