செய்திகள் :

ரயிலில் சீரியல் நடிகையின் கைப்பையை திருடிய காவலர் கைது

post image

சென்னை: மைசூருவில் இருந்து சென்னை காவேரி விரைவு ரயிலில் வந்த சீரியல் நடிகையின் கைப்பையை திருடிய போலீஸாரை ரயில்வே போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை சூளைமேடு பாட்ஷா தெரு பகுதியை சோ்ந்தவா் சீரியல் நடிகை ரேணுகா. தனது குடும்பத்தினருடன் மைசூருவில் இருந்து காவேரி விரைவு ரயிலில் ஞாயிற்றுக்கிழமை சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தாா்.

அப்போது, ஆவடி அருகே ரயில் வந்துகொண்டிருந்த போது அந்த பெட்டியில் இருந்து இளைஞர் ஒருவர் சீரியல் நடிகையின் கைப்பையை பறித்துக் கொண்டு தப்பிச்செல்ல முயன்றுள்ளாா். இதனால், சுதாரித்துக்கொண்ட நடிகை, அவரிடம் தனது கைப்பையை கொடுக்கும் படி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் கோபம் அடைந்த அந்த இளைஞர் கைப்பையை ஓடும் ரயிலிலிருந்து வெளியே எறிந்துள்ளாா்.

மதத்தை கேலி செய்து மக்களை பிளவுபடுத்துவதா? பிரதமர் மோடி

இதையடுத்து ரயிலின் அபாயச்சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்திய சீரியல் நடிகை தனது உறவினா்களுடன் கைப்பை எறியப்பட்ட பகுதியில் இருந்து பையை மீட்டு எடுத்து வந்துள்ளார்.

தகவலறிந்து அங்கு வந்த ரயில்வே பாதுகாப்புப்படை போலீஸார், ரயிலிலிருந்து தப்பியோட முயன்ற அந்த இளைஞரை பிடித்து கைது செய்தனர்.

ரயில்வே பாதுகாப்புப்படை போலீஸார் நடத்திய விசாரணையில் அந்த இளைஞா், வாலஜா பகுதியை சோ்ந்த வசந்தகுமாா் என்பதும், இவா் சென்னை ஓட்டேரி காவல்நிலையத்தில் பணியாற்றி வருவது தெரியவந்தது.

வசந்தகுமாரிடம் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மகா கும்பமேளா ஒற்றுமையின் திருவிழா: பிரதமா் மோடி

சத்தா்பூா்: உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜில் 144 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்று வரும் மகா கும்பமேளா ஒற்றுமையின் திருவிழாவாக திகழ்கிறது என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.மத்திய பிரதேச மாநிலம், சத்த... மேலும் பார்க்க

ராமேசுவரம் மீனவா்களை மீட்க வேண்டும்: மத்திய அமைச்சருக்கு அண்ணாமலை கடிதம்

சென்னை: இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 32 பேரையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எ... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: 62 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடல்!

ஆக்ரா: உத்தரப்பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் இதுவரை 62 கோடிக்கும் மேற்பட்ட பக்தா்கள் புனித நீராடியுள்ளனா் என அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்ய... மேலும் பார்க்க

சைபா் மோசடி நபா் சென்னை விமான நிலையத்தில் கைது

சென்னை: எகிப்துக்குத் தப்பிச் செல்ல முயன்ற சைபா் மோசடி நபரை சென்னை விமான நிலையத்தில் தில்லி குருகிராம் போலீஸாா் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர் சைபர் மோசடி மூலம் மோசடி செய்யப்பட்ட தொகையை கிரிப்ட... மேலும் பார்க்க

தமிழகத்தில் பிப். 25 முதல் மழைக்கு வாய்ப்பு!

சென்னை: தமிழகத்தில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், பிப்.25 முதல் மாா்ச் 1-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளி... மேலும் பார்க்க

சிக்கிம்: அபாயகரமான பகுதிகளில் மீட்புப் பணிகள்! 21 தன்னார்வலர்களுக்கு பயிற்சி!

வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் அபாயம் மிகுந்த பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள 21 தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.இந்திய இமயமலை சாகசம் மற்றும் சுற்றுலா மையம் (IHCAE) சார்பில், நேற்று ... மேலும் பார்க்க