செய்திகள் :

சிவகங்கை: மேடையில் ஆடும்போதே உயிரிழந்த நடனக் கலைஞர்; புத்தகத் திருவிழாவில் நடந்த சோகம்

post image

சிவகங்கை மன்னர் பள்ளி வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் புத்தகத் திருவிழா பிப்ரவரி 21ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

புத்தகத் திருவிழாவுக்கு வருகின்றவர்களை ஈர்க்கும் வகையில் அங்கு அமைக்கப்பட்டுள்ள அரங்கில் தினமும் காலை முதல் மாலை வரை இலக்கிய நிகழ்வுகளும், பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் கிராமிய கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.

நடனம் ஆடியபோது

அதன்படி, கடந்த 22 ஆம் தேதி மாலை நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் நடனக் கலைஞரும், நடன ஆசிரியருமான சிவகங்கை அகிலாண்டபுரத்தைச் சேர்ந்த முருகையா மகன் ராஜேஷ்கண்ணன் (வயது 53) என்பவர் நடனமாடிக்கொண்டிருந்தபோது திடீரென மேடையில் மயங்கி விழுந்தார்.

விழாக்குழுவினர், அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ராஜேஷ்கண்ணன் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

ராஜேஷ் கண்ணன்

புத்தகத் திருவிழாவில் நடனக் கலைஞர் மேடையிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சிவகங்கையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Vikatan Whatsapp Channel

வணக்கம் வாசகர்களே விகடனின் லேட்டஸ்ட் செய்தி அப்டேட்கள், எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்கள், சுட சுட சுவாரஸ்யமான கட்டுரைகள் என உங்களை எப்போதும் ட்ரெண்டியாக வைத்திருக்க விகடன் வாட்ஸ்அப் சேனலில் இணைந்திருங்கள்.

Click here: https://bit.ly/VikatanWAChannel

Ooty: கிணற்றுக்குள் எட்டிப் பார்த்த தாய்; சடலமாய் குழந்தைகள்; ஊட்டியை உலுக்கிய துயரம்; நடந்தது என்ன?

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகில் உள்ள நடுவட்டம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சதீஷ்- ஷாலினி தம்பதி. இவர்களுக்கு நித்தீஷ் என்கிற 5 வயது ஆண் குழந்தையும், பிரிநிதா என்கிற 3 வயது பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலை... மேலும் பார்க்க

Maharashtra: போலீஸிடமிருந்து தப்பிக்க மணலைக் கொட்டிய லாரி ஓட்டுநர்; உயிரோடு புதைந்த தொழிலாளர்கள்

மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்காலிக குடிலில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது லாரியில் கொண்டு வரப்பட்ட மணலைப் போட்டதில் 5 உயிரிழந்துள்ளனர்.ஜல்னா மாவட்டத்தில் இருக்கும் பசோடி சிவார் என்ற இடத்தில் மேம்பாலம் ... மேலும் பார்க்க

தெலங்கானா: சுரங்கப்பாதை இடிந்து விபத்து; உள்ளே சிக்கிக்கொண்ட தொழிலாளர்கள் - மீட்புப் பணிகள் தீவிரம்!

தெலுங்கானா மாநிலம், நாகர்கர்னூல் மாவட்டத்திலுள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில், இன்று காலையில் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிற... மேலும் பார்க்க

மதுரை: ரயிலில் இருந்து தவறி விழுந்த ஸ்டேஷன் மாஸ்டர்... பணி செய்யும் ஸ்டேஷனிலேயே உயிரிழந்த சோகம்

கேரள மாநிலத்தை சேர்ந்த அனுசேசகர், மதுரை மாவட்டம் கள்ளிக்குடி ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். 32 வயதாகும் இவருக்கு திருமணமாகி 4 மாத கைக்குழந்தை உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு கள்ளிக்குடி ர... மேலும் பார்க்க

மூணாறு: சுற்றுலா சென்ற பஸ் கவிழ்ந்து விபத்து; நாகர்கோவில் கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலியான சோகம்!

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியைச் சேர்ந்த இரண்டாம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவ மாணவியர், கேரளாவுக்கு சுற்றுலா சென்றனர். நேற்று நாகர்கோவிலில் இருந்து கேரளா பதிவெண் கொண்... மேலும் பார்க்க

Canada: தரையிறங்கும் நேரத்தில் தலைகீழாக கவிழ்ந்த பயணிகள் விமானம்; 17 பேர் காயம்... 3 பேர் படுகாயம்!

அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தின் மினியாபோலிஸி விமான நிலையத்திலிருந்து டெல்டா ஏர் லைன்ஸ் ஜெட் விமானம் கனடாவை நோக்கிப் புறப்பட்டது. இந்த விமானத்தில் 80 பயணிகள், 4 விமானிகள் பயணம் செய்தனர். விமானம் கன... மேலும் பார்க்க