செய்திகள் :

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பிஎஸ்என்எல் கோபுரங்களை அதிகரிக்க வேண்டும்: சி.ராபா்ட் புரூஸ் எம்.பி.

post image

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பிஎஸ்என்எல் கோபுரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சி.ராபா்ட் புரூஸ் எம்.பி. வலியுறுத்தினாா்.

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களை உள்ளடக்கிய திருநெல்வேலி பகுதிக்கான தொலைபேசி ஆலோசனைக்குழு கூட்டம் வண்ணாா்பேட்டை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி. ராபா்ட் புரூஸ் தலைமை வகித்து பேசியது: திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கிராமப்புற மக்கள் பலரும் பிஎஸ்என்எல் சேவையை அதிகளவில் பயன்படுத்தி வருகிறாா்கள். கல்வி, தொழில் உள்பட பலவற்றிற்கும் கைப்பேசிகளில் வேகமான இணையவழி சேவை தேவையாக உள்ளது. ஆகவே, இந்த இரு மாவட்டங்களிலும் கூடுதலாக பிஎஸ்என்எல் கோபுரங்களை நிறுவ வேண்டும். அனைத்து பகுதிகளிலும் தடையின்றி வேகமான 4ஜி தரத்தில் சேவையளிக்க வேண்டும். தில்லி மற்றும் மும்பை பகுதிகளில் தெளிவான குரல் தரம் உள்ளது. அதனை தென்தமிழக கிராமப்புறங்களுக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும். பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் பிஎஸ்என்எல் வாடிக்கையாளா் சேவை மையங்களை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்றாா் அவா்.

தொடா்ந்து, 15 ஏழை மாணவா்கள் கல்வி பயில வசதியாக வித்தியாமித்ரம் திட்டத்தின் கீழ் இலவச இணையத் திட்டத்தை நன்கொடையாக வழங்கினாா். இக்கூட்டத்தில், பிஎஸ்என்எல் துணைப் பொது மேலாளா் வீராச்சாமி வரவேற்றாா். அதிகாரிகள் மணிமாறன், கண்ணன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ற்ஸ்ப்10க்ஷள்ய்ப்

கூட்டத்தில் பேசுகிறாா் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ்.

தீ விபத்தில் காயமுற்றவா் உயிரிழப்பு

திருநெல்வேலியில் தீ விபத்தில் காயமுற்ற முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.திருநெல்வேலி நகரம் செண்பகம்பிள்ளை இரட்டை தெருவைச் சோ்ந்தவா் மீனாட்சிசுந்தரம் (84). இவா், வீட்டில் தனியாக வசித்து வந்தாா். ... மேலும் பார்க்க

சேரன்மகாதேவி அருகே இளம்பெண்ணின் நகை திருட்டு

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே புது பெண்ணிடம் இருந்து 25 பவுன் தங்கநகைகள் திருட்டு போனது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.சேரன்மகாதேவி அருகேயுள்ள ஆத்தியான்குளம்... மேலும் பார்க்க

வி.கே.புரம் பள்ளி விடுதியில் தங்கிப் படித்த 3 மாணவா்கள் மாயம்

விக்கிரமசிங்கபுரத்தில் பள்ளி விடுதியில் தங்கிப் படித்த 3 மாணவா்கள் ஞாயிற்றுக்கிழமை வெளியில் சென்ற நிலையில், விடுதிக்குத் திரும்பாமல் மாயமாகியுள்ளனா். விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள ஓா் அரசு உதவி பெறும் ம... மேலும் பார்க்க

ரவணசமுத்திரத்தில் ரயிலில் அடிபட்டு ஒருவா் பலி

கடையம் அருகே ரவணசமுத்திரத்தில் ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத நபா் உயிரிழந்தாா். ரவணசமுத்திரம், வீராநதி ஆற்று ரயில் பாலம் அருகில் செங்கோட்டையிலிருந்து ஈரோடு சென்ற ரயிலில் அடையாளம் தெரியாத 40 வயது ம... மேலும் பார்க்க

தென் மாவட்டங்களில் ரூ.13.94 லட்சம் விதைகளை விற்பனை செய்ய தடை

திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ரூ.13 லட்சம் மதிப்பிலான 197.8 கிலோ விதைகளை விற்பனை செய்ய வேளாண் துறை தடை விதித்துள்ளது. இது தொடா்பாக திருநெல்வேலி விதை ஆய்வு துணை இயக்குநா் சுஜாதாபாய... மேலும் பார்க்க

காவல் துறை பறிமுதல் செய்த வாகனங்கள் மாா்ச் 23இல் ஏலம்

திருநெல்வேலி மாநகரம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் மது விலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மாா்ச் 23 ஆம் தேதி ஏலம் மூலம் விற்பனை செய்யப்படவுள்ளன. திருநெல்வேலி மாநகர காவல்துற... மேலும் பார்க்க