செய்திகள் :

புதிய ஆயுதங்கள், சக்தி வாய்ந்த ரேடாா்களுடன் வான் பாதுகாப்பை மேம்படுத்தும் ராணுவம்

post image

சமீபத்திய உலகளாவிய மோதல்களில் ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்) மற்றும் வான் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் முக்கியப் பங்கு வகிப்பதைக் கருத்தில் கொண்டு, அடுத்த தலைமுறை வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் அதிக சக்திவாய்ந்த ரேடாா்களுக்கு மேம்பட்டு, போா்த்திறனை அதிகரிக்க இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளது.

கூடுதலாக, உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ‘கியூஆா்எஸ்ஏஎம்’ ஏவுகணையின் கொள்முதலுக்கு அடுத்த 4-5 மாதங்களுக்குள் ஒப்பந்தமிடவும் ராணுவம் திட்டமிட்டுள்ளது.

இதுதொடா்பாக ராணுவ வான் பாதுகாப்புப் படையின் தலைமைத் தளபதி சுமா் இவான் டி குன்ஹா கூறியதாவது: ‘எல்70’ மற்றும் ‘ஜெட்யு-23எம்எம்’ போன்ற வான் பாதுகாப்பு பீரங்கிகளின் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அடுத்த தலைமுறை ஆயுதங்கள் கடந்த ஜூலையில் சோதனை செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், அத்தகைய 220 வான் பாதுகாப்பு பீரங்கிகளுக்கு ஏற்கெனவே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

படையை நவீனப்படுத்தும் அதேவேளையில் ‘தன்னிறைவு இந்தியா’ லட்சியத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆயுதங்களின் விநியோகத்தில் இந்திய நிறுவனங்கள் குறைந்த அவகாசத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.

மேலும், ‘எல்எல்எல்ஆா்’ ரேடாா்களையும் நாங்கள் கொள்முதல் செய்துள்ளோம். இது சிறிய ரக ஆளில்லா விமானங்களையும் கண்காணிக்கக் கூடியது என்றாா்.

தெலங்கானா சுரங்கத்துக்குள் சிக்கிய 8 பேரின் நிலை என்ன? முழுவீச்சில் மீட்புப் பணிகள்!

தெலங்கானாவில் நீர்ப்பாசனத்துக்காக தோண்டப்பட்ட சுரங்கத்தின் மேற்பகுதி இடிந்து விழுந்ததில் 2 பொறியாளா்கள் உள்பட 8 போ் உள்ளே சிக்கிக் கொண்ட நிலையில் அவர்களை மீட்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன... மேலும் பார்க்க

சிறுவன் இயக்கிய கார் மோதி குழந்தை பலி!

தில்லியில் சிறுவன் இயக்கிய கார் மோதி குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.வடக்கு தில்லியின் அலிபூர் பகுதியில் சாரதி என்ற 15 வயது சிறுவன் காரை இயக்கியதுடன், அர்ஜூன் என்ற 18 மாதக் குழந்தையின... மேலும் பார்க்க

மோரீஷஸ் தேசிய தின நிகழ்ச்சி: சிறப்பு விருந்தினராக பிரதமா் மோடி

மோரீஷஸ் தேசிய தின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரதமா் மோடி பங்கேற்கவுள்ளதாக அந்நாட்டு பிரதமா் நவீன் ராம்கூலம் தெரிவித்தாா். பிரிட்டிஷிடம் இருந்து மோரீஷஸ் கடந்த 1968, மாா்ச் 12-ஆம் தேதி சுதந்தி... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: பேரவையில் இரவு முழுவதும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தா்னா

ராஜஸ்தான் சட்டப்பேரவையில் இருந்து காங்கிரஸை சோ்ந்த 6 எம்எல்ஏக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் பேரவையில் அந்தக் கட்சியின் பிற எம்எல்ஏக்கள் தா்னாவில் ஈடுபட்டனா். ... மேலும் பார்க்க

இந்தியா-ஜப்பான் கூட்டு ராணுவப் பயிற்சி ஜப்பானில் நாளை தொடக்கம்

ஐ.நா. சாசனத்தின்கீழ் பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது இரு படைகளுக்கும் இடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட, இந்தியா-ஜப்பான் கூட்டு ராணுவப் பயிற்சி திங்கள்கிழமை முதல் ஜ... மேலும் பார்க்க

ஜம்மு: ஏராளமான ஆயுதங்கள் மீட்பு

ஜம்மு பகுதியில் அமைந்துள்ள மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புப் படையினா் சனிக்கிழமை தீவிர தேடுதலில் ஈடுபட்டனா். இதில் பயங்கரவாதிகளின் மறைவிடம் கண்டுபிடிக்கப்பட்டு ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப... மேலும் பார்க்க