செய்திகள் :

வங்கதேசம்: சுதந்திரத்திற்கு பின் முதல் முறையாக பாகிஸ்தானுடன் நேரடி வர்த்தகம்!

post image

பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான அரசு அனுமதிப் பெற்ற நேரடி வர்த்தகம் முதல் முறையாகத் துவங்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் குறித்த பேச்சு வார்த்தையின்போது, 2025 பிப்ரவரி மாதத் துவக்கத்தில் பாகிஸ்தானிடமிருந்து சுமார் 50,000 டன் அரிசியை கொள்முதல் செய்யும் ஒப்பந்தத்தில் வங்கதேசம் கையெழுத்திட்டது.

அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், முதல் முறையாக அரசின் சரக்குகளை ஏற்றிக்கொண்டு பாகிஸ்தான் தேசிய கப்பல் கழகத்தின் (PNSC) கப்பல் ஒன்று வங்கதேசத்தின் துறைமுகத்தை அடையவுள்ளதாகவும், இது கடல்சார் வர்த்தக உறவுகளை மேம்படுத்த உதவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், பாகிஸ்தானிலிருந்து 50,000 டன் அரிசியானது இரண்டு கட்டமாக வங்கதேசத்திற்கு இறக்குமதி செய்யப்படவுள்ளதாகவும், அதன் 2 ஆம் கட்ட இறக்குமதி சுமார் 25,000 டன் அரியுடன் மார்ச் மாதத் துவக்கத்தில் மேற்கொள்ளப்படும் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: தடையை நீக்கிய தலிபான்கள்! மீண்டும் இயங்கும் பெண்கள் வானொலி நிலையம்!

முன்னதாக, பாகிஸ்தானின் ஓர் அங்கமாக கிழக்கு பாகிஸ்தான் என்று அழைக்கப்பட்ட மாகாணம் கடந்த 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் வெற்றி பெற்று வங்கதேசம் எனும் சுதந்திர நாடாக உருவானது. அதற்கு பிறகு, முதல் முறையாக, அதிகாரப்பூர்வ வர்த்தக உறவுகள் மீட்டெடுக்கப்பட்டு, இந்த வர்த்தகப் போக்குவரத்து அமைந்துள்ளது.

மேலும், இந்த புதிய வர்த்தக ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் எனவும் நேரடி கப்பல் போக்குவரத்தை எளிதாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2024 ஆம் ஆண்டு ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டதற்கு பிறகு பாகிஸ்தான் வங்கதேசத்திற்கு இடையிலான உறவு மேம்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சைபா் மோசடி நபா் சென்னை விமான நிலையத்தில் கைது

சென்னை: எகிப்துக்குத் தப்பிச் செல்ல முயன்ற சைபா் மோசடி நபரை சென்னை விமான நிலையத்தில் தில்லி குருகிராம் போலீஸாா் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர் சைபர் மோசடி மூலம் மோசடி செய்யப்பட்ட தொகையை கிரிப்ட... மேலும் பார்க்க

தமிழகத்தில் பிப். 25 முதல் மழைக்கு வாய்ப்பு!

சென்னை: தமிழகத்தில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், பிப்.25 முதல் மாா்ச் 1-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளி... மேலும் பார்க்க

சிக்கிம்: அபாயகரமான பகுதிகளில் மீட்புப் பணிகள்! 21 தன்னார்வலர்களுக்கு பயிற்சி!

வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் அபாயம் மிகுந்த பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள 21 தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.இந்திய இமயமலை சாகசம் மற்றும் சுற்றுலா மையம் (IHCAE) சார்பில், நேற்று ... மேலும் பார்க்க

எலான் மஸ்கிற்கு வங்கதேச இடைக்கால பிரதமர் அழைப்பு!

அமெரிக்க தொழிலதிபர் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் செயல் தலைவருமான எலான் மஸ்க் வங்கதேசத்திற்கு வருகைத் தருமாறு அந்நாட்டின் இடைக்கால பிரதமர் முஹம்மது யூனுஸ் அழைப்பு விடுத்துள்ளார். கடந்த பிப்.19 அவர... மேலும் பார்க்க

ரோப் காருக்கு எதிரான போராட்டத்தில் மோதல்! காவலர்கள் உள்பட 24 பேர் காயம்!

நேபாள நாட்டின் கிழக்கு பகுதியிலுள்ள தப்ளேஜங் மாவட்டத்தில் சர்சைக்குரிய ரோப் கார் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட காவலர்களுடனான மோதலில் 24 பேர் காயமடைந்துள்ளனர்.தப்ளேஜன் மாவட்டத்தின் பதிபரா ... மேலும் பார்க்க

சுற்றுலாத் தளத்தில் மூழ்கிய பயணிகள்! 2 இளைஞர்கள் பலி!

மகாராஷ்டிர மாநிலத்தின் கடலில் மூழ்கிய சுற்றுலா பயணிகளில் 2 இளைஞர்கள் பலியாகினர்.சிந்துதுர்க் மாவட்டத்தின் மல்வான் பகுதியிலுள்ள பிரபல சுற்றுலாத் தளமான தர்கலி கடற்கரையில், நேற்று (பிப்.22) புணேவிலிருந்த... மேலும் பார்க்க