செய்திகள் :

ரயானுடன் ஆன்மிக சுற்றுலாச் சென்ற பவித்ரா!

post image

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமடைந்த ரயான் மற்றும் பவித்ரா ஜனனி இருவரும் ஆன்மிக சுற்றுலா சென்றுள்ளனர்.

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் டாப் 5 போட்டியாளர்களில் இருவர் பவித்ரா ஜனனி மற்றும் ரயான். தொடர்ந்து, இந்நிகழ்ச்சியில் முதலில் ரயான் வெளியேறிய நிலையில், இவரைத் தொடர்ந்து பவித்ரா ஜனனி வெளியேறினார்.

சமீபத்தில் நடந்துமுடிந்த பிக் பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் 24 பேரும் பங்கேற்று இருந்தனர்.

நடிகை பவித்ரா ஜனனி ஆன்மிக தலங்களுக்கும், இயற்கை சூழல்கொண்ட இடங்களுக்கும் சென்று வருவது வழக்கமான ஒன்று. இதை அவர் பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போதே கூறியிருந்தார்.

இதையும் படிக்க: புதிய படத்தை தயாரித்து இயக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

இந்த நிலையில், ரயான் மற்றும் பவித்ரா ஜனனி இருவரும் பர்வத மலைக்குச் சென்றுவந்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் விடியோக்களை பவித்ரா ஜனனி வெளியிட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.

பவித்ரா ஜனனி தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “நான் என்னுடைய இடத்திற்கு சென்று வந்துவிட்டேன். அனுபவம் எப்படி ரயான் ” என்று பதிவிட்டு இருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் ரயான், “மிக சிறந்த அனுபவம். எப்படியோ உன்னை அழைத்துச் சென்று வந்துவிட்டேன்” என்று பதிவிட்டுள்ளார்.

ரயான் மற்றும் பவித்ராவின் ஆன்மிகப் பயணம் குறித்து ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

ஆந்திரம்: பறவைகள் கண்காட்சி திடலில் தீ விபத்து!

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள சிதாரா மைய கண்காட்சி திடலில் தீடீர் தீ விபத்து ஏற்பட்டது.இந்த திடலில் பறவைகள் கண்காட்சி நடைபெற்று வந்த நிலையில், கண்காட்சிக்காக வைக்கப்பட்டு இருந்த பறவைகளும், பெரிய அள... மேலும் பார்க்க

லாம் ரிசர்ச் இந்தியாவில் ரூ.10,000 கோடி முதலீடு: அஷ்வினி வைஷ்ணவ் தகவல்

புதுதில்லி: அமெரிக்காவைச் சேர்ந்த செமிகண்டக்டர் நிறுவனமான லாம் ரிசர்ச், இந்தியாவில் குறிப்பிடத்தக்க ரூ.10,000 கோடி முதலீட்டை அறிவித்துள்ளது என மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஷ... மேலும் பார்க்க

பாரிஸில் பிரதமர் மோடி - சுந்தர் பிச்சை சந்திப்பு

பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையும் பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்துக்கொண்டனர். இந்த சந்திப்பின்போது இந்தியாவின் டிஜிட்டல் மாற்றத்தில் கூகுள் நெர... மேலும் பார்க்க

பிப். 17-ல் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆலோசனை!

வருகிற பிப். 17 ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸின் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு ... மேலும் பார்க்க

வார விடுமுறை நாள்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

வார விடுமுறை நாள்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.இது பற்றி அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்... மேலும் பார்க்க

தமிழகத்திற்கு அண்ணாமலை நிதி பெற்றுத் தரலாமே! - அன்பில் மகேஸ்

ஒவ்வொரு முறையும் தில்லி செல்லும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக பள்ளி மாணவர்களுக்கு நிதி பெற்றுத் தரலாமே என அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களுடன் பேசிய அவர், "தமிழக பாஜக... மேலும் பார்க்க