செய்திகள் :

கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்த பஞ்சாப் நேஷனல் வங்கி!

post image

புதுதில்லி: ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைத்ததைத் தொடர்ந்து, பொதுத் துறையைச் சேர்ந்த பஞ்சாப் நேஷனல் வங்கி வியாழக்கிழமை (பிப்ரவரி 20) வீடு மற்றும் வாகன கடன்கள் உள்ளிட்ட சில்லறை கடன்களுக்கான வட்டி விகிதங்களை 25 அடிப்படை புள்ளிகள் வரை குறைத்துள்ளது.

திருத்தப்பட்ட வட்டி விகிதங்களான வீட்டுக் கடன்கள், கார் கடன்கள், கல்வி மற்றும் தனிநபர் கடன்கள் உள்ளிட்ட வாடிக்கையாளர்களுக்கு இது பொருந்தும் என்று பஞ்சாப் நேஷனல் வங்கி தெரிவித்துள்ளது.

ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு, ரிசர்வ் வங்கி பிப்ரவரி 7 ஆம் தேதி ரிசர்வ் வங்கியிடமிருந்து வங்கிகள் கடன் வாங்கும் ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்து 6.25% ஆக உள்ளது என்றது.

வட்டி விகிதக் குறைப்பைத் தொடர்ந்து, பஞ்சாப் நேஷனல் வங்கி பல்வேறு திட்டங்களின் கீழ் வீட்டுக் கடன் விகிதத்தை 8.15 சதவிகிதமாக திருத்தியுள்ளது. மார்ச் 31, 2025 வரை முன்கூட்டிய செயலாக்கக் கட்டணங்கள் மற்றும் ஆவணக் கட்டணங்களை முழுமையாக தள்ளுபடி செய்வதன் மூலம் வாடிக்கையாளர்கள் இதன் மூலம் பயனடையலாம் என்றது.

வீட்டுக் கடன் திட்டத்தில் ஆண்டுக்கு 8.15 சதவிகிதம் முதல் வட்டி தொடங்கி ஒரு லட்சத்திற்கு ரூ.744 இஎம்ஐ வசூலிக்கப்படும். மேலும் வாகனக் கடனைப் பொறுத்தவரை, புதிய மற்றும் பயன்படுத்திய கார்களுக்கு, வட்டி விகிதம் ஆண்டுக்கு 8.50 சதவிகிதத்திலிருந்து தொடங்கும் நிலையில், இதற்கு ஒரு லட்சத்திற்கு ஆன இஎம்ஐ ரூ.1,240 ஆக வசூலிக்கப்படும் என்றது.

பஞ்சாப் நேஷனல் வங்கி ஆனது ஆண்டுக்கு 8.50% தொடங்கி ஒரு லட்சத்திற்கு ரூ.1,240 ஆரம்ப இஎம்ஐ விகிதத்தில் 0.05 சதவிகிதம் சலுகையை வழங்கும். மேலும் புதிய கட்டணங்கள் பிப்ரவரி 10 முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்துள்ளது.

இந்த மாத தொடக்கத்தில், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ரிசர்வ் வங்கியின் கொள்கை விகித குறைப்புக்கு ஏற்ப வீடு உள்ளிட்ட சில்லறை கடன்களுக்கான வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வைரம் மற்றும் தங்க துறை 8.5% பங்களிக்கும்: அவினாஷ் குப்தா

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வைரம் மற்றும் தங்க துறை 8.5% பங்களிக்கும்: அவினாஷ் குப்தா

புதுதில்லி : இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வைரம் மற்றும் தங்கம் ஏற்கனவே 7.5% பங்களிப்பை வழங்கி வரும் நிலையில், தங்கத்தின் விலை அதிகரித்து வருவதால், இது 8.5% எட்டும் என்று எதிர்பார்க்கப்படுக... மேலும் பார்க்க

ரூ.1.90 லட்சம் விலை குறைந்த இத்தாலிய பைக்

இத்தாலிய நிறுவனமான மோட்டோ மொரினியின் சேயேமெஸோ பைக்கின் விலை இந்தியச் சந்தையில் ரூ.1.90 லட்சம் குறைக்கப்பட்டுள்ளது.இது குறித்து சந்தை வட்டாரங்கள் தெரிவித்ததாவது:இந்தியாவில் விற்பனையாகும் மோட்டோ மோரினோ... மேலும் பார்க்க

2024 -ஆம் ஆண்டு தரவுத் தொகுப்புகள் பதிவேடுகள்: தேசிய புள்ளியியல் துறை வெளியிட்டது

நமது சிறப்பு நிருபா் நாட்டின் பல்வேறு தகவல்களை அளிக்கும் 2024 - தரவுத்தொகுப்புகள், பதிவேடுகளின் தொகுப்பின் புதிய பதிப்பை மத்திய புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ளது. இந்த தர... மேலும் பார்க்க

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,572 கோடி டாலராக சரிவு

கடந்த 14-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 63,572.1 கோடி டாலராகக் குறைந்துள்ளது.இது குறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:பிப். 14... மேலும் பார்க்க

மார்ச் 28 முதல் நிஃப்டியில் நுழையும் ஜியோ பைனான்சியல், சோமேட்டோ!

புதுதில்லி: ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் மற்றும் ஜொமாட்டோ லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் வரும் மார்ச் 28 முதல் தேசிய பங்குச் சந்தையின் பெஞ்ச்மார்க் நிஃப்டி 50 குறியீட்டில் நுழைய உள்ளது.பாரத் பெட்ரோல... மேலும் பார்க்க

இந்திய ஜவுளி ஏற்றுமதி 14% அதிகரிப்பு

இந்தியாவின் ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதி கடந்த ஜனவரி மாதத்தில் 13.88 சதவீதம் அதிகரித்துள்ளது.இது குறித்து மத்திய ஜவுளித் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடந்த ஜனவரி மா... மேலும் பார்க்க