செய்திகள் :

சிக்கிம்: அபாயகரமான பகுதிகளில் மீட்புப் பணிகள்! 21 தன்னார்வலர்களுக்கு பயிற்சி!

post image

வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் அபாயம் மிகுந்த பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள 21 தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய இமயமலை சாகசம் மற்றும் சுற்றுலா மையம் (IHCAE) சார்பில், நேற்று (பிப்.22) தன்னார்வலர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. இவர்களுடன் மங்கன் பகுதியைச் சேர்ந்த இருசக்கர வாகன குழு ஒன்றுக்கும் இந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

இதுபோன்ற பயிற்சிகளின் மூலம் அப்பகுதி மக்கள் அவசர காலங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது கற்றுகொடுக்கப்படுகின்றது. மேலும், அந்த மையத்தின் பயிற்சியாளர்களின் மூலம் அவசரகால மற்றும் பேரிடர் சூழ்நிலைகளில் பல்வேறு கருவிகளையும் முறைகளையும் பயன்படுத்தி, பேரிடரில் சிக்கியுள்ளோரை கண்டறிந்து அவர்களுக்கு உதவுவதற்கான முக்கியமான நுட்பங்கள் தன்னார்வலர்களுக்கு கற்றுக்கொடுக்கப்படுகின்றது.

இதையும் படிக்க: சுற்றுலாத் தளத்தில் மூழ்கிய பயணிகள்! 2 இளைஞர்கள் பலி!

இதுகுறித்து அந்த பயிற்சி மையத்தின் தலைமை இயக்குநர் காஸி ஷெர்பா கூறியதாவது, அபயாகரமான பகுதிகளில் சிக்கியுள்ளோரை மீட்க தன்னார்வலர்கள் விரைந்து செயல்படும் வகையில் இந்த பயிற்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த திட்டத்தின் களப்பயிற்சியானது நேற்று (பிப்.22) 10,000 அடி உயரத்தில் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள் மீட்புக் குழுவாக அங்கீகரிக்கப்பட்டு மாநில அரசின் சார்பில் அவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் மீட்புப் பொருள்கள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தன்னார்வலர்களுக்கு 10 சதவீத மருத்துவ காப்பீட்டு சலுகைகள் அடங்கிய ரூ.15 லட்சம் காப்பீட்டுத் தொகுப்பு வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ரயிலில் சீரியல் நடிகையின் கைப்பையை திருடிய காவலர் கைது

சென்னை: மைசூருவில் இருந்து சென்னை காவேரி விரைவு ரயிலில் வந்த சீரியல் நடிகையின் கைப்பையை திருடிய போலீஸாரை ரயில்வே போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.சென்னை சூளைமேடு பாட்ஷா தெரு பகுதியை ச... மேலும் பார்க்க

ராமேசுவரம் மீனவா்களை மீட்க வேண்டும்: மத்திய அமைச்சருக்கு அண்ணாமலை கடிதம்

சென்னை: இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 32 பேரையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எ... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: 62 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடல்!

ஆக்ரா: உத்தரப்பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் இதுவரை 62 கோடிக்கும் மேற்பட்ட பக்தா்கள் புனித நீராடியுள்ளனா் என அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்ய... மேலும் பார்க்க

சைபா் மோசடி நபா் சென்னை விமான நிலையத்தில் கைது

சென்னை: எகிப்துக்குத் தப்பிச் செல்ல முயன்ற சைபா் மோசடி நபரை சென்னை விமான நிலையத்தில் தில்லி குருகிராம் போலீஸாா் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர் சைபர் மோசடி மூலம் மோசடி செய்யப்பட்ட தொகையை கிரிப்ட... மேலும் பார்க்க

தமிழகத்தில் பிப். 25 முதல் மழைக்கு வாய்ப்பு!

சென்னை: தமிழகத்தில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், பிப்.25 முதல் மாா்ச் 1-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளி... மேலும் பார்க்க

எலான் மஸ்கிற்கு வங்கதேச இடைக்கால பிரதமர் அழைப்பு!

அமெரிக்க தொழிலதிபர் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் செயல் தலைவருமான எலான் மஸ்க் வங்கதேசத்திற்கு வருகைத் தருமாறு அந்நாட்டின் இடைக்கால பிரதமர் முஹம்மது யூனுஸ் அழைப்பு விடுத்துள்ளார். கடந்த பிப்.19 அவர... மேலும் பார்க்க