செய்திகள் :

சிறுவன் இயக்கிய கார் மோதி குழந்தை பலி!

post image

தில்லியில் சிறுவன் இயக்கிய கார் மோதி குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு தில்லியின் அலிபூர் பகுதியில் சாரதி என்ற 15 வயது சிறுவன் காரை இயக்கியதுடன், அர்ஜூன் என்ற 18 மாதக் குழந்தையின் மீது மோதி விபத்தையும் ஏற்படுத்தி விட்டார். இந்த விபத்தில் அர்ஜூனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, குழந்தை அர்ஜூனை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இருந்தபோதிலும், அர்ஜூனின் தலையில் காயம் ஏற்பட்டிருந்ததால், அர்ஜூன் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து, குழந்தையின் உடலை உடற்கூறாய்வுக்காக மருத்துவர்கள் அனுப்பி வைத்துள்ளனர்.

இதனிடையே, விபத்துக்கு காரணமான சிறுவன் சாரதியையும், காரின் உரிமையாளரான சிறுவனின் சகோதரரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிறார்களை வாகனங்களை இயக்க அனுமதித்தது, பெற்றோரின் பொறுப்பற்ற நடத்தை முதலான காரணங்களால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

தெலங்கானா சுரங்கத்தில் சிக்கியவர்களை நெருங்கிய மீட்புக் குழு!

தெலங்கானாவில் நீர்ப்பாசனத்துக்காக தோண்டப்பட்ட சுரங்கத்தின் மேற்பகுதி இடிந்து விழுந்ததையடுத்து, சுரங்கப்பாதையில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அவர்களை நெருங்கியுள்ளதாக ... மேலும் பார்க்க

பெண்களின் சக்தி நாட்டை வலுப்படுத்தும்: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்

அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சி வாயிலாக பிரதமா் மோடி நாட்டு மக்களுக... மேலும் பார்க்க

தெலங்கானா சுரங்க விபத்து: முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் ராகுல் காந்தி பேச்சு

தெலங்கானா சுரங்க விபத்து தொடா்பாக முதல்வர் ரேவந்த் ரெட்டியிடம் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொலைபேசியில் கேட்டறிந்தாா். தேசிய பேரிடர் மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுக்கள் மீட்பு நடவடிக்கையி... மேலும் பார்க்க

மாற்று சமூகத்தினரின் தெருவுக்குள் திருமண ஊர்வலம்: பட்டியலினத்தவர் மீது தாக்குதல்!

உத்தரப் பிரதேசத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்தவரின் திருமண ஊர்வலத்தில் மாற்று சமூகத்தினர் தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உத்தரப் பிரதேசத்தின் மீரட்டில் தாம்ராவலி கிராமத்தில் பட்டியலினத்த... மேலும் பார்க்க

மணிப்பூர்: அச்சுறுத்தும் வகையில் விடியோ வெளியிட்ட 2 கிளர்ச்சியாளர்கள் கைது

மணிப்பூரில் பாதுகாப்புப் படையினரை அச்சுறுத்தும் வகையில் விடியோ வெளியிட்ட 2 கிளர்ச்சியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மணிப்பூரில் கிராமத் தொண்டர்கள் சிலரை கைது செய்ததற்காக பாதுகாப்புப் படையினரை அச்சுற... மேலும் பார்க்க

தெலங்கானா சுரங்கத்துக்குள் சிக்கிய 8 பேரின் நிலை என்ன? முழுவீச்சில் மீட்புப் பணிகள்!

தெலங்கானாவில் நீர்ப்பாசனத்துக்காக தோண்டப்பட்ட சுரங்கத்தின் மேற்பகுதி இடிந்து விழுந்ததில் 2 பொறியாளா்கள் உள்பட 8 போ் உள்ளே சிக்கிக் கொண்ட நிலையில் அவர்களை மீட்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன... மேலும் பார்க்க