செய்திகள் :

மகா கும்பமேளா: 62 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடல்!

post image

ஆக்ரா: உத்தரப்பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் இதுவரை 62 கோடிக்கும் மேற்பட்ட பக்தா்கள் புனித நீராடியுள்ளனா் என அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

ஆக்ராவில் உள்ள யூனிகார்ன் நிறுவனங்கள் மாநாட்டில் விருந்தினர்களை வரவேற்ற முதல்வர் யோகி, "இந்த நேரத்தில், மகா கும்பமேளா மக்களை ஈர்க்கும் ஒரு இடமாக இருப்பதால், இதை ஸ்டார்ட்அப் உலகின் யூனிகார்ன் மகா கும்பமேளா என்று நான் அழைக்க முடியும்" என்றார்.

மேலும், ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் இதுபோன்று மக்கள் ஒன்றுகூடுவது ஒரு "அரிய" நிகழ்வு என்று யோகி தெரிவித்தார்.

மதத்தை கேலி செய்து மக்களை பிளவுபடுத்துவதா? பிரதமர் மோடி

"இதுவரை, 62 கோடிக்கும் மேற்பட்ட பக்தா்கள் புனித நீராடியுள்ளனா். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் இவ்வளவு பெரிய மக்கள் கூட்டம் இந்த நூற்றாண்டின் அரிய நிகழ்வுகளில் ஒன்றாகும். நாட்டின் இந்த பாரம்பரியம் பண்டைய காலங்களிலிருந்து நாட்டின் நான்கு முக்கியமான இடங்களில் இந்த நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதற்கான ஏற்பாட்டிற்கு வழிவகுத்துள்ளது," என்று யோகி கூறினார்.

இதற்கிடையில், மகா கும்பமேளாவை நிர்வகிக்கும் அதிகாரிகள், மகா சிவராத்திரி நாளான பிப்ரவரி 26 ஆம் தேதி மகா கும்ப புனித நீராடல் நடைபெறுவதை முன்னிட்டு, பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், பல்வேறு கட்ட கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அயோத்தி தாம் ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என துணை காவல் கண்காணிப்பாளர் யஷ்வந்த் சிங் தெரிவித்தார்.

மகா சிவராத்திரி நாளான பிப்ரவரி 26 ஆம் தேதி வரை மகா கும்பமேளா நடைபெறவுள்ளது.

மகா கும்பமேளா ஒற்றுமையின் திருவிழா: பிரதமா் மோடி

சத்தா்பூா்: உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜில் 144 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்று வரும் மகா கும்பமேளா ஒற்றுமையின் திருவிழாவாக திகழ்கிறது என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.மத்திய பிரதேச மாநிலம், சத்த... மேலும் பார்க்க

ரயிலில் சீரியல் நடிகையின் கைப்பையை திருடிய காவலர் கைது

சென்னை: மைசூருவில் இருந்து சென்னை காவேரி விரைவு ரயிலில் வந்த சீரியல் நடிகையின் கைப்பையை திருடிய போலீஸாரை ரயில்வே போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.சென்னை சூளைமேடு பாட்ஷா தெரு பகுதியை ச... மேலும் பார்க்க

ராமேசுவரம் மீனவா்களை மீட்க வேண்டும்: மத்திய அமைச்சருக்கு அண்ணாமலை கடிதம்

சென்னை: இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 32 பேரையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எ... மேலும் பார்க்க

சைபா் மோசடி நபா் சென்னை விமான நிலையத்தில் கைது

சென்னை: எகிப்துக்குத் தப்பிச் செல்ல முயன்ற சைபா் மோசடி நபரை சென்னை விமான நிலையத்தில் தில்லி குருகிராம் போலீஸாா் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர் சைபர் மோசடி மூலம் மோசடி செய்யப்பட்ட தொகையை கிரிப்ட... மேலும் பார்க்க

தமிழகத்தில் பிப். 25 முதல் மழைக்கு வாய்ப்பு!

சென்னை: தமிழகத்தில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், பிப்.25 முதல் மாா்ச் 1-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளி... மேலும் பார்க்க

சிக்கிம்: அபாயகரமான பகுதிகளில் மீட்புப் பணிகள்! 21 தன்னார்வலர்களுக்கு பயிற்சி!

வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் அபாயம் மிகுந்த பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள 21 தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.இந்திய இமயமலை சாகசம் மற்றும் சுற்றுலா மையம் (IHCAE) சார்பில், நேற்று ... மேலும் பார்க்க