செய்திகள் :

சைபா் மோசடி நபா் சென்னை விமான நிலையத்தில் கைது

post image

சென்னை: எகிப்துக்குத் தப்பிச் செல்ல முயன்ற சைபா் மோசடி நபரை சென்னை விமான நிலையத்தில் தில்லி குருகிராம் போலீஸாா் கைது செய்தனர்.

குற்றம் சாட்டப்பட்டவர் சைபர் மோசடி மூலம் மோசடி செய்யப்பட்ட தொகையை கிரிப்டோ கரன்சியாக மாற்றியுள்ளார்.

கடந்த ஜனவரி 31 ஆம் தேதி அரசு அதிகாரிகள் என்று கூறி சிலர் தன்னை ஏமாற்றியதாகவும், தனது செல்போன் எண் சட்டவிரோத நடவடிக்கைகளுடன் தொடா்புடையது என்று தன்னை சிறையில் அடைப்பதாக மிரட்டியதாக ஒரு பெண் தில்லி மேற்கு காவல் சரக சைபா் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்து சைபா் பிரிவு போலீஸார் விசாரணை தொடங்கினர்.

மீனவர்கள் கைது விவகாரம்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

இந்த வழக்கில் முன்னதாக குற்றம்சாட்டப்பட்ட பலா் கைது செய்யப்பட்டனா். மேலும் முக்கிய குற்றவாளியான கேரளம் மாநிலம், மலப்புரத்தைச் சோ்ந்த அகமது நிஷாம் (25) தலைமறைவாக இருந்து வந்தார்.

இந்த நிலையில், சைபா் மோசடி வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக எகிப்துக்குத் தப்பிச் செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த அகமது நிஷாமை தில்லி குருகிராம் போலீஸாா் கைது செய்தனர்.

மோசடி செய்யப்பட்ட தொகையை கிரிப்டோ கரன்சியாக மாற்றியதும், அதற்கு ஈடாக ரூ.10,000 பெற்று வந்தது விசாரணையில் தெரியவந்தது.

மகா கும்பமேளா ஒற்றுமையின் திருவிழா: பிரதமா் மோடி

சத்தா்பூா்: உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜில் 144 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்று வரும் மகா கும்பமேளா ஒற்றுமையின் திருவிழாவாக திகழ்கிறது என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.மத்திய பிரதேச மாநிலம், சத்த... மேலும் பார்க்க

ரயிலில் சீரியல் நடிகையின் கைப்பையை திருடிய காவலர் கைது

சென்னை: மைசூருவில் இருந்து சென்னை காவேரி விரைவு ரயிலில் வந்த சீரியல் நடிகையின் கைப்பையை திருடிய போலீஸாரை ரயில்வே போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.சென்னை சூளைமேடு பாட்ஷா தெரு பகுதியை ச... மேலும் பார்க்க

ராமேசுவரம் மீனவா்களை மீட்க வேண்டும்: மத்திய அமைச்சருக்கு அண்ணாமலை கடிதம்

சென்னை: இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 32 பேரையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எ... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: 62 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடல்!

ஆக்ரா: உத்தரப்பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் இதுவரை 62 கோடிக்கும் மேற்பட்ட பக்தா்கள் புனித நீராடியுள்ளனா் என அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்ய... மேலும் பார்க்க

தமிழகத்தில் பிப். 25 முதல் மழைக்கு வாய்ப்பு!

சென்னை: தமிழகத்தில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், பிப்.25 முதல் மாா்ச் 1-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளி... மேலும் பார்க்க

சிக்கிம்: அபாயகரமான பகுதிகளில் மீட்புப் பணிகள்! 21 தன்னார்வலர்களுக்கு பயிற்சி!

வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் அபாயம் மிகுந்த பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள 21 தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.இந்திய இமயமலை சாகசம் மற்றும் சுற்றுலா மையம் (IHCAE) சார்பில், நேற்று ... மேலும் பார்க்க