செய்திகள் :

பிப். 15-ல் மாநில குழந்தைகள் அறிவியல் மாநாடு தொடக்கம்!

post image

தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் செஸ்டாட்ஸ் அமைப்பும் இணைந்து நடத்து 32-ஆவது குழந்தைகள் அறிவியல் மாநில மாநாடு பிப்ரவரி 15 மற்றும் 16-ம் தேதிகளில் நடைபெறவுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியில் நடைபெறும் இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களாக தமிழக அமைச்சர்கள் சிவ.வீ. மெய்யநாதன் மற்றும் எஸ். ரகுபதி ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்த நிகழ்ச்சி குறித்து மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

“தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆண்டுதோறும் ஒருங்கிணைத்து நடத்தும் குழந்தைகள் அறிவியல் மாநாட்டில், 10 வயது முதல் 17 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஏதேனும் ஒரு கருப்பொருள் கொடுக்கப்படும். அந்த கருப்பொருளில் மூன்று மாதங்கள் ஆய்வு செய்யும் குழந்தைகள், அந்த ஆய்வுக்கட்டுரைகள் மாவட்ட அளவில் சமர்ப்பிப்பார்கள். மாவட்ட அளவில் தேர்வாகும் ஆய்வுக்கட்டுரைகள் மண்டல அளவிலும், மண்டல அளவில் தேர்வு செய்யப்படும் ஆய்வுக்கட்டுரைகள் மாநில அளவிலும் பங்கேற்பார்கள்.  மாநில மாநாட்டில் 30 சிறந்த ஆய்வுக் கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டு அகில இந்திய மாநாட்டில் பங்கேற்று பங்கேற்பார்கள்.

அந்த வகையில், 32-ஆவது குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் கருப்பொருளாக ”பாதுகாப்பான நீர் மேலாண்மை” வழங்கப்பட்டது. இதனடிப்படையில், தமிழ்நாடு முழுவதும் 15,000 ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.  இதில் 125 சிறந்த ஆய்வுக்கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டு பிப்ரவரி 15 மற்றும் 16 தேதிகளில் நடைபெறும் மாநில மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர்.

பிப்ரவரி 15-ஆம் தேதி காலை 10 மணிக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத் தலைவர் பேராசிரியர் திருநாவுக்கரசு தலைமையில் நடைபெறும் துவக்கவிழாவில் கலந்துகொண்டு தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் மாநாட்டை துவக்கிவைக்கவுள்ளார்.

பிப்ரவரி 16-ஆம் தேதி நடைபெறும் நிறைவு விழாவில், மாநில அளவில் தேர்வு செய்யப்படும் 60 குழந்தை விஞ்ஞானிகளுக்கு தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி விருது வழங்கவுள்ளார்.

நாங்கள் என்ன ஒன்பதா? தவெகவுக்கு எதிராக கொதித்தெழுந்த திருநர்கள்

நடிகர் விஜய் தொடங்கிய தவெக அரசியல் கட்சிப் பணிகள் படு ஜோராக நடைபெற்று வரும் நிலையில், முதல்கட்டமாக கட்சிக்குள் என்னென்ன அணிகள் உருவாக்கப்பட வேண்டும் என்பது தொடர்பான அறிவிப்பு நேற்று வெளியானது. மேலும் பார்க்க

பள்ளிகளில் பாலியல் தொல்லையா? தமிழக அரசின் புகார் எண்!

பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டால் புகார் தெரிவிக்க இலவச தொலைபேசி எண்ணை தமிழக பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சம்பவங்க... மேலும் பார்க்க

வங்கிகள் செய்திருக்கும் மிகப்பெரிய மாற்றங்கள்! தெரியாவிட்டால் பாக்கெட் காலி!!

இந்த பிப்ரவரி மாதம் மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல், தனிநபர் வருமான வரி விலக்கு உச்சத் தொகை அதிகரிப்பு, ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டது என நிதித்துறை சார்ந்த தகவல்கள் வந்துகொண்டேயிருக்கின்றன. மேலும் பார்க்க

காட்சிப்படுத்தப்பட்ட ஏசி புறநகர் ரயில்! பயன்பாட்டுக்கு வருவது எப்போது?

சென்னை: சென்னை ஐசிஎஃப் ரயில்வே தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட ஏசி புறநகர் ரயில் இன்று மக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) அற... மேலும் பார்க்க

மார்ச் 15-க்குள் மீண்டும் சாலைப் பாதுகாப்பு தணிக்கைச் செய்யப்பட வேண்டும்: அமைச்சர் எ.வ.வேலு

சென்னை: மார்ச் 15 ஆம் தேதிக்குள் மீண்டும் சாலைப் பாதுகாப்பு தணிக்கைச் செய்யப்பட வேண்டும் என்றும், இந்த ஆண்டு பொறியாளர்களுக்குச் சாலைப் பாதுகாப்பு தணிக்கைப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்று பொதுப்பணிக... மேலும் பார்க்க

சாலைகளில் தேவையில்லாத வேகத்தடை அமைக்க வேண்டாம் : அமைச்சர் எ.வ. வேலு

சாலைகளில் தேவையில்லாத இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டாம், அவ்வாறு தேவைப்படின், அதற்கான அறிவிப்புப் பலகைகளுடன் அமைக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் எ.வ. வேலு அறிவுறுத்தியுள்ளார்.நெடுஞ்சாலைகளில் மேற்கொள்ள... மேலும் பார்க்க