செய்திகள் :

இலவச மதுபானம், கேளிக்கை விடுமுறைகள் வழங்கி ஊழியர்களை ஈர்க்கும் நிறுவனம்!

post image

ஜப்பானைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனம் புதிய ஊழியர்களை ஈர்க்க இலவச மதுபானம் மற்றும் கேளிக்கை விடுமுறைகள் வழங்கும் புதுமையான திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

அந்நாட்டின் ஒசாகா மாகாணத்தைச் சேர்ந்த சிறிய தொழில்நுட்ப நிறுவனமான ’டிரஸ்ட் ரிங்’ மற்ற பெரிய நிறுவனங்களைப் போல் அதிக சம்பளம் மற்றும் ஊதியப் பயன்களை வழங்காமல், அதன் ஊழியர்களுக்கு பணி நேரத்தில் இலவசமாக மதுபானம் வழங்கி வருகின்றது. மேலும், அந்த மதுபானத்தின் போதையால் அவர்கள் சோர்வடைந்தால் ஓய்வு எடுக்க அதிகளவில் கேளிக்கை விடுமுறைகளையும் வழங்கி வருகின்றது.

இந்த திட்டம் அங்கு புதியதாக பணியில் சேருவோரை அதிக அளவில் ஈர்த்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், பிற நிறுவனங்களைப் போல புதிய ஊழியர்களுக்கு அதிக சம்பளம் வழங்க முடியாததினால், இத்தகைய ஓர் திட்டத்தை வகுத்ததாகவும், சம்பளத்தை விட இதுபோன்ற சலுகைகளை ஊழியர்கள் அதிகளவில் விரும்புகிறார்கள் என்று அந்நிறுவனத்தின் செயல்தலைவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க:பிரிட்டனில் இந்திய வம்சாவளி பெண்ணுக்கு இனப் பாகுபாடு!

மேலும், அவரது நிறுவனத்தின் ஊழியர்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஊதியமே 2,22,000 யென் (ரூ.1.27 லட்சம்) என்பதினால் அதற்கு மேல் வழங்க முடியாத தங்களைப் போன்ற புதிய நிறுவனங்கள் இதுபோன்ற புதுமையான திட்டங்களை வகுத்து ஊழியர்களை ஈர்க்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, ஜப்பான் நாட்டு நிறுவனங்கள் பெரும்பாலும் வழக்கமான அலுவலக மரபுகளை பின்பற்றுவதைவிட ஊழியர்களுக்கு பிடித்தமான அலுவலக முறைகளையும் சூழலையும் உருவாக்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றன.

ஊழியர்கள் பணிநேரத்தில் தூங்குவதை பெரும்பாலான நாடுகள் சோம்பேறித்தனமாக கருதி வரும் நிலையில், ஜப்பான் நாட்டு நிறுவனங்கள் ‘இன்யெமுறி’ என்றழைக்கப்படும் பணியிடங்களில் பணியாளர்கள் தூங்கும் முறையை ஊக்குவிப்பது குறிப்பிடத்தக்கது.

மாசி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று(பிப். 12) மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. கேரள மாநிலம், சபரிமலையில் உள்ள பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோயிலில் வருடாந்திர மண்டல பூஜை காலம் கடந்த நவம்பா் 1... மேலும் பார்க்க

புதிய ஆளுநர் கையெழுத்துடன் ரூ.50 நோட்டுக்கள்! ஆர்பிஐ தகவல்!

இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநரின் கையெழுத்துடன் ரூ.50 பணத்தாள்கள் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்திய ரிசர்வ் வங்கி இன்று (பிப்.12) வெளியிட்டுள்ள அறிக்கையில் புதிய ஆளுநராக பதவியேற... மேலும் பார்க்க

மீண்டும் சின்ன திரையில் நதியா!

நடிகை நதியா சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுள்ளார்.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சி சூப்பர் சிங்கர் ஜூனியர். இந்நிகழ்ச்சியின் 10-வது சீசன... மேலும் பார்க்க

இந்திய எல்லையில் 1.1 கிலோ போதைப் பொருள் பறிமுதல்! 2 பேர் கைது!

பஞ்சாப் மாநிலத்திலுள்ள இந்திய எல்லையில் 1.1 கிலோ அளவிலான போதைப் பொருள் கடத்த முயன்ற 2 பேர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடி... மேலும் பார்க்க

காதலர் நாள்: திரையரங்குகளில் வெளியாகும் 10 படங்கள்!

காதலர் நாளை கொண்டாடும் வகையில் திரையரங்குகளில் வரும் பிப். 14 ஆம் தேதி 10 படங்கள் வெளியாகவுள்ளன.இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், நவீன இளைஞர்களின் காதலைப் பேசும் படமாக உருவாகியுள்ள திரைப்படம் ’2கே லவ... மேலும் பார்க்க

லிபியா சிறையிலிருந்து 24 அகதிகள் விடுதலை!

வட அப்பிரிக்க நாடான லிபியாவின் சிறையிலிருந்து 24 அகதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.தலைநகர் திரிப்பொலியிலுள்ள அபுஸ்லியென் சிறையிலிருந்து அந்நாட்டில் தஞ்சம் புகுந்த பெண்கள் குழந... மேலும் பார்க்க