செய்திகள் :

தெலங்கானா: சுரங்கப்பாதை இடிந்து விபத்து; உள்ளே சிக்கிக்கொண்ட தொழிலாளர்கள் - மீட்புப் பணிகள் தீவிரம்!

post image

தெலுங்கானா மாநிலம், நாகர்கர்னூல் மாவட்டத்திலுள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில், இன்று காலையில் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

SLBC சுரங்கப்பாதையில் இன்று காலை தொழிலாளர்கள் தங்கள் பணிகளைச் செய்துகொண்டிருந்தபோது அதன் ஒருபகுதி இடிந்து விழுந்தது. குறிப்பாக, சுரங்கப்பாதையின் 14-வது கிலோ மீட்டரில் மேற்பரப்பில் 3 மீட்டர் தூரத்துக்கு இடிந்து விழுந்தது." என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சம்பவத்தின்போது சுரங்கப்பாதையினுள் வேலையில் ஈடுபட்டிருந்தவர்களில் 8 பேர் தற்போது உள்ளே சிக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்களில், நான்கு பேர் ஜார்கண்ட், இரண்டு பேர் உத்தரப்பிரதேசம், ஒருவர் ஜம்மு காஷ்மீர், ஒருவர் பஞ்சாப் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

மேலும், சிக்கிக்கொண்ட இந்த 8 பேரில், இரண்டு பேர் தி ராபின்ஸ எனும் அமெரிக்க சுரங்க நிறுவனத்தைச் சேர்ந்த இந்திய பொறியாளர்கள். இந்த நிலையில், கடந்த ஆண்டு உத்தரககாண்ட்டில் சுரங்கப்பாதையில் விபத்து ஏற்பட்டபோது அதில் சிக்கிக்கொண்ட தொழிலாளர்களை மீட்ட குழுவினர் மற்றும் நிபுணர்களை தெலங்கானா அரசு அணுகிவருகிறது. ஒருபக்கம், முதல்வர் ரேவந் ரெட்டியின் உத்தரவின்படி தீயணைப்புப் படையினர் உள்ளிட்டோர் சுரங்கப்பாதையில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இதுபற்றி அறிந்ததும் சிறப்பு ஹெலிகாப்டரில் உடனடியாக சம்பவம் இடத்துக்கு வந்த மாநில நீர்ப்பாசனத்துறை அமைச்சர் உத்தம் குமார் ரெட்டி, உள்ளே சிக்கியிருப்பவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்று நம்புவதாகத் தெரிவித்தார்.

அதோடு, ``இந்தச் சுரங்கப்பாதை 44 கி.மீ நீளம் கொண்டது. இரண்டு பக்கங்களிலிருந்தும் இயந்திரங்கள் மூலம் துளையிடும் பணிகள் நடைபெறுகின்றன. ஒருபக்கம் 20 கி.மீட்டரும், மறுபக்கம் 14 கி.மீட்டரும் தோண்டப்பட்டிருக்கிறது. இதற்கிடைப்பட்ட 9.5 கி.மீட்டரில் நீர்க்கசிவு காரணமாக அந்த நீரை வெளியேற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்." என்று அமைச்சர் கூறினார். மேலும், உள்ளே சிக்கியிருப்பவர்கள் பற்றி மாவட்ட ஆட்சியர் பி சந்தோஷ் கூறுகையில், சிக்கியவர்களுடன் எந்த தொடர்பும் இல்லையென்றும், உள்தொடர்பு பொறிமுறை தோல்வியடைந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

மதுரை: ரயிலில் இருந்து தவறி விழுந்த ஸ்டேஷன் மாஸ்டர்... பணி செய்யும் ஸ்டேஷனிலேயே உயிரிழந்த சோகம்

கேரள மாநிலத்தை சேர்ந்த அனுசேசகர், மதுரை மாவட்டம் கள்ளிக்குடி ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். 32 வயதாகும் இவருக்கு திருமணமாகி 4 மாத கைக்குழந்தை உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு கள்ளிக்குடி ர... மேலும் பார்க்க

மூணாறு: சுற்றுலா சென்ற பஸ் கவிழ்ந்து விபத்து; நாகர்கோவில் கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலியான சோகம்!

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியைச் சேர்ந்த இரண்டாம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவ மாணவியர், கேரளாவுக்கு சுற்றுலா சென்றனர். நேற்று நாகர்கோவிலில் இருந்து கேரளா பதிவெண் கொண்... மேலும் பார்க்க

Canada: தரையிறங்கும் நேரத்தில் தலைகீழாக கவிழ்ந்த பயணிகள் விமானம்; 17 பேர் காயம்... 3 பேர் படுகாயம்!

அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தின் மினியாபோலிஸி விமான நிலையத்திலிருந்து டெல்டா ஏர் லைன்ஸ் ஜெட் விமானம் கனடாவை நோக்கிப் புறப்பட்டது. இந்த விமானத்தில் 80 பயணிகள், 4 விமானிகள் பயணம் செய்தனர். விமானம் கன... மேலும் பார்க்க

கோயில் விழாவில் ஆக்ரோஷமாக மோதிக்கொண்ட யானைகள்; அலறிய பக்தர்கள் - 3 பேர் பலி... 32 பேர் காயம்!

கேரள மாநிலத்தில் கோயில் விழாக்களில் யானைகள் முக்கிய அங்கம் வகிக்கின்றன. சுவாமி எழுந்தருளல், ஊர்வலம் உள்ளிட்டவைகளுக்கு யானைகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த நிலையில் கோழிக்கோடு மாவட்டம், கோயிலாண்டி மணக்க... மேலும் பார்க்க

மதுரை மாட்டுத்தாவணியில் தோரண வாயில் இடிப்பு - விபத்தில் ஜேசிபி டிரைவர் மரணம்; ஒப்பந்ததாரர் படுகாயம்

மதுரையில் பல ஆண்டுகளுக்கு முன் உலத்தமிழ் மாநாடு நடத்தப்பட்டபோதும், அதற்கு பின்பு நடந்த அரசு நிகழ்ச்சிகளின்போதும் முக்கிய இடங்களில் தமிழுக்கு பெருமை சேர்த்தவர்களின் பெயரில் தோரண வளைவுகள் அமைக்கப்பட்டது... மேலும் பார்க்க

விருதுநகர்: பட்டாசு ஆலை வெடி விபத்து; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3-ஆக உயர்வு!

விருதுநகரை அடுத்த வச்சக்காரப்பட்டி காவல் எல்லைக்குட்பட்ட சின்னவாடி கிராமத்தில், சதானந்தபுரத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் (வயது 55) என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை, 'சத்யபிரபு ஃபயர் ஒர்க்ஸ் ஃபேக்டரி' எனும... மேலும் பார்க்க